வியாழன், 5 பிப்ரவரி, 2026

STORY TALKS - போட்டியும் பகட்டும் நிறைந்த மக்கள் !

 


பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம் காற்றில் பரவியது. அந்த சூழலில், விலையுயர்ந்த ஆடைகள் அணிந்தும், வைரங்கள், பொற்கொலுசுகள் அணிந்தும், ஒரு தம்பதியினர் உள்ளே வந்தனர். அவர்களின் தோற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் கணவன் அகங்காரத்துடன் நடந்தான். மனைவியிடம் மட்டுமே உரையாடி, மற்றவர்களைப் பொருட்படுத்தாமல், சத்தமாகச் சிரித்தான். அவனுக்கு அந்த ஹோட்டல் ஒரு பொதுவிடமாக இல்லை அவன் மேடையாக இருந்தது.

அவர்கள் இருக்கையில் அமர்ந்தபோது, மனைவியின் பார்வை ஹோட்டல் ஓரத்தில் அமைதியாக அமர்ந்திருந்த ஒருவரை நோக்கியது. அவள் மெதுவாகக் கணவனிடம் சொன்னாள்: “அந்த நபரை பாருங்கள்? சில வருடங்களுக்கு முன் அவர் எனக்கு தனது காதலை வெளிப்படுத்தினார். நான் மறுத்தபோது, அவர் மிகவும் வருத்தப்பட்டு அழுதார். இப்போது அவனைப் பாருங்கள். அவன் ஏழையாகவும், எந்த வேலையும் கிடைக்காதவனாகவும் தெரிகிறான். அவனது ஆடைகளைப் பார்த்தாலே, அவன் எவ்வளவு பரிதாபகரமான வாழ்க்கையை வாழ்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.” 

அந்தக் காதலன் அந்தப் பெண்ணைப் பார்த்த உடனேயே, அவனுக்குப் பல நினைவுகள் வெள்ளமெனப் பெருகின. அவன் அருகில் சென்று, "எப்படி இருக்கிறாய்? இவர் உங்கள் கணவரா? நீங்களும் நலமாக இருக்கிறீர்களா? இன்று என்ன சாப்பிடுகிறீர்கள்? இந்த ஹோட்டலில் உங்களுக்காக நான் ஏதாவது விசேஷமாக வாங்குகிறேன். இங்குள்ள சிக்கன் சூப் - ரோஸ்ட் போன்றவைகள் பிரசித்தியான சுவையுடைய உணவு வகைகள் இங்கே மிகவும் நன்றாக இருக்கும். என்றான். 

காதலியை பார்த்து உங்கள் இருவருக்கும் அந்த சிக்கன் ரோஸ்ட்டை ஆர்டர் செய்யட்டுமா?" என்று கேட்டான். ஆனால், கணவனும் மனைவியும் அவனது எளிமையான உடையைக் கண்டு அவனைத் தவறாக மதிப்பிட்டனர். கணவன் மிகுந்த ஆணவத்துடன், "உங்களுடைய உடைகளை பார்த்தாலே உங்களால் எதையும் ஆர்டர் செய்ய முடியாது போலிருக்கிறது. நான் எனக்காக எனது மனைவிக்காக ஆர்டர் செய்துகொள்கிறேன்," என்றான்.

என்ன? இந்த ஹோட்டலில் என்னால் ஆர்டர் செய்ய முடியாதா? அவள் எவ்வளவு ஆர்டர் செய்தாலும், அதைவிட இரு மடங்கு அதிகமாகத் தன்னால் ஆர்டர் செய்து, அதைத் தங்கள் எனது மேஜைக்கே வரவழைக்க முடியும் என்று அந்த காதலன் சவால் விட்டான்.

ஹோட்டலின் உணவுப் பட்டியலைப் பார்த்து, அவள் தன் கணவனை உயர்தரமான, விலையுயர்ந்த உணவுகளை ஆர்டர் செய்ய வைத்தாள் எந்தத் தயக்கமும் இல்லாமல், அந்த காதலன் தன் மேசைக்கும் அதே அளவு உணவை ஆர்டர் செய்தான். மேசையில் முன்பிருந்ததை விட இரு மடங்கு உணவு இருந்தது. அந்த காதலன் மெதுவாகவும் நிதானமாகவும் சாப்பிடத் தொடங்கினான். காதலிக்கு பொறாமை , கணவருக்கு கோபம் வந்தது, 

இந்த ஹோட்டலில் உள்ள அனைவருக்கும் இன்றைய உணவை நான் இலவசமாக வழங்கப் போகிறேன். முழு பில்லையும் என்னிடம் கொடுங்கள். மேலும், தற்போது இந்த ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இலவசமாக ஒரு உயர்தர விஸ்கியும் பரிசாக வழங்கப்படும்," என்று அறிவித்து ஒரே போடு போட்டு அந்த கணவன் தனது தாராள குணத்தை கோபத்தின் உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றான்.

ஒரு அமைதியான புன்னகையுடனும் மென்மையான குரலிலும், அந்த காதலன் மெதுவாகச் சிரித்துக்கொண்டே, "இப்போது, ​​என் காதலியின் கணவர் ஆர்டர் செய்த அளவை விட இரு மடங்கு அதிகமாகத் தயாரித்து, அடுத்த ஒரு மணி நேரத்தில் இனிமேல் வரப்போகும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கொடுங்கள்," என்று சொன்னான். கணவருக்கும் மனைவிக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது, எப்படி இவரால் இவ்வளவு செலவு செய்ய முடியும் என்று யோசித்துக்கொண்டே பில் தொகையை முடிந்தவரை உயர்த்தினார்கள்.

இறுதியாக, கணவனும் மனைவியும் ஹோட்டலின் கட்டண கவுண்டருக்குச் சென்று, சுமார் 100,000 ரூபாய் மதிப்புள்ள ஹோட்டல் கட்டணத்தைச் செலுத்தினர். பிறகு, அந்த காதலன் என்ன செய்கிறான் என்று பார்க்கச் சென்றனர். தான் ஏற்கனவே சாப்பிட்ட சில உணவுகளைத் தவிர, தான் ஆர்டர் செய்த மற்ற அனைத்தையும் ரத்து செய்யும்படி அந்தக் காதலன் சொல்லியிருந்தான். கணவனும் மனைவியும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்; இது எப்படி சாத்தியம்? அன்று அவர்கள் அந்த ஹோட்டலில் வேலை செய்திருந்த வேலையாட்களை கேட்டார்கள்! 

அவர்கள் விசாரித்தபோது, ​​அந்தக் காதலன்தான் அந்த ஹோட்டலின் உரிமையாளர் என்பதைத் தெரிந்துகொண்டனர். அவர்கள் கிண்டலாக, "அவர் விரும்பினால், தனது சொந்த ஆர்டரைக் கூட ரத்து செய்ய முடியாதா?" என்று கேட்டனர். கணவருக்கும் மனைவிக்கும் அவமானமாக போய்விட்டது. அந்தப் போட்டியில், இந்த கணவன் மனைவியர் ஆணவத்தின் மூலம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இறுதியில், நிஜ வாழ்க்கையில் அந்த காதலன்தான் அவர்கள் இருவரையும் உண்மையாகவே வென்றிருக்கிறான், அதுதானே உண்மை?

