திங்கள், 5 பிப்ரவரி, 2024

GENERAL TALKS - வேண்டுமென்றே கொடுக்கப்படும் அறியாமை !

 



பணம் இருப்பவர்களின் வாழ்க்கை சுட சுட வெற்றிகளை நிறைந்த வாழ்க்கையாக இருக்கும் ஆனால் பணம் இல்லாத நம்முடைய வாழ்க்கை கெட்டுப்போன பழைய சாதத்தில் சலித்து போன சாம்பாரை பிசைந்து சாப்பிடுவதாக இருக்கும். மிட் லைஃப் கிரிஸிஸ் என்று வயதான வாழ்க்கையின் மரண பயத்தை கொடுக்கும் மனநிலையும் நமக்குள்ளே நன்றாக வளர்ந்துவிடும். இது எல்லாவற்றுக்குமே அடிப்படையான காரணம் என்னவென்று கேட்டால் யாருமே நமக்கு சப்போர்ட் பண்ணவிலையே என்றும் மற்றவர்களை போல எனக்கும் சப்போர்ட் கிடைத்து இருந்தால் நான் வெற்றி அடைந்து இருப்பேனே என்ற ஏக்கமான ஒரு மனநிலையில் வாழ்க்கை டிஸெப்பாய்ண்ட்மென்ட்டாக இருக்கிறது என்பது ஒரு விஷயம். இன்னொரு விஷயம் நாம் மிகப்பெரிய அறியாமையில் மூழ்கியிருக்கும் ஒரு நிலை. நாம் ஒரு பெரிய கடலின் ஆழத்தில் கடல்நீரில் ஆழம் அதிகமாக அதிகமாக நேரடியாக அழுத்தம் அதிகமாகும் நிலையில் புதைந்து கிடப்பது போல புதைந்து கிடக்க வேண்டும். இந்த அறியாமையின் ஆழத்தில் இருந்து யாராவது நம்மை காப்பாற்ற வேண்டும் இல்லையென்றால் நாமே கஷ்டப்பட்டு மேலே வரவேண்டும். யாராவது நம்மை இத்தகைய போராட்டத்தால் கிடைக்கும் அறியாமையில் இருந்தும் பணம் காசு இல்லாததால் உருவாகும் மன சோர்வில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கின்றோம் ஆனால் நம்மை காப்பாற்ற அப்படி ஒரு சக்திவாய்ந்த மனிதர் வருவது மிகவும் அரிதானது. இதனால் நாமே நம்முடைய பலத்தை அதிகப்படுத்தி நம்முடைய அறியாமை இருளில் இருந்து வெளியே வந்துதான் ஆகவேண்டும். இன்னொரு வகையில் நம்மை காப்பாற்றும் மனிதர்களுக்காக நாம் காத்திருக்கலாம் ஆனால் என்னதான் போராடினாலும் அதிர்ஷ்டம் மாதிரியான ஒரு கற்பனையான விஷயம் நமக்கு ஆபத்தில் இருக்கும் நேரத்தில் உதவி பண்ணி நம்மை அறியாமையில் இருந்து காப்பாற்ற இன்னொரு மனிதரால் உதவியை அனுப்பும் வரை காத்திருக்கலாம் என்று சொல்வது முட்டாள்தனமானது. நம்முடைய உள்ளூர் அரசியல் போல நமக்கு நாமே என்று வாழ்ந்துகொண்டு இருப்பதுதான் நடைமுறை வாழ்க்கைக்கு சரியானதாக இருக்கும். 

3 கருத்துகள்:

செந்தில் ஆறுமுகம் சொன்னது…


ரஜினி ரசிகர் இவ்வாறு கமென்ட் பண்ணி இருந்தார்,
அவரை பார்த்தவுடன் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று கருவறையில் தெய்வத்தை பார்த்தது போல் இருந்தது, அவரை கண்டதும் உடம்பெல்லாம் புல்லரித்து போனது ,அவரது பாசிட்டிவான ஆற்றல், அழகான வார்த்தைகள் மற்றும் மனமார்ந்த ஆசீர்வாதங்களுடன் தான் ஒவ்வொரு பண்டிகையும் முழுமையடைகிறது. ​விவரிக்க முடியாத ஒரு பிணைப்பு, ரஜினிகாந்த் ❤️
இபபடி கடவுள் தரத்துக்கு மனுஷனை உயர்த்தி பகுத்தறிவு இல்லாத அப்பாவியாக இருந்தால் ஏமாற்றிவிடுவார்கள் நண்பரே, சிந்தனை உங்களுடைய பலம். சுயசிந்தனையை மனிதனை ஆராதனை செய்யவும் புனிதப்படுத்தவும் விட்டுக்கொடுக்க கூடாது என்று இப்படி முழுநேர நடிகருடையை கனவில் வாழ்பவருக்கு எப்படி புரியவைப்பது, சத்யராஜ் படங்களை பாருங்கள் மக்களே !

