ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ரொம்பவுமே ரசிக்கும்படியான விஷயம் என்னவென்றால் விஷுவல்லாக இருக்கும் ஸ்டைல்தான். போன க்வான்டம் ஆஃப் சொலஸ் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன்ல ஃபோகஸ் பண்ணியதால் அஃப்பிஷியலாக ஜேம்ஸ் ஒரு மிஷன்னில் இறங்க போதுமான வாய்ப்பு அந்த கதையில் கிடைக்கவில்லை. ஆனால் இந்த கதையில் கிடைத்துள்ளது. ஜேம்ஸ் பாண்ட்க்கு சூப்பரியராக இருக்கும் பேர்ஸன்களில் அவருக்கு ஆர்டர்ஸ்களை கொடுப்பவராக M தான் இருக்கிறார். இப்போது LONDON மாநகரத்தில் தொடர் தாக்குதல்கள் நடக்க காரணமாக இருப்பவர் ரேவல் சில்வா. இவர் ஒரு காலத்தில் ஜேம்ஸ் பாண்ட் வேலை செய்யும் எம். ஐ. சிக்ஸ்க்காக வேலை பார்த்து ஒரு ஆபத்தான மிஷன்னால அவருடைய வாழ்க்கையில் எல்லாத்தையுமே இழந்துவிட்டார். இப்போது உலகத்தை அச்சுறுத்தும் ஒரு கம்ப்யூட்டர் ஜீனியஸ்ஸாக பல வருடங்களுக்கு பின்னால் M ஐ தீர்த்துக்கட்டி பழிவாங்க வேண்டும் என்று முடிவு பண்ணுகிறார். இப்போது ஜேம்ஸ் பாண்ட்டால் M ஐ காப்பாற்ற முடியுமா என்பதுதான் படத்தின் கதை. இதுக்கு முந்தைய படம் குவாண்டம் ஆஃப் சொலஸ் படத்தை கம்பேர் பண்ணும்போது இந்த படத்தில் ட்ரேடிஷனல் ஜேம்ஸ் பாண்ட் ஆக்ஷன் பார்க்கலாம். இந்த படத்தின் தொடக்க காட்சி கொஞ்சம் கன்ப்யூஸ் பண்ணினாலும் மறுபடியும் இங்கிலாந்தை காப்பாற்ற பாண்ட் களத்தில் இறங்கும்போது கதை வேகமாக நகர்கிறது. இந்த படத்தின் வில்லன் எப்போதுமே பாண்ட்டை விட ஒரு படி மேலே இருப்பதால் இந்த படம் ஜேம்ஸ் பாண்ட்டின் எல்லா திறன்களையும் பயன்படுத்தி சண்டைபோட்டு சம்மந்தப்பட்ட M இன் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தை ஜேம்ஸ் பாண்ட்க்கு இந்த சம்பவங்கள் கொடுப்பதால் SKYFALL என்ற பெயருக்கு பொருத்தமாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் வரைக்கும் ஜேம்ஸ்க்கு இருக்கும் பொறுப்புகள் ரொம்பவுமே அதிகமாக இருக்கும். கிளைமாக்ஸ் கொஞ்சம் டிஸ்ப்பாயிண்ட்மென்ட்தான் ஆனால் படத்தில் நல்ல ரியல்லிஸம் இருப்பதால் படம் ரொம்பவுமே சிறப்பாக இருக்கிறது.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
SIMPLE TALKS - உலகத்தின் வேகத்தை பார்த்து மன அழுத்தம் எதற்கு ?
நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இயந்திரங்களை வைத்திருந்தாலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், வாகனம் அவற்றை நாம் எப்போதும் நம்முடைய வேகத்துக்...
-
ஒரு காலத்தில், அமைதியான கிராமத்தில் உழைப்பாளியான விவசாயியும், அன்பான மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிறிய நிலப்பரப்பை மட்டுமே வைத்திர...
-
பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக