நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
ஞாயிறு, 31 மே, 2026
LIFE TALKS - இங்கே எத்தகைய விஷயங்களையும் வெல்ல வேண்டும் !
LOVE TALKS - காதல் கதைகள் பேசலாம் #2
GENERAL TALKS - தனித்த வாழ்க்கை முறைகளுக்கு அறிவியல் விளக்கம் !
வியாழன், 28 மே, 2026
GENERAL TALKS - JUNE 2026 - மோட்டிவேஷன் சரியாக பயன்பட வேண்டும் !
மோட்டிவேஷன் மட்டுமே நம்பிக்கொண்டு வாழ்க்கையில் குதித்துவிட்டால் நாளைல இருந்து விடியற்காலை 4 மணிக்கு எந்திரிக்கிறோம், ஓடுறோம், ஜிம்முக்கு போறோம், டயட் இருக்கோம், புதுசா ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு உலகத்தையே ஜெயிக்கிறோம்!" என்று மூளைக்குள் ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் பிரசென்டேஷனே (PPT) ஓடத் தொடங்கும்.
பகலில் ஒரு சின்ன வரிக் கதை எழுதக்கூட யோசிக்கும் மூளை, அந்த நள்ளிரவு அமைதியில் ஆஸ்கார் விருது வாங்கும் அளவுக்கு பிரம்மாண்டமான கதைக் கருக்களையும், தத்துவங்களையும் அடுக்கிக் கொண்டே போகும். நாம்தான் அடுத்த பாரதியார், அடுத்த ஸ்பீல்பெர்க் நாம்தான் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றிவிடும். இந்த விஷயம் குழப்பமானது.
இந்த ஒட்டுமொத்தப் பிரம்மாண்டமான திட்டத்திற்கும் ஒரு மிகக் குறுகிய 'எக்ஸ்பைரி டேட்' (Expiry Date) இருக்கிறது. அதுதான் காலை 6 மணி அலார சத்தம்! நள்ளிரவில் பிரபஞ்சத்தையே கறார் விலைக்கு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசின அதே மனது அடுத்து என்ன செய்யும் தெரியுமா ?
காலையில் அலாரம் அடிக்கும்போது, "உலகமாவது... உருப்படறதாவது... இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் தூங்குவோம்" என்று 'ஸ்னூஸ்' (Snooze) பட்டனை அமுக்கிவிட்டு, மொத்த மோட்டிவேஷனையும் மூட்டை கட்டி பரணில் போட்டுவிடும். நேற்று இரவு விழித்திருந்த அதே ஆளா இது என்று நமக்கே சந்தேகம் வந்துவிடும்
இப்படி மோட்டிவேஷன் என்பதையே நம்மால் மிகவும் சிக்கலில் வைத்து செய்துகொண்டு இருந்தால் எப்படி நம்மால் நம்மை மேலே கொண்டு வரமுடியும் என்றால் அதற்கு நம்முடைய லைப் ஸ்டைல் மொத்தமாக மாறவேண்டும் மக்களே ! விஷயம் அந்த அளவுக்கு சிக்கலானது !
நள்ளிரவில் நம்மால் உடனடியாக எந்தச் செயலிலும் இறங்க முடியாது. அந்த நேரத்தில் போய் ஜிம்முக்கு போகவோ, உடனே வேலையைத் தொடங்கவோ சாத்தியமில்லை. அதனால், உடனடியாகச் செய்ய வேண்டிய 'செயல்பாட்டு ரிஸ்க்' (Risk of execution) இல்லாததால், மனது தன் இஷ்டத்திற்குப் பகற்கனவு கண்டு மகிழ்கிறது. ஆன்லைன் ஷாப்பிங்கில் கார்ட்டில் (Cart) லட்சக் கணக்கான பொருட்களைச் சேர்த்துவிட்டு, 'பை' (Buy) பண்ணாமல் வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு தற்காலிக குஷிதான் இதுவும்
GENERAL TALKS - நாளை இந்த வேளை பார்த்து ஓடிவருமா வெற்றி ?
இந்த வாழ்க்கையில் வலியையும் வறுமையையும் தன் வாழ்வில் நேரில் சந்தித்த ஒருவரால்தான், அடுத்த மனிதனின் கண்ணீரில் இருக்கும் வேதனையைத் தன் இதயப்பூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும்.
வாழ்க்கை என்பது வெறும் சுகங்களின் தொகுப்பல்ல - சொல்லப்போனால் அது சோதனைகளைக் கடந்து நாம் அடையும் முதிர்ச்சியிலும், பிறரின் துயரம் துடைக்கும் பேரன்பிலும்தான் தன் முழு அர்த்தத்தையும் கண்டடைகிறது.
பனிக்காலத்துக் கரடிகள் குகைக்குள் ஒளிந்து கொள்வதைப் போல, தோல்வி அடைந்த அடுத்த கணமே நம் மனது உலகத் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு ஒரு நீண்ட 'ஹைபர்னேஷன்' தூக்கத்திற்குள் சென்றுவிடுகிறது. "மறு உத்தரவு வரும் வரை சிஸ்டம் இயங்காது" என்று மூளைக்கு ஒரு மெயில் அனுப்பிவிட்டு, போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துவிடுகிறது.
யாராவது வந்து "அடுத்த பிளான் என்ன? அடுத்து என்ன பண்ணப் போற?" என்று கேட்டால், உள்ளிருந்து "தவறான எண், தயவுசெய்து பிறகு தொடர்பு கொள்ளவும்" என்கிற அளவிலான மௌனம் மட்டும்தான் பதிலாக வரும். ரீல்ஸ் பார்ப்பது, வெற்றுச் சுவரை வெறிப்பது என மனது முழு ஓய்வில் இருக்கும்.
இந்தத் தூக்கத்தை யாரும் சோம்பேறித்தனம் என்று தப்புக் கணக்கு போட்டுவிடக் கூடாது. அது மனதின் ஒரு தற்காப்பு உத்தி (Defense mechanism). அடிபட்ட சிங்கம் குகையில் பதுங்கித் தன் காயங்களை நாவால் ஆற்றுவதைப் போல (கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும் இதுதான் உண்மை!), மனது தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் ஒரு 'ரீசார்ஜ்' காலம் இது.
இந்த ரீசார்ஜ் நமக்கு தேவைப்படுகிறது மக்களே , நம்முடைய உலகம் மிகவும் பெரியது, நமது சக்திகளை குறைத்துக்கொண்டு சட்டையை மடித்து சண்டைக்க வருவது என்பது செம்ம டேஞ்சர் என்றுதான் நம்முடைய மனது நினைக்கிறது !
GENERAL TALKS - கடினமான காலங்களில் நமது வெற்றியை பெறுதல் !
உளவியல் ரீதியான பக்குவம், ஒரு மனிதன் மதிப்புகளைப் பார்க்கும் பார்வையை முற்றிலும் மாற்றியமைக்கிறது; அவனது சிந்தனைத் தளத்தை மேலோட்டமான ஆசைகளில் இருந்து அடிப்படை உண்மைகளை நோக்கி நகர்த்துகிறது.
நீடித்த போராட்டங்கள் என்னும் உலைக்களத்தில் (Crucible), தேவையற்ற அற்பக் கவலைகள் யாவும் ஆவியாகிப் போகின்றன. அதற்குப் பதிலாக, மிகத் துல்லியமான ஒரு தெளிவு அங்கே மிச்சமிருக்கிறது. அந்தத் தெளிவில் ஒரு கண நேரக் கருணை, ஒரு சிறிய நிம்மதி, அல்லது வார்த்தைகளற்ற ஒரு மௌனப் புரிதல் போன்ற மிகச் சிறிய விஷயங்கள் கூடப் பிரம்மாண்டமான மதிப்பைத் தாங்கி நிற்கின்றன.
