பவளப்பாறைகள் உலகின் மிகப்பெரிய உயிரியல் அமைப்புகளில் ஒன்றாகும். அவை கடல் தரையின் 0.2% பகுதியை மட்டுமே மூடினாலும், சுமார் ஒரு மில்லியன் உயிரினங்களுக்கு ஆதரவாக உள்ளன.
ஆனால் கடந்த 100 ஆண்டுகளில், அவற்றின் நிலைத்தன்மை கடுமையாக சோதிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த பவளப்பாறைகள், சமீபத்திய தசாப்தங்களில் வேகமாக குறைந்து வருகின்றன.
காலநிலை மாற்றத்தால் கடல் வெப்பநிலை அதிகரிப்பது, பவளப்பாறைகள் “BLEACHING” எனப்படும் நிலைக்கு தள்ளுகிறது. இதில் பவளங்கள் தங்களுக்கு உணவும் நிறமும் தரும் பாசிகளை வெளியேற்றுகின்றன.
1980களிலிருந்து இத்தகைய BLEACHING நிகழ்வுகள் அதிகரித்து, பெருமளவு பவளங்கள் அழிந்துவிட்டன. சில பகுதிகளில் இழப்பு மிகக் கடுமையாக உள்ளது. கரீபியன் பகுதியில் 80% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள் அழிந்துவிட்டன. ஆஸ்திரேலியாவின் “GREAT BARRIER REAF” கடந்த 25 ஆண்டுகளில் HALF PERCENTAGE பவளப்பாறைகளை இழந்துள்ளது.
உலகளவில், பவளப்பாறைகள் வழங்கும் சேவைகள் மீன்பிடி, கடற்கரை பாதுகாப்பு, சுற்றுலா 1950களிலிருந்து பாதி அளவுக்கு குறைந்துவிட்டன. இதனால், பவளப்பாறைகளில் நம்பிக்கை வைத்து வாழும் கோடிக்கணக்கான மக்கள் உணவு மற்றும் வருமானத்தில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
பவளப்பாறைகள் அழிவது சுற்றுச்சூழல் பேரழிவு மட்டுமல்ல; அது மனிதர்களுக்கும் பெரும் நெருக்கடி. பவளப்பாறைகள் இல்லாமல், கடற்கரை சமூகங்கள் புயல்களுக்கு எதிரான இயற்கை தடைகளை இழக்கின்றன; உயிரினங்கள் குறைகின்றன
கடல் உற்பத்தி பலவீனமாகிறது. விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்—தற்போதைய போக்கு தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பல பவளப்பாறைகள் முற்றிலும் அழிந்து போகலாம்.
ஆனால், பவள வளர்ப்பு, கார்பன் உமிழ்வை குறைத்தல், கடல் பாதுகாப்பு பகுதிகளை உருவாக்குதல் போன்ற முயற்சிகள் நம்பிக்கையை தருகின்றன. அடுத்த சில தசாப்தங்கள் பவளப்பாறைகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமா அல்லது மனிதகுலம் பூமியின் மிகச் சிறந்த உயிரியல் அமைப்புகளில் ஒன்றின் அழிவை காணுமா என்பதை தீர்மானிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக