இந்த பாட்டு வரிகள் பிரமாதமாக கிராமத்துக்கு அந்த மொழிக்கு எழுதி இருப்பார்கள் ! தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி - கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி - ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே - சிறுதண்ணி தோளோடும் மாரோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே - ஒத்தை மழை துளி பார்த்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே ! பூத்தும் அரும்பு பூக்கலையே !! தொட்ட கடன் இன்னும் தீக்கலையே ! -- மச்ச கன்னி ஒன்ன காங்கலையே ஒத்த கண்ணு மட்டும் தூங்கலையே பாட்டு சத்தம் கேக்கலையே அந்தி பகல் ஏதும் பாக்கலையே மஞ்ச கிழங்கே ஒன்ன பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டேன் நெஞ்சு குழிகுள்ள வேர்த்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன் தொழுவோடு சேராத பொலிகாள கூட கொடைய பாத்து மெரளும் கொடகண்டு மெரளாத கோடாளி காள தாவணி பாத்து மெரளும் பாசி மணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீய வச்சு போனவளே தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி வாத்து முட்டைய போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி கையில் கைய வச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வச்சு கலந்துக்கடி நெஞ்சில் நெஞ்ச வச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி !! - இந்த பாட்டு வரிகள் தாஜ் மஹால் படத்தில் இருக்கும் ஈச்சி எழுமிச்சி பாட்டில் இருந்து எடுத்தது, ஒரு பாட்டு வரிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை மீறி எழுதப்பட்ட ஒரு கிராமத்து பாடல்களின் அதிசயம் இந்த படம் !