புதன், 29 மே, 2024

GENERAL TALKS - மெட்ரிக் டன் கணக்கில் பொய்களை சொல்லுவது எப்படி ?



பொதுவாகவே காதல் என்று வந்துவிட்டால் பொய்கள் கட்டாயமாக இருக்கிறது. உண்மையான காதல் என்பது உலகத்தில் மிக மிக கொஞ்சமாகத்தான் இருக்கும் ! சராசரி காதல் என்றால் கன்டெய்னர் கன்டெய்னராக பொய்களை சொன்னால்தான் காதல் நிலைக்கும் என்பது உலக நியதி !  ஒரு மன்னருக்கு பறவைகள் மற்றும் மிருகங்கள் பேசும் மொழியும் புரியும். ஒருமுறை அரண்மனையில் உட்கார்ந்து கொண்டு வெளியே பார்த்தார். இரு புறாக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஆண் புறா, பெண் புறாவிடம் கோபமாக, ”என்னை என்னவென்று நினைத்தாய்? நான் மனம் வைத்தால் இந்த மன்னரின் அரண்மனையையே இடித்து நிர்மூலமாக்கி விடுவேன்!“ என்று கூறியது. இதனைக் கேட்ட மன்னர், அந்த ஆண் புறாவைத் தன் அருகில் அழைத்தார். அருகில் வந்த புறாவிடம், “என்ன புறாவே. இந்த அரண்மனையை இடித்து விடுகிறேன் என்றாயே. எப்படி உன்னால் முடியும்?“ என்று கேட்டார். அதற்கு அந்த ஆண்புறா, ”மன்னரே. என்னால் எப்படி முடியும்? ஏதோ என் மனைவியைத் திருப்தி செய்ய கூறினேன். அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்“ என்று கூறிவிட்டு தன் மனைவியிடம் சென்றது. “மன்னர் கூப்பிட்டாரே. எதற்குக் கூப்பிட்டார்?“ என்று பெண்புறா கேட்டது. “நான் அரண்மனையைத் தகர்த்து விடுவேன் என்று உன்னிடம் சொன்னதை மன்னர் கேட்டு பயந்து விட்டார். எனவே தான் என்னைக் கூப்பிட்டு அப்படி யெல்லாம் செய்தவிடாதே என்று என்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்“என்றதாம் ஆண்புறா. காதலிக்கும் பறவைகள் என்றாலும் பொய்களும் கதைகளும் இல்லாமல் வாழ்க்கையில் மரியாதையை வாங்கவே முடிவது இல்லையே ? கம்மிட்டட் மக்கள் ரொம்பவே பாவம் ! 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மீண்டும் தேர்தல் வந்தால் விஜய் 200+ தொகுதிகள் அள்ளிவிடுவார் என பல பதிவுகள் பார்க்க முடிகிறது. சில கருத்துகள் -

1. தேர்தல் உடனே வராது. குறைந்தது 6 மாதங்கள் ஆகும். அதற்குள் இப்போது உள்ள மக்கள் மனநிலை பெருமளவுக்கு மாறலாம்.

2. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் விஜய்தான் திமுகவை கடுமையாக எதிர்த்தும், அதிமுகவை "மற்றும் பலர்" என்றும் விமர்சித்துக் கொண்டிருந்தார். திமுகவோ அதிமுகவோ பெரிதாக விஜய்யை விமர்சிக்கவில்லை.

ஆனால், அடுத்த தேர்தலில் விஜய் மீது அக்குவேறு ஆணிவேறாக எதிர் விமர்சனங்கள் வைக்கப்படும். இந்த முறை போல் எதிர்வாதம் இல்லாத பணக்காரர் விஜய்க்கு இருக்காது. மக்களும் ஒருதலைப்பட்சமாக சிந்திக்கவேண்டிய அவசியம் இருக்காது.

3. இந்த தேர்தலில் தவெக வேட்பாளர்கள் குறித்தும் அந்தந்த தொகுதியின் திமுக, அதிமுக வேட்பாளர்கள் எந்த விமர்சனமும் வைக்கவில்லை.

அடுத்த முறை தவெக வேட்பாளர் தகுதி, பின்புலம் என பலவற்றை எடுத்து பேசுவார்கள். அதனால் "விஜய் முகம், விசில் சின்னம்" என்று மட்டும் வேட்பாளர்கள் தப்பிப் பிழைக்கமுடியாது.

4. இந்த முறை கவனிக்கத் தவறிய தவெகவின் இன்டர்நெட் மற்றும் சோசியல் மீடியாவின்ஐ மார்க்கெட் அடுத்த முறை பெரிய கட்சிகள் சரியாக எதிர்கொள்ளும். சோஷியல் மீடியாவிலும் உறுதியான பதில்கள் கருத்துககள் இருக்கும்.

5. குறுகிய காலத்தில் மீண்டும் ஆயிரக்கணக்கான டாலர் செலவில் "அண்ணனுக்காக வரேன்" என வெளிநாட்டு தமிழக வாக்காளர்கள் பலர் வரமாட்டார்கள். எனவே அவர்களால் கிடைக்கும் ஆதரவு காட்சிஅடிபட்டுப் போகும்.

6. "என்ன, வெறும் சென்டிமென்டுக்கு ஓட்டு போட்டுட்டியா?" போன்ற கேள்விகளால் இன்று கூனிக்குறுகி நிற்கும் வாக்காளர்கள் பலர் மீண்டும் விஜய்யின் "எனக்கு எதிரான சதி" emotional பேச்சுக்கு செவிசாய்க்கும் வாய்ப்பு குறைவு.

7. ஆட்சி நடத்தி திட்டங்களை செயல்படுத்தி மீண்டும் ஒரு தேர்தலை சந்திப்பதற்கும், ஆட்சியே செய்யாமல் ஜனாதிபதி ஆட்சி வந்து ஒரு தேர்தலை சந்திப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆட்சி நடத்தாமல் இப்போதைய "தீயசக்தி தூயசக்தி", "கெரியர் உச்சத்தை விட்டுட்டு ஆறு மாசம் வேலையில்லாம இருந்தேன்" போன்ற தேவையற்ற சம்பந்தம் இல்லாத பிரச்சாரங்கள் எடுபடாது.

இவை போன்ற இன்னும் சில காரணங்களால் விஜய் இப்போது ஏற்படுத்திய சினிமா எபக்ட்ஐ மீண்டும் ஏற்படுத்துவது கடினம்.

அதனால்தான் இப்போது எந்த வழியிலாவது முதலமைச்சர் பதவியை ஏற்றுவிட விஜய் முனைப்பாக இருக்கிறாரோ?!

LIFE TALKS - நமது பாரம்பரிய உணவுகளை விட்டுக்கொடுக்கிறோம் !

  இன்றைய அவசர உலகத்தில், மனிதர்கள் தங்களின் தனித்துவமான உணவுப் பாரம்பரியத்தை மிக எளிதாக மறந்து, மேற்கத்திய மற்றும் "நவீன" கலாச்சார...