சிலர் தங்களுக்குக் கீழானவர்களை அவமதிப்பதை வழக்கமாகக் கொண்டு, அதே சமயம் மரியாதைக்குரியவர்களாக நினைத்துக்கொண்டு பகட்டாக நடிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைத் திருத்துவதோ அல்லது மாற்றுவதோ சாத்தியமற்றது. அவர்களைப் புறக்கணித்துவிட்டு முன்னேறிச் செல்வதே சிறந்த வழி. ஒரு குறிப்பிட்ட குறுகிய வட்டத்திற்கு அப்பால் அவர்களால் ஒருபோதும் எதையும் சாதிக்க முடியாது.


STORY TALKS - ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை !

 

\

அந்த மாலை பேருந்து நெரிசலுடன் இருந்தது. அலுவலக ஊழியர்கள், மாணவர்கள், சோர்வடைந்த பயணிகள் அனைவரும் தங்கள் உரையாடல்களில் மூழ்கியிருந்தனர். ஆனால் கடைசி இருக்கையில் ஒரு முதியவர் அமைதியாக அமர்ந்திருந்தார். அவர் எப்போதும் யாரிடமும் பேசுவதில்லை; சாளரத்துக்கு வெளியே பார்த்துக் கொண்டே, தனக்குள் மூழ்கியவாறு இருந்தார். வழக்கமாகப் பயணிக்கும் மக்கள் அவரை “அமைதியானவர்” என்று மட்டுமே நினைத்தனர்.

ஒரு நாள், பேருந்து திடீரென குலுங்கியபோது, கதவின் அருகே நின்றிருந்த இளம் பெண் திடீரென மங்கலாகி, மயங்கி விழப்போல் தோன்றினாள். இன்னும் யாரும் கவனிக்குமுன், அந்த அமைதியான முதியவர் திடீரென எழுந்து, அவளை விரைவாகப் பிடித்து, மெதுவாக இருக்கையில் அமர்த்தினார். தரையில் விழுந்து தலையில் அடிபடாமல் காப்பாற்றினார். மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்—அவரது வேகமான செயலும், எதிர்பாராத கருணையும் அனைவரையும் வியக்க வைத்தது.

அவரிடம், “இவ்வளவு சீக்கிரம் எப்படி உதவ முடிந்தது?” என்று கேட்டனர். முதியவரின் கண்கள் நினைவுகளால் கனத்தன. அவர் சொன்னார்: “ஐந்து வருடங்களுக்கு முன், நான் பேருந்தில் பயணிக்கும் போது மயங்கி விழுந்தேன். யாரும் உதவவில்லை. தரையில் விழுந்து, தலையில் பிளவு ஏற்பட்டது. ஐந்து நீண்ட ஆண்டுகள் மருத்துவமனையில் கோமாவில் படுத்திருந்தேன். அது என் வாழ்க்கையின் மிகக் கடினமான காலம். அதனால் தான், யாராவது உதவி தேவைப்படும்போது நான் காத்திருக்க முடியாது. உடனே உதவ வேண்டும். தயக்கம் செய்யாதீர்கள்.

ஒரு நொடிக் கருணை, ஒரு வாழ்நாள் துன்பத்தைத் தவிர்க்க உதவும்.” அவரது வார்த்தைகள் பேருந்தில் ஒலித்தன; பயணிகள் அனைவரும் சிந்தனையில் மூழ்கினர். அந்த நாளிலிருந்து, அந்த அமைதியான முதியவர், “பின்புறம் அமர்ந்திருக்கும் பயணி” என்பதற்கும் மேல் கருணை சரியான நேரத்தில் காட்டப்படும்போது வாழ்க்கையை மாற்றும் என்பதற்கான உயிரோட்டமான நினைவாக மாறினார்.


STORY TALKS - நல்ல மனிதர்கள் நல்ல வாழ்க்கை !




கௌஷிக் தனது மனைவி ஜெனிஃபருடன் மத போதனை அமர்வில் கலந்து கொண்டிருந்தார். சில நிமிடங்கள் அமைதியாக, போதகர் உரை அந்த அறையில் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது எதுவும் நிகழவில்லை. ஆனால் அடுத்த கணத்தில் கௌஷிக்கின் கைப்பேசி ஒலித்தது.

அவரது அலுவலகத்திலிருந்து பலரும் அவசரமான, முக்கியமான விஷயத்திற்காக தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் அவர் போனை முற்றிலும் அணைத்துவிடவும் முடியவில்லை; எடுத்துப் பேசவும் இயலவில்லை. மத போதனை முடியும் வரை மரியாதையுடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவர் முக்கியமான செய்திகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், தனது தொலைபேசியை அமைதியாக சைலன்ட் முறையில் வைக்காமல், அதிர்வு முறையில் வைப்ரேஷன் மோடில் வைத்திருந்தார். இருப்பினும், அந்த லேசான அதிர்வு கூட அந்தப் போதகருக்கு மிகுந்த தொந்தரவாக இருந்தது.'

அந்த மத போதகர் கோபத்தின் உச்சிக்குச் சென்றார். அவர் எங்கள் கூட்டத்தில் இருந்தபோது, சைத்தானின் பாதையை சென்று ​​தன் தொலைபேசி மூலம் தன்னைத் தொந்தரவு செய்தவர் யார் என்று கோபமாகத் தெரிந்துகொள்ள விரும்பினார். சத்தமாக கத்திவிட்டார்,  கௌஷிக் வெட்கத்தால் தலைகுனிந்தான், அவனது மனைவி ஜெனிஃபர் அவனை கடுமையாகக் கடிந்துகொண்டு, "நீ என்னை மிகவும் அவமானப்படுத்திவிட்டாய் கௌசிக். இத்தனை பேர் முன்னிலையில் எங்கள் குடும்பத்தின் பெயரைக் கெடுத்துவிட்டாய். இப்போது உனக்குச் சந்தோஷமா?" என்று கேட்டாள்.

தன் மனைவியை வீட்டுக்கு வந்த பின்னாலும் சமாதானம் செய்ய முடியாததால், கௌஷிக் மனமுடைந்து மிகுந்த வேதனை அடைந்தான். தன் மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற முடியாத தனது இயலாமையால் வருந்தி, அவன் ஒரு மதுக்கடைக்குச் சென்றான். அங்கே, நடந்த நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தன, அது அவனுக்கு அளவற்ற துயரத்தை ஏற்படுத்தியது.

பலர் மதுக்கடையில் குடித்துக்கொண்டிருந்தபோது, ​​கௌஷிக் தனது மதுக் கோப்பையைக் கீழே போட்டுவிட்டார். அந்தக் கோப்பை உடைந்து முற்றிலும் சிதறியது. அதன் விளைவாக, அதன் சில துண்டுகள் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு கோபமான உயரமான காவல்துறை அதிகாரியின் சீருடையில் தெறித்தன.

இதயம் நொறுங்கியவனாகவும் மனச்சோர்வுடனும் அங்கே அமர்ந்திருந்த அவன் இப்படி ஒரு விஷயம் நடந்ததும் காவல் துறை அதிகாரி கோபப்பட போகிறார் என்று நினைத்து தனக்கு அது ஒரு முற்றிலும் மோசமான நாள் என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டிருந்தபோது, ​​அந்தப் போலீஸ் அதிகாரி அவனை அணுகி, "பரவாயில்லை நண்பா, ஒன்றும் பிரச்சனை இல்லை. இதுபோன்ற விஷயங்கள் அடிக்கடி நடப்பதுதான்" என்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். 

அவர் தொடர்ந்து பல நகைச்சுவைகளைச் சொல்லி, அந்தச் சூழல் முழுவதையும் வேடிக்கையானதாக மாற்றினார். அவர் தனது சொந்த வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட போராட்டங்களைப் பற்றிய கதைகளையும் பகிர்ந்துகொண்டார், மேலும் அந்தச் செயல்பாட்டில் தனக்கென சில நண்பர்களையும் உருவாக்கிக்கொண்டார்.

அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள், பாரில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் உடனடியாக அந்த இடத்திற்கு வந்து, அதை மிக நேர்த்தியாகச் சுத்தம் செய்தனர். பானங்களை வழங்கிய பணியாளரும், இதுபோன்ற சம்பவங்கள் சகஜம் என்று கூறி கௌசிக்கின் கவலையைப் புறக்கணித்தார். இருப்பினும், அவர் விலையில் ஒரு சிறிய தொகையை கூடுதலாகச் சேர்த்துவிட்டு, அதோடு விட்டுவிட்டார்.

போலீஸ் அதிகாரி, கௌசிக்கின் மீது கோபப்படாமல் நடந்த சம்பவங்களை கௌசிக் சொல்ல அந்த  வார்த்தைகளைக் கேட்டு, அவனிடம் அன்புடன் பேசி, அவனுக்கு நண்பராகவே ஆகிவிட்டார். மேலும், அந்தக் கலகலப்பு பேச்சு குழு வாரத்துக்கு வாரம் பல புதிய நண்பர்களையும் பெற்றது. அந்த வருடத்தில் அந்த மது விடுதி பிரிமியம் உயர்தர ரெஸ்டாரண்ட் போலவே இந்த வாரத்துக்கு ஒருமுறை சந்திக்கும் நண்பர்கள் கூட்டத்தால் வளர்ந்து உருவானது. 

மத போதனை வகுப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதே போதனைகளே மீண்டும் மீண்டும் போதிக்கப்பட்டன. அதேபோல், அனைவரும் வாராவாரம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர். அவர்கள் அதே வார்த்தைகளைத் திரும்பத் திரும்பக் கேட்டு, அமைதியாகத் தலையசைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

அந்த நாளில் கௌசிக்கின் மனைவி அவனைப் பார்த்து ஆச்சரியத்துடன், "கடந்த ஒரு வருடமாக நீங்கள் ஏன் தேவாலயத்திற்கு வருவதில்லை? நீங்கள் எந்த மத வழிபாடுகளிலும் கலந்துகொள்வதில்லை அல்லது பங்கேற்பதில்லை. ஆனால், நீங்கள் ஒவ்வொரு வாரமும் செல்லும் அந்த மதுக்கூடம் உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாகத் தெரிகிறது," என்று கேட்டாள்.

அவர் பதிலளித்தார், "போதனைகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, போலியாக கண்டிப்பு கட்டுப்பாடு இல்லாமல் உண்மையாக நேர்மையாக அன்பு செலுத்தும் மக்களும் ஆதரவாக மனித நேயத்தோடு நடக்கும் நண்பர்கள் குழுவும் இருக்கும் ஒரு இடம் புனிதமான இடமாகக் கருதப்பட்டால், அந்த மதுக்கூடம் எனக்கு ஒரு புனிதமான இடம்தான்," என்று கூறிவிட்டு, மீண்டும் தனது வேலையைத் தொடர்ந்தார்.

புதன், 4 பிப்ரவரி, 2026

GENERAL TALKS - சூரியனும் நிலவும் என்று இரு மனங்கள் !

 



நம் கதாநாயகன் கடைக்குள் நுழைந்தவுடன், அவன் மனதில் ஓர் இசை ஒலிக்கிறது போல. நெய் வழியும் பருப்பு சாதம், மொறுமொறுப்பான மசாலா தோசை, பக்கத்தில் மீன் குழம்பு - ஒரு மனிதனுக்கு, தனக்குப் பிடித்த உணவைச் சாப்பிடும் நாள் கிட்டத்தட்ட ஒரு திருவிழா போன்றது. அது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் ஒரு விஷயம். ஒவ்வொரு கவ்விலும் அவன் வாழ்க்கையின் சின்ன சின்ன கவலைகள் கரைந்து போகின்றன. சாதத்தில் நெய் அதிகமா இருந்தால், அது அவனுக்கு “ஜாக்பாட்” கிடைத்தது போல. தோசையின் ஓரம் சற்று மொருமொருப்பாக சாம்பாரில் மிதமான நனைந்து இருந்தால், அது அவனுக்கு “போனஸ் லெவல்” அன்லாக் ஆனது போல இருக்கும் மக்களே (சோலோ லெவல்லிங் அனிமேஷன் தொடர் பாருங்கள்) ஆண்களின் மனநிலை இப்படித்தான் சாப்பாட்டில் கிடைக்கும் சின்ன சின்ன சுகமே அவர்களுக்கு பெரிய மகிழ்ச்சி. ஒரு நல்ல உணவு, ஒரு நல்ல தூக்கம், ஒரு நல்ல சினிமா—இதுவே அவர்களின் “அதிகபட்ச நெருப்பு பறக்கும் இலட்சியம்.” ஆனால் பெண்களின் மனநிலை வேறுபட்டது. அவர்களுக்கு சாப்பாடு மட்டும் போதாது; அதோடு சேர்ந்து “என்னை யாராவது கவனிக்கிறார்களா?” என்ற கேள்விக்கும் பதில் வேண்டும். அவர்கள் விரும்புவது பொருள் சார்ந்த விஷயங்களும் தான் புதிய உடை, அழகான ஆபரணம், சின்ன சின்ன பரிசுகள். ஆனால் அதற்கும் மேலாக, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் உண்மையான ஆசை. அதனால் தான், ஆண்கள் “சாப்பாடு கிடைத்தா, சொர்க்கத்துக்கு விசிட் அடிப்பதாக சந்தோஷ சாரல்” என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, பெண்கள் “சாப்பாடு நல்லா இருந்தாலும், யாராவது என்னை புரிந்துகொள்கிறார்களா?” என்று எதிர்பார்க்கிறார்கள். இது சண்டை அல்ல, இது இயல்பான வேறுபாடு. ஆண்களுக்கு நெய் நிறைந்த சாதம் என்றால் மகிழ்ச்சி, பெண்களுக்கு உணர்வுகளை மதிக்கும் ஒருவரின் அன்பு , ஆதரவு, தொடுதல், மற்றும் பாதுகாப்பு தான் அதிகபட்ச மகிழ்ச்சி. சாப்பாடு வயிற்றை நிரப்பும்; ஆனால் கவனமும் அன்பும் தான் மனதை நிரப்பும். பெண்களின் மனம் என்பது எல்லையற்ற ஆசைகளும் கனவுகளும் நிறைந்த ஒரு புத்தகம், மக்களே. ஒரு பெண்ணின் மனதைப் புரிந்துகொள்ளப் புறப்பட்ட அனைவரும், தாங்கள் வயதாகிவிட்டதாகக் கூறி, நரைத்த முடியுடன் திரும்பி வந்துள்ளனர்.

