திரு நெல்சன் மண்டேலா அவர்கள் வாழ்க்கையில் ஒரு நாள் - அந்த ஜனாதிபதி தனது பாதுகாப்பு குழுவுடன் உணவகத்திற்குள் நுழைந்தார். அவரின் வருகை அனைவரிடமும் அமைதியான மரியாதையை ஏற்படுத்தியது. அவர் தனது மேசையில் அமர்ந்தபோது, ஒரு மூலையில் தனியாக அமர்ந்திருந்த ஒருவரைக் கவனித்தார்.
உடனே, அந்த மனிதரை அழைத்து வருமாறு தனது உதவியாளர்களிடம் கூறினார். அந்த மனிதர் நடுங்கிய கைகளுடன், பதட்டமாக வந்து அமர்ந்தார். ஜனாதிபதி அவரை அன்புடன் வரவேற்று, உணவை வழங்கினார். ஆனால் அந்த மனிதர் தன் தட்டில் கிட்டத்தட்ட எதையும் தொடாமல், மிகுந்த சிரமத்துடன் இருந்தார்.
உணவு முடிந்ததும், கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு பயத்துடன் என்னை மன்னித்துவிடுங்கள், நான் இங்கே இருந்து சென்றாக வேண்டும் என்று வேகமாக அந்த விருந்தினர் வெளியேறினார். ஜனாதிபதியின் தோழர்கள் குழப்பமடைந்தனர். ஏன் அவர் இவ்வளவு பதட்டமாக இருந்த மனிதரை அழைத்தார் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
அப்போது ஜனாதிபதி விளக்கினார்: அந்த மனிதர் தான் அவர் நீண்ட காலம் சிறையில் இருந்தபோது காவலராக இருந்தவர். அந்த காவலர் அன்பாக நடந்து கொள்ளவில்லை - மாறாக அடித்தும் துன்புறுத்தியும் கைதிகளை கொடுமை செய்து இருக்கிறார். இன்று ஜனாதிபதியாக அமர்ந்து இருந்ததும் குற்ற உணர்வால் வெளியே சென்றுவிட்டார். இந்த சிறை காவலர் வெறும் சம்பளம் வாங்கிவிட்டது அவர் சந்தித்த கொடுமையான அமைப்பின் பிரதிநிதியாக இருந்தார். மிகவும் அதிகமான துன்பங்களை கொடுத்து இருந்தாலும், பழிவாங்காமல், ஜனாதிபதி அவருக்கு மரியாதை காட்டினார். அவரது தலைமைத்துவம் பழிவாங்குதலால் அல்ல, சமரசத்தால் நிரம்பியிருந்தது என்பதை அவர் காட்டினார்.
ஜனாதிபதியின் வார்த்தைகள் ஒரு நல்ல அர்த்தத்தை கொடுத்தது என்பதை விட மக்களுக்கு ஆழமான பாடத்தை தந்தன. உண்மையான சுதந்திரம் என்பது சிறைச்சுவர்களை விட்டு வெளியேறுவது மட்டுமல்ல வெறுப்பு மற்றும் பழிவாங்குதலிலிருந்து விடுபடுவதும் ஆகும். காவலரை மேசையில் அழைத்தது, மன்னிப்பு கொடுப்பதும் நன்றாக நடந்துகொள்வதும் வெறுப்பை விட வலிமையானது என்பதை வெளிப்படுத்தியது.
ஒரு நாட்டை குணப்படுத்த மனிதத்தன்மை தேவை என்பதை அவர் எடுத்துக்காட்டினார். அந்த அமைதியான உணவகத்தில், ஜனாதிபதி ஒரு வேதனையான நினைவைக் கருணையின் கதையாக மாற்றினார். சமரசமே நிலையான அமைதியின் அடித்தளம் என்பதை அவர் கற்றுக் கொடுத்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக