Tuesday, October 31, 2023

BLOG - எழுதுவது வெறும் குப்பையா ? - ANGER TALKS - லைஃப் விமர்சனம் !!

 இன்னைக்கு தேதிக்கு AI வைத்து வலைத்தளம் எழுதும்போது நிறைய சம்பாதிப்பது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. மக்களே ஒரு BLOG எழுதுவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. நீங்கள் எழுதுன எழுத்துக்கள் அப்படியேதான் இருக்கும். ஒரு ஒரு எழுத்துக்களுக்கும் ரொம்ப கஷ்டப்பட வேண்டியது இருக்கும் !! இந்த மாதிரியான விஷயங்களை கம்ப்யூட்டர் எழுதிவிடுமா ? வெறும் காப்பிதான் அடிக்க முடியும். 

1. இது நான் கடந்த காலத்தில் எழுதிய சில விஷயங்கள் :  நேர்மையான கோபம்  - இந்த உலகத்துல யாருக்குமே எதுக்காக எப்படி கோபப்படனும் என்று தெரிய மாட்டேங்குது ! மட்டமான சாப்பாடு கெட்ட கொழுப்புகளை அதிக்கப்படுத்தி இதயத்தை பழுது பண்ணியதாலோ என்னவோ ஹார்ட் அட்டாக் வந்துடும் என்ற பயத்திலாவது கோபப்படாமல் இருக்கிறார்கள் என்று ஒரு பக்கம் எனக்கு தோன்றுகிறது. ஆனால் கோபம் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை. உங்களுக்கு ஒரு தப்பான விஷயம் நடக்குதா ? நிறுத்தி நிதானமாக சண்டை போடுங்கள் ஆனால் சண்டை போடாமலே இருந்துவிடாதீர்கள் உங்களுடைய எலும்புகளை எண்ணிவிடுவார்கள். உங்களுடைய கோபம் உங்களுடைய பாதுகாப்புக்காக கடவுள் கொடுத்த ஆயுதம் அதனால் கடவுளே வந்தாலும் உங்களுடைய பக்கம் நியாயம் இருந்தது கடவுள் பக்கம் அநியாயம் இருந்தால் கடவுளையும் எதிர்த்து சண்டை போடுங்கள் ! பயந்து பயந்து சாக வேண்டாம் !! இருப்பது ஒரே உயிர். நீங்கள் ஜெயிச்சுக்கிட்டே இருக்கும் அளவுக்கு செயல்களை பண்ணிக்கொண்டே இருந்தால் உங்களை நீங்கள் வருங்காலத்தில் ரொம்ப ரொம்ப பெரிய இடத்தில் கொண்டு போக முடியும். இந்த வாழ்க்கை ஒரு போர்க்களம்தான். கணக்கு பார்க்க வேண்டாம். அடித்து சாத்துங்கள். 

2. நான் ஒரு புத்தகம் எழுத முயற்சி பண்ணிக்கொண்டு இருக்கிறேன். பிரிவினை என்பது எப்படி பொதுவான எகனாமிக்ஸ்க்கும் சொசைட்டிக்கும் இருக்கும் ஒரு கேன்சர் என்பதுதான் நான் அந்த புத்தகத்தில் சொல்லலாம் என்று இருக்கிறேன். ஒரு சின்ன குழந்தை , வெறும் 2 வயதுதான் . ஆனால் அந்த குழந்தைக்கும் பிரிவினை பார்த்து தொடவும் மறுக்கிறார்கள் முட்டாள்கள். இவர்களை பொறுத்த வரைக்கும் முன்னதாக சொன்னதுபோல இவர்கள் எல்லோருமே கடவுளின் குழந்தைகள் என்று பொறப்பில் இருந்தே ஒரு கற்பனை. இவங்களுடைய பட்டியில் கட்டப்படும் ஆடுகள் போலதான் இவர்களின் பிறப்புக்கு கீழே இருக்கும் ஆட்கள் இருக்க வேண்டும் என்று மட்டமான சரக்கை சாப்பிட்டது போல ஒரு போதை நினைப்பு இவர்களின் மண்டைக்குள் கைக்குழந்தையாக இருக்கும்போதே ஊறிவிடும். பிறப்பில் இருந்து சாகும் வரைக்கும் மொத்தமாகவே ஒரு வெறியான போதையில் இருந்து சாகும் இவர்களை எல்லாம் என்னவென்று சொல்ல . குப்பை ! காலகாலமாக அடிமைத்தனம் பண்ணி கிடைத்த பணத்தின் போர்வைக்குள் பிரிவினையின் போதையில் தூங்கும் குப்பைகள்.  இவர்களை எல்லாம் விட்டுவிடுங்கள். இந்த காலத்தில் நிறைய ஆப்ஷன்கள் உள்ளது. இவர்கள் பண்ணுவது தப்பு தெரியாமலே பண்ணுகிறார்கள். இவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும். இவங்களுக்கு படிப்பை பறிக்கவும் முன்னேற்றத்தை பறிக்கவும் உரிமைகளை கொடுத்தது யாரு ? இவங்களுக்கு கொடுக்க வேண்டியது தண்டனைகள்! உரிமைகள் கிடையாது!

3. நிறைய நேரத்தில வியாபாரம் பற்றி பேசும்போது கேட்கும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் பணம் எப்படி சேர்க்க முடியும் என்பதுதான். உங்களுக்கு கிடைக்கும் ஒரு ஒரு நூறு ரூபாய்யையும் நீங்க கவனமாக செலவு பண்ண வேண்டும். இங்கே எகனாமிக்ஸ் என்னைக்குமே ஒரே மாதிரி இருக்காது. ஒரு காலத்தில் வெங்காயம் ஸ்டாக் இல்லாமல் போய் வெளிநாட்டில் இருந்து கப்பலில் கொண்டுவந்து சேல்ஸ் பண்ணுண நாட்கள் எல்லாமே உங்களுக்கு நினைவில் இருக்கா ? பொருளாதாரம் அப்படிங்கற வார்த்தையிலேயே பொருள் இருக்கிறது. உங்களால நல்லபடியாக ஆடிட்டிங் பண்ணமுடியும் என்றால் நீங்கள் சம்பாதிக்கும் ஒரு ஒரு 100 ரூபாய் நோட்டையும் ATM மெஷின்னில் போடுங்கள். அப்படி இல்லை என்றால் ஒரு இரும்பு பெட்டகம் போட்டு சேர்த்து வையுங்கள். கடன் கொடுக்க வேண்டாம். கடன் வாங்கவும் வேண்டாம். நீங்கள் அவசரத்துக்கு கடன் வாங்கினால் அடைத்துவிடுவோம் என்று உங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும் ஆனால் வாழ்க்கை அப்படி செயல்படாது. உங்களுடைய முதுகெலும்பே உடைந்தாலும் கடனை அடைக்க முடியாது. இதனால் வியாபாரத்தில் மறுமுதலீடு இலாபமாக இருக்க வேண்டும். இன்வெஸ்ட்மெண்ட்ஸ்க்கும் பாண்ட் போட வேண்டும். கடனுக்கும் பாண்ட் போட்டு கொடுக்க வேண்டும். இங்கே LEGAL ஆக பண்ணுங்கள். இல்லையேல் பண்ணவே வேண்டாம். (இருந்தாலும் நம்ம ஆளு ஸ்டேட்டஸ் போடுவான் !! சட்டம் திட்டம் எல்லாம் நான் எப்பவும் மதிச்சது இல்லைன்னு நானும் தலையில் அடித்துக்கொண்டு சென்றுவிடுவேன்)


No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...