இருண்ட, கடினமான காலங்களைக் கடந்து வந்தவர்கள் ஒரு அரிய உணர்ச்சிப்பூர்வமான புத்திசாலித்தனத்தையும் (Emotional intelligence), உயிர்வாழ்வதற்கான ஒரு புதிய மொழியையும் வளர்த்துக் கொள்கிறார்கள். இது மனிதர்களின் செயல்பாடுகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மைகளைப் படிக்கவும், இந்தச் சமூகத்தின் போலித்தனங்களை ஊடுருவிப் பார்க்கவும் அவர்களுக்கு உதவுகிறது.
அவர்கள் ஒரு வாழ்க்கையின் மதிப்பை அதன் உச்சக்கட்ட வெற்றிகளை வைத்து அளவிடுவதில்லை; மாறாக, வீழ்ச்சியின் பள்ளத்தாக்குகளைத் தாங்கிக் கொள்வதற்குக் தேவைப்படும் அந்த அமைதியான, அன்றாட சுயமரியாதையை வைத்தே அளவிடுகிறார்கள்.
இதன் மூலம், விலைக்கு வாங்கவோ, பரம்பரையாகப் பெறவோ அல்லது போலியாக நடிக்கவோ முடியாத ஒரு ஆழமான குணாதிசயத்தை அவர்கள் பெறுகிறார்கள்.
இறுதியாக, ஒரு கடினமான வாழ்க்கை மனிதனுக்குள் ஒரு அசைக்க முடியாத அகக் கோட்டையைக் கட்டியெழுப்புகிறது. அதை எந்த ஒரு வெளிப்புயலாலும் அவ்வளவு எளிதில் தகர்த்துவிட முடியாது; அது அவர்களின் பலவீனங்களையே அவர்களுக்குரிய கவசமாக மாற்றிவிடுகிறது.
ஒரு மனிதன் எதார்த்தத்தின் மிக மோசமான பக்கங்களை எதிர்கொண்டு உயிர் பிழைக்கும் போது, அவனுக்கு அறியப்படாத எதிர்காலத்தைப் பற்றிய பயம் இல்லாது போகிறது. ஏனெனில், அவன் ஏற்கனவே தன் வாழ்க்கையின் ஆகச்சிறந்த வீழ்ச்சியின் (Rock bottom) எல்லைகளை வரைபடமாக்கி, அங்கிருந்து எப்படி மேலே ஏறி வர வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டான்.
இந்த மிகக் கடினமான உழைப்பால் பெற்ற ஞானம், அவர்களை விதியின் கைகளில் அகப்பட்ட வெறும் பலிகடாக்களாக இருக்க விடாமல், தங்களின் மீண்டெழும் திறனைத் தாங்களே எழுதும் சுயசரிதையாக மாற்றுகிறது.
அவர்கள் உடம்பில் இருக்கும் தனிப்பட்ட வடுக்கள், இன்னும் இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு வழிகாட்டும் ஒரு திசைகாட்டியாக மாறுகின்றன. ஒரு வலியற்ற பயணத்தை மறுப்பதன் மூலம், வாழ்க்கை அவர்களுக்கு ஒரு உன்னதமான பரிசை வழங்குகிறது:
எல்லாமே சரிந்து விழும் போதும் நிமிர்ந்து நிற்கும் அசைக்க முடியாத வலிமை, மற்றும் துயரத்தில் இருக்கும் மற்றொரு மனிதனைப் பார்த்து அவனது வலியைத் தன் இதயப்பூர்வமாக உணர்ந்துகொள்ளும் ஒரு அரிய, அழகான பேரன்பு
GENERAL TALKS - இந்த வாழ்க்கை நமக்கு நிறைய விஷயங்கள் சொல்கிறது !
கடினமான விஷயங்களை செய்ய வேண்டும் மக்களே ! எந்த ஒரு வலியும் இல்லாமல், மென்மையாகக் வருடிக் கொடுக்கும் காற்றால் ஒரு பாறையைச் சிலையாக மாற்ற முடியாது.
உளியின் கடுமையான அடிகளைத் தாங்கும் பாறைதான் ஒருநாள் கோவிலில் சிலையாக நிமிர்ந்து நிற்கிறது, நிரந்தரமான வரலாற்று கல்வெட்டுக்களை நாம் பார்க்கிறோம்,
வாழ்க்கை நமக்கு ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறது மக்களே ! வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் அடிகள் நம்மை சிதைப்பதற்காக அல்ல, நம்மை ஒரு முழுமையான மனிதனாகச் செதுக்குவதற்காகவே, இன்னும் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் நாம் பார்த்துக்கொள்ளலாம்,
கடின உழைப்பாலும், வலிகளாலும் ஒரு மனிதன் பக்குவப்படும் போது அவனது பேச்சிலும் எழுத்திலும் ஒரு தனித்துவம் இருக்கும், கவனமாக இருக்க வேண்டும், ஒரு சின்ன அளவுக்கு தவறுகளை நடக்க அனுமதித்தால் கூட பின்னாட்களில் பிரச்சனைகள் அதிகமாகிவிடும்
வாழ்க்கை எந்தவித உராய்வும் (முரண்பாடுகளும்) இன்றி மிக எளிதாக நகரும் போது, அது ஒரு பலவீனமான, மேலோட்டமான வாழ்வையே உருவாக்குகிறது. அங்கே நன்றியுணர்வு, சகிப்புத்தன்மை, பிறர்நிலை உணர்தல் (Empathy) போன்ற நற்பண்புகள் வெறும் அகராதி வார்த்தைகளாகவே நிற்குமே தவிர, அவை வாழ்ந்து உணர்ந்த எதார்த்தங்களாக மாறுவதில்லை.
தடைகளற்ற ஒரு சுலபமான பாதை, எல்லாமே எப்போதும் சீராகவே இருக்கும் என்ற ஒரு தற்காலிக மாயையை உருவாக்குகிறது. இது மனித வாழ்வின் அடித்தளத்திலிருக்கும் வாழ்வாதாரப் போராட்டங்களை ஒருவருக்குப் புரியாமல் செய்து, மிகச் சிறிய ஒரு அலைக்கழிப்பைக் கூடத் தாங்க முடியாத அளவுக்கு அவரைப் பலவீனமாக்கிவிடுகிறது.
ஆனால், சோதனைகள் வந்து இந்த வசதியான, போலியான அடுக்குகளைத் தீவிரமாக உதிர்க்கும் போதுதான், வாழ்க்கையின் உண்மையான கட்டமைப்பு என்னவென்பது கண்ணுக்குப் புலப்படுகிறது.
திடீரென வரும் கஷ்டங்கள் என்பவை பிரபஞ்சம் நமக்குத் தரும் ஏதோ ஒரு கொடூரமான தண்டனை அல்ல, மாறாக அவை நம் அக விழிப்புணர்விற்கான ஒரு உந்துதல். அது ஒரு மனிதனைத் தன் எல்லைகளைத் தானே எதிர்கொள்ளக் கட்டாயப்படுத்துகிறது.
அவனது அப்பாவியான உலகப் பார்வையை உடனடியாக உடைத்தெறிந்துவிட்டு, இந்த உலகம் உண்மையில் எப்படி இயங்குகிறது என்ற உறுதியான, அசைக்க முடியாத எதார்த்தப் புரிதலை அங்கே விதைக்கிறது
LIFE TALKS - நமது ஆழ்மன சிந்தனைகளின் சக்தி ! #3
நவீன மருத்துவம் மன அழுத்தத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளை (psychosomatic illness) விரிவாகப் ஆவணப்படுத்தியிருந்தாலும், 19-ஆம் நூற்றாண்ட...
-
EN-2026/03 The 2010 film Prince of Persia: The Sands of Time follows the journey of Dastan, an orphan in the Persian Empire who is adopt...
-
The 2012 film The Avengers begins with the asgardian god Loki striking a bargain with an alien force known as the Chitauri. In exchange for ...