இந்தக் காலகட்டத்தில், நாம் வாங்கக்கூடிய நிறுவனங்களின் பொருட்களின் மூலமாகவே நமது சுயமதிப்பை முதன்மையாகப் பெறுகிறோம். நாம் அதிக விலையில் உயர்தரப் பொருட்களை வாங்கினால், நமது சமூக அந்தஸ்து மற்றொரு நிலைக்கு உயர்த்தப்படுகிறது. மாறாக, நாம் போதுமான செல்வத்தைச் சேர்க்கத் தவறினால், எப்போதும் நிதி நெருக்கடியில் இருந்தால், வாழ்க்கையின் எந்த இன்பங்களையும் அனுபவிக்க முடியாத ஒரு பரிதாபகரமான சூழ்நிலையில் சிக்கிக்கொள்வோம். உலகம் இன்று வளங்களுக்காகச் சண்டையிடுகிறது என்பதற்குப் பின்னால் மிகப் பெரிய சமூக-அரசியல் உண்மை உள்ளது. நிலம், நீர், காற்று, கனிமங்கள் போன்ற இயற்கை வளங்கள் மனிதகுலத்தின் பொதுச் சொத்தாக இருக்க வேண்டியவை. ஆனால் தொழில்துறை புரட்சிக்குப் பிறகு, சட்டங்களும் பொருளாதார அமைப்புகளும் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக மாறின. இதனால், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்குத் தேவையான வளங்களை நேரடியாகப் பயன்படுத்த முடியாமல், நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த மாற்றம் நுகர்வோர் கலாச்சாரத்தை உருவாக்கியது. இயற்கையாகக் கிடைக்க வேண்டிய அடிப்படை தேவைகள் கூட சந்தையில் விற்கப்படும் பொருட்களாக மாறின. உதாரணமாக, குடிநீர் ஒருகாலத்தில் அனைவருக்கும் இலவசமாகக் கிடைத்தது இன்று பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதேபோல், உணவு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை உரிமைகள் கூட பெருநிறுவனங்களின் வணிகப் பொருட்களாக மாறி விட்டன. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் உரிமையை இழந்து, “வாங்குபவர்” என்ற அடையாளத்தில் மட்டுமே சுருங்கி விட்டனர் ஆனால் இந்த நுகர்வோர் கலாச்சாரம் தான் நம்மிடம் நல்ல விஷயம் மக்களே. இதுதான் ஒரு தனித்த மக்களாட்சியான ஒரு அமைப்பை ஏற்படுத்துகிறது. அதனை விட்டுவிட்டு யார் வேண்டுமென்றாலும் எந்த பொருளுக்கு வேண்டும் என்றாலும் சண்டை போடலாம் என்ற மாதிரியான பழைய ஆதிகாலத்து சிஸ்டத்தையெல்லாம் கொண்டுவந்து வைத்துவிட்டால் யாருக்கு பலம் அதிகமாக இருக்கிறதோ அவர்கள்தான் பஞ்சாயத்தில் உட்காருவார்கள் எல்லாவற்றிற்கும் உரிமை கோராமல், நம் வாழ்வில் பணமும் உடைமைகளும் மாறி மாறி வரும்போது, நாம் வாழ்க்கையில் அர்த்தத்தைக் கண்டறிகிறோம், மேலும் நமது முயற்சிகளுக்கு அங்கீகாரமும் பெறுகிறோம். இது சாதாரண விஷயமல்ல, நண்பர்களே. இது ஒருவித மாயவலை. ஆனால், நீங்கள் இதில் சிக்கி, பின்னர் இந்தச் சூழ்நிலையிலிருந்து வெளியே வர வேண்டும். இந்த மேட்ரிக்ஸ்ஸிலிருந்து நீங்கள் வெளியே வந்தால் தான் இந்த உலகத்தோட சிஸ்டத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொள்வதால் உங்களுக்கு பிரயோஜனம் என்று எந்த விஷயமும் இருக்காது. ஆனால் நீங்கள் மற்றவர்களைவிட கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசிக்க இது உதவும்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
GENERAL TALKS - 040 - பணிவுடன் கூடிய வாழ்க்கையின் கருத்துக்கள்
பணிவு என்பது தாழ்வு மனப்பான்மை அல்ல; அது ஒரு மனிதனின் ஆளுமை முதிர்ச்சியடைந்திருப்பதன் அடையாளம். ஒரு மரம் பழங்கள் பழுத்தவுடன் எப்படித் தானாகவ...
-
The 2012 film The Avengers begins with the asgardian god Loki striking a bargain with an alien force known as the Chitauri. In exchange for ...
-
EN-2026/03 The 2010 film Prince of Persia: The Sands of Time follows the journey of Dastan, an orphan in the Persian Empire who is adopt...
3 கருத்துகள்:
வாழ்வின் எதார்த்த நிலை இதுதான்.
download your favorite tamil moviez from tamilyogi.biz , telegram available
👍👍👍
கருத்துரையிடுக