பெயரில்லா சொன்னது…

நான் கடந்த இரு தினங்களாக TVK வினர் பதிவை பார்த்து வருகிறேன்

இப்பம் கூட தி.மு.க & அதிமுக கூட்டணி என்று கூறி அவதூறு செய்தியைதான் பதிவு பண்ணி வருகிறார்கள்

மத்திய பஜகவும் அவரது கவர்னரும் எங்களை இழிவு செய்கிறார்கள் என்று ஒருவரும் பதிவிடவில்லை

TVK காரர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அதிமுக எடப்பாடி ஆட்சியில் OPS ஆதரவாளர்களை நீக்கி ஆட்சிக்கு இடையூறு செய்யும் போது கூட DMK தலைவர் MK ஸ்டாலின் ஆட்சியை கலைத்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கவில்லை

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுத்த மக்களாட்சியை மட்டுமே விரும்பினார்

இனியும் திமுகவை குறை சொல்லி கொண்டு திரியாமல் ஆரோக்கியமான அரசியலை முன் எடுத்து மக்கள் பணியை தொடருங்கள்

பெயரில்லா சொன்னது…

பாரதிராஜாவின் இரண்டு பேட்டிகளில் அவர் தனது காதல் கதையைப் பற்றி சொல்வார், ஒன்று கவுதமோடு, இன்னொன்று பரத்வாஜ்ரங்கனோடு.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது உடன் பயின்ற மாணவியின் மீது காதல். ஒருதலைக் காதல், அது அந்தப் பெண்ணுக்கு தெரியுமா தெரியாதா என்பதில் எல்லாம் எந்தத் தெளிவும் இல்லை. அப்படியே காலங்கள் ஓடிவிட்டது. ஐம்பது வருடங்கள் கழித்து பாரதிராஜா தனது அம்மா தங்கையோடு சென்றுகொண்டிருக்கும் போது ஒரு பூக்கடையில் நரைத்த தலையோடு ஒரு பெண் நிற்கிறார், அவரின் பின்பக்கம் மட்டும்தான் தெரிகிறது. இவள் நான் முதல்முதலில் காதலித்த பெண்தான் என்று உறுதியாகச் சொல்கிறார், தங்கை நம்பவில்லை. அந்தப் பெண் பூவாங்கி விட்டுத் திரும்புகிறார். அவரேதான்! ஒன்பதாம் வகுப்பில் ஒருதலையாக பாரதிராஜா காதலித்த பெண். அவர் பாரதிராஜாவைத் தேடித்தான் வந்திருக்கிறார், தனது பேத்தியின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க. மகளின் திருமணத்தின் போது பத்திரிக்கை வைக்க வரவில்லை, பேத்தியின் திருமணத்திற்காக வந்திருக்கிறார். வயதுமுதிர்வு அவருக்கு தைரியத்தைத் தந்திருக்கும். அப்பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவரே சமையலறை சென்று தேநீர் தயாரித்து தனக்கொரு கோப்பை பாரதிராஜாவுக்கு ஒரு கோப்பையுமாக வருகிறார். அதனை வாங்கி அருந்திய பிறகு, இதற்குத் தான் இந்த வாழ்வே என்பது போல ஒரு பெருமித நிறைவு. பாரதிராஜா சொல்லச் சொல்ல அவர் கண்களை நீங்கள் பார்க்கவேண்டும். ஆனந்தத்தில் துள்ளும், முகமே மிளிரும். எத்தனை ஆண்டுகள் ஆகினால்தான் என்ன காதல் எப்போதும் பசுமைதான். #பாரதிராஜா #இமயம்சரிந்தது

LIFE TALKS - ஒரு இயற்கையான கட்டுப்படுத்தும் முறை ?

  அப்பள சோடா மற்றும் சோடியம் குளோரைடு (சமையல் உப்பு) ஆகிய இரண்டின் கலவையானது, எறும்புகளின் உடலமைப்பு மற்றும் ஈரப்பத ஒழுங்குமுறை அமைப்பைக் கு...