SPECIAL TALKS - உலகத்தின் கடைசி நாள் இன்றுதானா ?

இந்தக் காலகட்டத்தில், நாம் வாங்கக்கூடிய நிறுவனங்களின் பொருட்களின் மூலமாகவே நமது சுயமதிப்பை முதன்மையாகப் பெறுகிறோம். நாம் அதிக விலையில் உயர்தரப் பொருட்களை வாங்கினால், நமது சமூக அந்தஸ்து மற்றொரு நிலைக்கு உயர்த்தப்படுகிறது. மாறாக, நாம் போதுமான செல்வத்தைச் சேர்க்கத் தவறினால், எப்போதும் நிதி நெருக்கடியில் இருந்தால், வாழ்க்கையின் எந்த இன்பங்களையும் அனுபவிக்க முடியாத ஒரு பரிதாபகரமான சூழ்நிலையில் சிக்கிக்கொள்வோம். உலகம் இன்று வளங்களுக்காகச் சண்டையிடுகிறது என்பதற்குப் பின்னால் மிகப் பெரிய சமூக-அரசியல் உண்மை உள்ளது. நிலம், நீர், காற்று, கனிமங்கள் போன்ற இயற்கை வளங்கள் மனிதகுலத்தின் பொதுச் சொத்தாக இருக்க வேண்டியவை. ஆனால் தொழில்துறை புரட்சிக்குப் பிறகு, சட்டங்களும் பொருளாதார அமைப்புகளும் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக மாறின. இதனால், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்குத் தேவையான வளங்களை நேரடியாகப் பயன்படுத்த முடியாமல், நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த மாற்றம் நுகர்வோர் கலாச்சாரத்தை உருவாக்கியது. இயற்கையாகக் கிடைக்க வேண்டிய அடிப்படை தேவைகள் கூட சந்தையில் விற்கப்படும் பொருட்களாக மாறின. உதாரணமாக, குடிநீர்  ஒருகாலத்தில் அனைவருக்கும் இலவசமாகக் கிடைத்தது இன்று பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதேபோல், உணவு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை உரிமைகள் கூட பெருநிறுவனங்களின் வணிகப் பொருட்களாக மாறி விட்டன. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் உரிமையை இழந்து, “வாங்குபவர்” என்ற அடையாளத்தில் மட்டுமே சுருங்கி விட்டனர் ஆனால் இந்த நுகர்வோர் கலாச்சாரம் தான் நம்மிடம் நல்ல விஷயம் மக்களே. இதுதான் ஒரு தனித்த மக்களாட்சியான ஒரு அமைப்பை ஏற்படுத்துகிறது. அதனை விட்டுவிட்டு யார் வேண்டுமென்றாலும் எந்த பொருளுக்கு வேண்டும் என்றாலும் சண்டை போடலாம் என்ற மாதிரியான பழைய ஆதிகாலத்து சிஸ்டத்தையெல்லாம் கொண்டுவந்து வைத்துவிட்டால் யாருக்கு பலம் அதிகமாக இருக்கிறதோ அவர்கள்தான் பஞ்சாயத்தில் உட்காருவார்கள் எல்லாவற்றிற்கும் உரிமை கோராமல், நம் வாழ்வில் பணமும் உடைமைகளும் மாறி மாறி வரும்போது, ​​நாம் வாழ்க்கையில் அர்த்தத்தைக் கண்டறிகிறோம், மேலும் நமது முயற்சிகளுக்கு அங்கீகாரமும் பெறுகிறோம். இது சாதாரண விஷயமல்ல, நண்பர்களே. இது ஒருவித மாயவலை. ஆனால், நீங்கள் இதில் சிக்கி, பின்னர் இந்தச் சூழ்நிலையிலிருந்து வெளியே வர வேண்டும். இந்த மேட்ரிக்ஸ்ஸிலிருந்து நீங்கள் வெளியே வந்தால் தான் இந்த உலகத்தோட சிஸ்டத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொள்வதால் உங்களுக்கு பிரயோஜனம் என்று எந்த விஷயமும் இருக்காது. ஆனால் நீங்கள் மற்றவர்களைவிட கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசிக்க இது உதவும்.

GENERAL TALKS - இவர்களுடைய கண்ணோட்டமே வேறானது !

 



சில மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ளாமல், மற்றவர்களின் முன்னேற்றத்தையும் தடுக்க முயல்கிறார்கள். அவர்களின் கண்களில் உலகமே ஒரு போட்டி அரங்கம் போலத் தெரிகிறது. யாராவது சிறிது முன்னேறினால், உடனே அவர்களைப் பொறாமைப்படுவார்கள்; யாராவது தவறினால், அதைப் பார்த்து கேலி செய்வார்கள். அவர்களுக்கு மற்றவர்களின் சாதனை ஒரு கசப்பான மருந்து, மற்றவர்களின் தோல்வி ஒரு இனிப்பான பண்டம்.

இவர்கள் வாழ்வின் நோக்கம் வளர்ச்சி அல்ல, மற்றவர்களின் வளர்ச்சியைத் தடுக்கவே. "நான் முன்னேற முடியவில்லை, நீயும் முன்னேறக் கூடாது" என்ற மனநிலை இவர்களின் அடிப்படை. தங்களால் எதுவும் சாதிக்க முடியாததால், மற்றவர்களின் சாதனையை குறைத்து மதிப்பிடுவார்கள். "அவன் வெற்றி பெற்றான், ஆனால் அதெல்லாம் அதிர்ஷ்டம் தான்" என்று சொல்லி, மற்றவர்களின் உழைப்பை கேலி செய்வார்கள்.

உண்மையில், இவர்களின் வாழ்க்கை ஒரு வெறுமையான மேடை. அங்கே சிரிப்பும், கேலியும், பொறாமையும் தான் நாடகம். தங்களின் திறமையின்மையை மறைக்க, மற்றவர்களின் திறமையை இழிவுபடுத்துவார்கள். உலகம் முழுவதையும் கிண்டல் செய்யும் இவர்களின் மனநிலை, அவர்களை ஒருபோதும் உயர்த்தாது. ஆனால், மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து எரிந்து கொண்டிருப்பதே இவர்களின் ஒரே "பொழுதுபோக்கு"

வாழ்க்கையில் நீங்கள் தவிர்க்க முடியாமல் இது போன்ற மனிதர்களைச் சந்திப்பீர்கள். அவர்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாம் அவர்களை சாதாரணமாகப் புறக்கணித்துவிட முடியாது. அவர்களும் நம்மைப் புறக்கணிக்க விட மாட்டார்கள். அவர்களுடன் போட்டியிடுவதை நமது விதியாக ஏற்றுக்கொண்டு, இந்தச் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று நமது வாழ்க்கையே நம்மிடம் கோரினால், அப்போது நினைத்துப் பாருங்கள்!

CINEMA TALKS - THE LEGEND OF TARZAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



The Legend of Tarzan கதை, ஆப்பிரிக்கக் காட்டில் வளர்ந்த டார்சன் (Alexander Skarsgård) தனது மனைவி ஜேன் (Margot Robbie) உடன் லண்டனில் அமைதியான வாழ்க்கை வாழும் நிலையில் தொடங்குகிறது. ஆனால், காங்கோவில் நடக்கும் சதிகள் காரணமாக அவர் மீண்டும் தனது பிறப்பிடமான காட்டிற்கு திரும்ப வேண்டிய சூழல் உருவாகிறது. அங்கு, கொடூரமான வணிகர் லியோன் ரோம் (Christoph Waltz) ஆப்பிரிக்க வளங்களை சுரண்டி, மக்களை அடிமைப்படுத்த முயல்கிறார். டார்சன், தனது விலங்கு நண்பர்கள் மற்றும் பழங்குடியினருடன் இணைந்து, ரோமின் திட்டங்களை முறியடிக்கிறார். ஜேன் கூட போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். இறுதியில், டார்சன் தனது வலிமை, அறிவு, மற்றும் காட்டின் ஆதரவால் எதிரிகளை வென்று, ஆப்பிரிக்க மக்களை விடுவிக்கிறார். இப்படம், டார்சனின் அடையாளம், காதல், மற்றும் இயற்கையுடன் கொண்ட உறவை வலியுறுத்தும் சாகசமாக அமைகிறது ஆப்பிரிக்கக் காட்டின் இயற்கை அழகை அழகாகப் பதிவு செய்திருப்பது இந்த கதைக்கு முக்கியமான பிளஸ் பாயிண்ட், டார்சனின் விலங்குகள் நிறைந்த காடுகளில் வாழ்ந்த வாழ்க்கையால் கிடைத்த பயிற்சிகள் மற்றும் அபார சக்தி மற்றும் போராட்ட காட்சிகள் பார்வையாளர்களை ஈர்க்கும். மேலும், டார்சன் ஜேன் காதல் மற்றும் உணர்ச்சி பூர்வமான தருணங்கள் கதைக்கு உயிரூட்டுகின்றன. சிறுவர்களுக்கான ஒரு அனிமேஷன் தொடரிலிருந்து எடுக்கப்பட்ட கதை இது. இதை இவ்வளவு நுட்பமான காதல் மற்றும் அதிரடி நிறைந்த கதையாக மாற்றினால், அது நிச்சயமாக முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ஆனால், பாதகமாக, கதை சொல்லும் விதம் சில இடங்களில் மந்தமாகவும் கணிப்பிடக்கூடியதாகவும் தோன்றுகிறது; வில்லன் லியோன் ரோம் மிக வலிமையான எதிரியாக உருவாக்கப்படவில்லை என்பதால் சஸ்பென்ஸ் குறைகிறது. மொத்தத்தில், படம் காட்சிப்பூர்வமாக கவர்ச்சிகரமாக இருந்தாலும், கதை மற்றும் கதாபாத்திர வளர்ச்சியில் ஆழம் குறைவதால் கலவையான விமர்சனங்களை பெற்றது

CINEMA TALKS - THE BOOK OF ELI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



அணு பேரழிவுக்குப் பிறகு 30 ஆண்டுகள் கழித்து, உலகம் வெறிச்சோடிய பாலைவனமாக மாறுகிறது; உணவு, தண்ணீர், ஒழுங்கு அனைத்தும் அரிதாகின்றன. இந்த சூழலில், எலி (Denzel Washington) என்ற தனிமையான பயணி, மேற்குத் திசை நோக்கி நடந்து செல்கிறார். அவரை வழிநடத்துவது அவரது நம்பிக்கை மற்றும் உள்ளார்ந்த குரல். எலியின் கையில் ஒரு தனித்துவமான புத்தகம் உள்ளது — பைபிளின் கடைசி பிரதியாகும் அதை பாதுகாப்பாக மேற்குக் கரைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற பணி அவருக்கு உள்ளது.எலி, அசாதாரணமான போர்திறன் கொண்டவர்; கொள்ளையர்கள், கும்பல்களை எதிர்த்து உயிர் பிழைக்கிறார். ஆனால் அவரது பயணம் வெறும் உயிர் பிழைப்புக்காக அல்ல; அந்த புனித புத்தகத்தை எந்த விலைக்கும் காப்பாற்ற வேண்டும் என்பதே அவரது நோக்கம். ஒரு நகரத்தில் அவர் கார்னெகி (Gary Oldman) என்ற கொடூரமான தலைவரை சந்திக்கிறார். மதத்தின் சக்தியைப் பயன்படுத்தி மக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆசையால் கார்னெகி அந்த புத்தகத்தை கைப்பற்ற முயல்கிறார். எலி, சோலாரா (Mila Kunis) என்ற இளம் பெண்ணுடன் தப்பி, கடினமான பயணத்தை தொடர்கிறார். கடுமையாக காயமடைந்தாலும், தனது பணி மீது அவர் கொண்ட நம்பிக்கை குறையவில்லை. இறுதியில், எலி பார்வையற்றவர் என்பதும், பைபிளின் முழு உள்ளடக்கத்தையும் மனப்பாடமாக வைத்திருப்பதும் வெளிப்படுகிறது. கார்னெகி புத்தகத்தைப் பெற்றாலும், அதை பயன்படுத்த முடியாது; ஏனெனில் எலி, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அறிஞர்களிடம் பைபிளை முழுமையாக உச்சரித்து வழங்குகிறார். தனது பணி நிறைவேறிய பிறகு எலி உயிரிழக்கிறார், ஆனால் சோலாரா அவரது பாதையைத் தொடர முடிவு செய்கிறார். இப்படத்தின் முடிவு, நம்பிக்கை, அறிவு, நம்பிக்கை ஆகியவை இருண்ட காலங்களிலும் நிலைத்திருக்கும் என்பதை வலியுறுத்துகிறது நான் பல அறிவியல் புனைகதைத் திரைப்படங்களைத் தேடிப் பார்த்தேன். அந்தத் தேடலில், அறிவியல் புனைகதைக்கும் சற்றும் தொடர்பில்லாத ஒரு கதையைப் பார்க்க நேர்ந்தது. இருப்பினும், இந்தத் திரைப்படத்தில் டென்சல் வாஷிங்டன் நடித்திருப்பதால், இதை நிச்சயமாகப் பார்க்கலாம்.அவர் இந்தப் படத்தை தன் தோள்களில் சுமந்து செல்கிறார்; ஒரு சாதாரண கதைக்கு உயிர் கொடுத்து, படத்தை முன்னோக்கி நகர்த்துவதற்காக ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவர் கதையை மட்டும் காப்பாற்றவில்லை; அவர் படத்தையும் காப்பாற்றினார் என்று சொல்வதே மிகவும் பொருத்தமாக இருக்கும்.

CINEMA TALKS - REPLICAS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 



டக்லஸ் ஃபோஸ்டர் (Keanu Reeves) என்ற நியூரோ சயின்டிஸ்ட், மனிதர்களின் நினைவுகளை ரோபோடிக் உடல்களில் மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர். ஒரு நாள், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கார் விபத்தில் உயிரிழக்க, துயரத்தில் மூழ்கிய அவர், தனது அறிவியல் திறன்களை பயன்படுத்தி அவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார். கிளோனிங் தொழில்நுட்பம் மூலம் உடல்களை உருவாக்கி, செயற்கை நுண்ணறிவு வழியாக அவர்களின் நினைவுகளைப் பதிவேற்றுகிறார். ஆனால் இந்த முயற்சி எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது; அவரது குடும்பம் உண்மையில் உயிருடன் திரும்பியவர்களா அல்லது வெறும் நகல்களா என்ற கேள்வி எழுகிறது. இதேசமயம், அவரது ஆராய்ச்சியை தங்கள் லாபத்திற்காக பயன்படுத்த விரும்பும் நிறுவனமும், அரசாங்கமும் அவரை வேட்டையாடத் தொடங்குகின்றன. இறுதியில், Replicas மனித அடையாளம், அறிவியல் நெறிமுறை, மற்றும் "கடவுளாக மாறுவது சாத்தியமா ?" என்ற சிக்கலான கேள்விகளை எழுப்பும் சை-ஃபை த்ரில்லராக மாறுகிறது இதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகப் புதுமையான எதுவும் இல்லாவிட்டாலும், சராசரித் திறமையுள்ள ஒரு விஞ்ஞானி அனைவராலும் துன்புறுத்தப்படுகிறார் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்கு எதிர்பார்க்கக்கூடிய அனைத்து வகையான காட்சிகளும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. கதையை ஒரு புத்துணர்ச்சியான முறையில் வழங்குவதற்காக, திரைக்கதையில் அவர்கள் மிகுந்த முயற்சி செய்துள்ளனர். தயாரிப்பு ரீதியாகப் பார்த்தால், குறைந்த பட்ஜெட்டிலும், கதையை ஒரு முழுமையான அறிவியல் புனைகதையாகவே வைத்து, அதை நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

CINEMA TALKS - TOTAL RECALL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


சிறந்த முயற்சியுடனும் அர்ப்பணிப்புடனும் உருவாக்கப்பட்ட, தனித்துவமான கதைக்களம் கொண்ட ஒரு அறிவியல் புனைகதைத் திரைப்படத்தைப் பார்க்க விரும்பினால், நீங்கள் இந்தப் படத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இது ஓரளவு பழமையான படம் என்றாலும், அல்லது இன்னும் சொல்லப்போனால், மிகவும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த படம் என்றாலும், அறிவியல் புனைகதை அம்சங்களின் அடிப்படையில் இதன் தரம் மிகவும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. 2084-ஆம் ஆண்டில், டக்லஸ் குவெய்ட் (Arnold Schwarzenegger) என்ற கட்டுமான தொழிலாளி, செவ்வாய் கிரகத்தைப் பற்றிய கனவுகளால் அடிக்கடி துன்புறுத்தப்படுகிறார். சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தாலும், அவர் Rekall என்ற நிறுவனம் செல்லுகிறார்; அங்கு செயற்கை நினைவுகளை நுழைத்து, "ரகசிய ஏஜென்ட்" ஆக செவ்வாயில் வாழும் அனுபவத்தை தேர்வு செய்கிறார். ஆனால் அந்த செயல்முறை தவறாகி, குவெய்டின் மனதில் மறைக்கப்பட்ட உண்மையான நினைவுகள் வெளிப்படுகின்றன. அவர் ஏற்கனவே ஒரு ரகசிய ஏஜென்ட் என்பதற்கான சான்றுகள் வெளிப்பட, அரசு முகவர்கள் அவரை வேட்டையாடத் தொடங்குகிறார்கள். அவரது மனைவி லோரி (Sharon Stone) கூட உண்மையில் ஒரு உளவு என தெரியவர, குவெய்ட் திடீரென ஒரு பெரிய சதியில் சிக்குகிறார். அவர் உண்மையில் "ஹவ்சர்" என்ற உயர் அதிகாரி, ஆனால் கொடூரமான கார்ப்பரேட் தலைவர் கோஹேகன் (Ronny Cox) மீது கிளர்ச்சி செய்தவர் என தெரியவருகிறது. செவ்வாயில் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து, மெலினா (Rachel Ticotin) என்ற போராளியின் உதவியுடன் குவெய்ட் போராடுகிறார். கோஹேகன், செவ்வாயின் வளங்களை சுரண்டி, அங்குள்ள மக்களை அடக்கி வைத்திருப்பதை குவெய்ட் கண்டுபிடிக்கிறார். இறுதியில், செவ்வாயின் அடியில் மறைந்திருந்த அயல்நாட்டு ரியாக்டரை இயக்கி, முழு கிரகத்திற்கும் சுவாசிக்கக்கூடிய காற்றை வழங்குகிறார். ஆனால், இந்த அனுபவம் உண்மையா அல்லது Rekall நிறுவனம் நுழைத்த செயற்கை நினைவா என்ற கேள்வி திரைப்படத்தின் முடிவில் பார்வையாளர்களை குழப்புகிறது. இதனால் Total Recall ஒரு அதிரடி சாகசமாக மட்டுமல்லாமல், "உண்மை vs மாயை" என்ற தத்துவ சிந்தனையையும் தூண்டும் படைப்பாக மாறுகிறது !! 

CINEMA TALKS - ONE PUNCH MAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



இது சூப்பர் ஹீரோ நிகழ்ச்சிகளை புத்திசாலித்தனமாக கேலி செய்யும் விதத்தில் வெளியிடப்பட்ட ஒரு தொடராக இருந்தாலும், இந்தத் தொடருக்காக ஒரு சிறந்த கதைக்களத்தை உருவாக்குவதில் அவர்கள் உண்மையிலேயே சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர் என்று உறுதியாகக் கூறலாம். மாஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் மர்மமான உயிரினங்களால் பூமி தொடர்ந்து தாக்கப்படும்போது, ​​கிரகத்தைக் காப்பாற்ற சில கதாநாயகர்கள் தோன்றுகிறார்கள். சிலருக்கு சக்திகள் உள்ளன, மற்றவர்களுக்கு இல்லை. இருப்பினும், ஒருவன் அளவற்ற சக்தியைக் கொண்டிருக்கிறான்; அவன் உலகின் வலிமையானவன், யாராலும் வெல்ல முடியாதவன், மேலும் ஒரே ஒரு குத்து மூலம் நம்பமுடியாத அளவிற்கு அழிவுகரமான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவன். அவன்தான் நமது ஒன்-பஞ்ச் மேன்.மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் களத்தில் இறங்கியிருந்தாலும், அவனது முயற்சிகள் மற்றும் போராட்டங்கள் இருந்தபோதிலும், மக்கள் அவனைப் புரிந்துகொள்வதில் பெரும்பாலும் தவறிவிட்டனர். மேலும், அவன் சூப்பர் ஹீரோக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் ஏமாற்று வழிகளில் பெற்றதாக மக்கள் நம்புகிறார்கள். ஆனால் உண்மையில், நமது கதாநாயகன் தனது சொந்த அடையாளத்தை நிரூபிக்கவும், சூப்பர் ஹீரோக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து அவர்களைப் பாதுகாக்கவும் பெரும் முயற்சி எடுக்கிறான். அவனது உதவியாளரும் சில நண்பர்களும் மட்டுமே அவனைப் புரிந்துகொள்கிறார்கள்; வேறு யாரும் அவனை உண்மையாகப் புரிந்துகொள்வதில்லை. மேலும், அவனால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்ற அளவிற்கு, அவன் அளவிட முடியாத வலிமை, சக்தி மற்றும் வேகத்தைக் கொண்டுள்ளான். இதன் காரணமாக, நமது கதாநாயகனான ஒன்-பஞ்ச் மேன், வாழ்க்கையில் மிகுந்த சலிப்பையும் வெறுமையையும் உணர்கிறான்.முதல் இரண்டு சீசன்களையும் அவற்றின் 24 எபிசோடுகளையும் பார்த்த பிறகு, தயாரிப்பு குழு கதையை சொல்வதில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருப்பது தெளிவாகிறது. கதை மிகவும் திறமையாகப் படமாக்கப்பட்டுள்ளது. கதை நமது கதாநாயகனைச் சுற்றியே மட்டும் அமைந்தால் அது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது என்பதால், கதைக்களம் நமது முக்கிய கதாபாத்திரத்தின் நண்பர்களான மற்ற கதாபாத்திரங்கள் மீதும் வெகுவான கவனம் செலுத்துகிறது. இந்தத் தொடர் மிகுந்த நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது., நீங்கள் இதை நிச்சயமாக ஒரு முறையாவது பார்க்க வேண்டும். இந்தத் தொடர் ஆங்கில டப்பிங்குடன் கிடைக்கிறது. இந்தத் தொடரின் மூலம் அவர்கள் ஒரு சிறந்த, அற்புதமான கதையை வழங்கியுள்ளனர். ஒரு பிரம்மாண்டமான, அருமையான கதைக்குத் தேவையான அனைத்தும் இந்தத் தொடரில் உள்ளன. தவறவிடாதீர்கள்!

CINEMA TALKS - SOLO LEVELING - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


மர்மமான "கேட்" எனப்படும் வாயில்கள் வழியாக மனித உலகிற்கு கொடூரமான மிருகங்கள் நுழைகின்றன. அவற்றை அழிக்க "ஹண்டர்கள்" எனப்படும் போராளிகள் உருவாகின்றனர். ஆனால், சங் ஜின்வூ (Sung Jinwoo) என்ற இளைஞன் மிகவும் பலவீனமான ஹண்டராக அனைவராலும் குறைத்து மதிக்கப்படுகிறார். ஒரு நாள், அவர் ஒரு இரட்டை டஞ்சனில் சிக்கி உயிரிழக்க நேரிடும் நிலையில், அதிசயமாக "லெவல் அப்" செய்யும் தனித்துவமான திறனைப் பெறுகிறார் இந்த புதிய திறன் மூலம் ஜின்வூ தனியாகவே டஞ்சன்களை வெற்றி கொள்ளத் தொடங்குகிறார். ஒவ்வொரு போராட்டத்திலும் அவர் வலிமை பெறுகிறார், புதிய ஆயுதங்கள், திறன்கள், நிழல் படைவீரர்கள் என பல சக்திகளை கையகப்படுத்துகிறார். பலவீனமான ஹண்டராக இருந்தவர், உலகின் மிக வலிமையான போராளியாக மாறும் பயணம் தான் கதையின் மையம் ஜின்வூவின் வளர்ச்சி வெறும் தனிப்பட்ட பயணம் அல்ல; கேட்களின் பின்னால் மறைந்திருக்கும் கடவுள் போன்ற சக்திகள், மனித குலத்தின் எதிர்காலம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் போராட்டமாக மாறுகிறது நீங்கள் அனிமேஷன் தொடர்களை விரும்பிப் பார்க்கக் கூடியவராக இருந்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு தொடர் சோலோ லைவலிங் அப்படிச் சொல்லலாம். இந்தத் தொடரில் எனக்குப் பிடித்த விஷயம் என்னவென்றால், கதாநாயகனைப் பொறுத்தவரை, இந்தத் தொடர் முற்றிலும் அவனது கதையை அடிப்படையாகக் கொண்டே முன்னேறுகிறது. தேவையற்ற கிளைக்கதைகளோ அல்லது தொடரைக் கெடுக்கக்கூடிய அம்சங்களோ இந்தத் தொடரில் இல்லை. இந்தத் தொடரின் திரைக்கதை ஒரு வீடியோ கேம் போல வடிவமைக்கப்பட்டிருப்பது என்பதும் குறிப்பாக சுவாரஸ்யமாக இருக்கிறது. முதல் சீசனிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு இரண்டாவது சீசனை வழங்கி, கதாநாயகன் தனது முயற்சிகளில் படிப்படியாக வெற்றி பெறுவதையும், அவனது மாயாஜாலத் திறன்களின் சக்தி தொடர்ச்சியாக அதிகரிப்பதையும் காட்டி, இந்தத் தொடரின் படைப்பாளர்கள் ரசிகர்களை மகிழ்வித்துள்ளனர். நண்பர்களே, நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தத் தொடரை அவசியம் பாருங்கள். இது ஒரு முக்கியமான தொடராகத் தெரிகிறது.அன்பான வாசகர்களே, இந்த நாட்களில் காரணமே இல்லாமல் ஆட்சென்ஸ் நோட்டிக்கொண்டு போய்விட்டது இப்போதைக்கு வலைப்பதிவில் விளம்பரங்கள் எதுவும் வரவே இல்லை. , விளம்பரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதுவரை எங்கள் தளத்திற்கு நீங்கள் அளித்து வரும் அதே சிறந்த ஆதரவைத் தொடர்ந்து அளித்து, நாங்கள் வெற்றிபெற உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.




ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

STORY TALKS - மாயாஜால கற்கள் கற்றுக்கொடுத்த கதை !





ஒரு காலத்தில், அடர்ந்த காடுகளும் உயர்ந்த மலைகளும் சூழ்ந்த அமைதியான பள்ளத்தாக்கில், அனைவராலும் மதிக்கப்படும் ஒரு சந்நியாசி தூரத்தில் உள்ள கோவிலுக்குச் செல்ல பாலைவனத்தை கடக்க முடிவு செய்தார், அவருடன் பல இளம் சீடர்கள் இருந்தனர், அவர்கள் அனைவரும் தங்கள் ஆசானிடமிருந்து ஞானம் பெற ஆவலுடன் இருந்தனர், பயணம் தொடங்குவதற்கு முன் சந்நியாசி ஒரு விசித்திரமான உத்தரவை வழங்கினார்: “இந்தப் பயணத்தில், ஒவ்வொருவரும் பாதையோரத்தில் ஒரு கல்லை எடுத்து அதை உங்களுடன் சுமக்க வேண்டும், இப்போது ஏன் என்று கேட்க வேண்டாம், இரவு வந்ததும் அதற்கான காரணத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.” சீடர்கள் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர், சிலர் இது கீழ்ப்படிதல் சோதனை என்று நினைத்தனர், சிலர் இது ஒரு மந்திரச் சடங்கு என்று நம்பினர், ஆனால் அனைவரும் அமைதியாகக் கட்டளையை ஏற்றனர்.




அந்த உத்தரவை ஏற்றுக்கொண்ட சீடர்கள் தங்கள் தனிப்பட்ட இயல்புகளுக்கு ஏற்ப கற்களைத் தேர்ந்தெடுத்தனர், ஒருவன் சோம்பேறித்தனமாகவும் தன் புத்திசாலித்தனத்தை பெருமைப்படுத்திக் கொண்டும், மிகச் சிறிய கல்லை எடுத்துக் கொண்டான், “எதற்காக நான் சுமையடைய வேண்டும், ஆசான் கல்லை சுமக்கச் சொன்னால், சிறிய கல்லை எடுத்தால் போதும், பாடம் ஒன்றே இருக்கும்” என்று எண்ணினான், மற்றொருவன் எச்சரிக்கையுடன் நடுத்தர அளவிலான கல்லை எடுத்துக் கொண்டான், “நான் கட்டளையை மீறக்கூடாது, ஆனால் அதிக சுமையையும் சுமக்க வேண்டாம்” என்று நினைத்தான், மூன்றாவது சீடன் வலிமையுடன், முழு அர்ப்பணிப்புடன், மிகப் பெரிய கல்லை தோளில் தூக்கிக் கொண்டான், வியர்வை வழிந்தாலும், “ஆசான் கேட்டால் அதற்குப் பொருள் இருக்கும், நான் முழு முயற்சியையும் காட்ட வேண்டும்” என்று உறுதியானான், மற்றவர்கள் தங்கள் இயல்புகளுக்கு ஏற்ப பல அளவிலான கற்களை எடுத்தனர், சிலர் பேராசையுடன், சிலர் பயத்துடன், சிலர் அக்கறையின்றி.




பயணம் தொடங்கியது, சூரியன் கடுமையாக எரிந்தது, சீடர்கள் தங்கள் சுமைகளை சுமந்து பாலைவனத்தில் நடந்தனர், சிறிய கல்லை எடுத்தவன் மற்றவர்களை பார்த்து சிரித்தான்: “நீங்கள் எல்லோரும் எவ்வளவு முட்டாள்கள், இவ்வளவு பெரிய கற்களை சுமக்கிறீர்கள், நான் இலகுவாக நடக்கிறேன், நீங்கள் வாடுகிறீர்கள்” என்று கிண்டலிட்டான், நடுத்தர கல்லை எடுத்தவன் அமைதியாக இருந்தான், பெருமையோ வெட்கமோ இல்லாமல், பெரிய கல்லை எடுத்தவன் தடுமாறினாலும், அவன் கண்களில் உறுதியும் அர்ப்பணிப்பும் தெரிந்தது, சந்நியாசி முன் நடந்தார், கையில் தடியுடன், எதுவும் பேசாமல், பாலைவனத்தின் மணற்பரப்புகளையும் முள்ளான பாதைகளையும் கடக்கும்போது, சீடர்கள் பசியும் தாகமும் அடைந்தனர், “ஏன் ஆசான் உணவை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை, கல்லை மட்டும் சுமக்கச் சொன்னார்” என்று மனதில் சந்தேகம் எழுந்தது, சிலர் அவரது ஞானத்தை சந்தேகித்தனர், ஆனால் யாரும் வெளிப்படையாகக் கேட்கவில்லை.




இறுதியாக இரவு வந்தது, அனைவரும் சிறிய தீக்கருவியின் அருகே கூடினர், சந்நியாசி தடியை உயர்த்தி, “இப்போது நீங்கள் சுமந்த கற்களை என் முன் வையுங்கள்” என்றார், சீடர்கள் கட்டளையை ஏற்றனர், ஆச்சரியமாக, அந்தக் கற்கள் ஒளிரத் தொடங்கின, ஒன்றின் பின் ஒன்றாக அவை உணவாக மாறின, சிறிய கல்லை எடுத்தவன் ஒரு சிறிய ரொட்டித் துண்டைப் பெற்றான், அது ஒரே ஒரு கடிக்கு மட்டுமே போதியது, நடுத்தர கல்லை எடுத்தவன் ஒரு சாதாரண உணவைப் பெற்றான், அரிசி மற்றும் காய்கறிகளுடன், பெரிய கல்லை எடுத்தவன் ஒரு பெரிய விருந்தைப் பெற்றான், பழங்கள், ரொட்டி, பால், பசியைத் தீர்க்கவும் மற்றவர்களுடன் பகிரவும் போதுமான அளவு.




அந்த அதிசயத்தைப் பார்த்து சீடர்கள் வியப்புடன் மூச்சு விட்டனர், சிறிய கல்லை எடுத்தவன் தனது சிறிய ரொட்டியைப் பார்த்து வருத்தமடைந்தான், நடுத்தர கல்லை எடுத்தவன் திருப்தியுடன் இருந்தான், பெரிய கல்லை எடுத்தவன் மகிழ்ச்சியுடன் சிரித்தான், பசி தீர்ந்தது, முயற்சி பலித்தது, சந்நியாசி பின்னர் பேசினார்: “நீங்கள் இன்று சுமந்த கல், இன்று இரவு உங்கள் உணவாக மாறியது, முயற்சி பலனைத் தரும், சோம்பேறித்தனம் சிறிய பலனை மட்டுமே தரும், வாழ்க்கையும் இதே போல, நீங்கள் சுமக்கும் பொறுப்புகள், நீங்கள் தாங்கும் கஷ்டங்கள், அவை நாளை உங்களுக்கு கிடைக்கும் பலனை நிர்ணயிக்கும், நினைவில் கொள்ளுங்கள்—இன்று நீங்கள் சுமக்கும் சுமை, நாளை உங்களுக்கு வலிமையாகவும் உணவாகவும் மாறும்.”




சீடர்கள் அமைதியாகக் கேட்டனர், அவர்களின் மனங்களில் புரிதல் மலர்ந்தது, சோம்பேறி வெட்கப்பட்டான், நடுத்தரமானவன் திருப்தியடைந்தான், வலிமையானவன் மகிழ்ச்சியடைந்தான், ஒவ்வொருவரும் சந்நியாசியின் விசித்திரமான கட்டளை கற்களைப் பற்றியது அல்ல, தேர்வுகள், முயற்சி, விதி ஆகியவற்றைப் பற்றியது என்பதை உணர்ந்தனர், அந்த நாளிலிருந்து சீடர்கள் அந்தப் பாடத்தை மறக்கவில்லை, சோம்பேறி உழைப்பாளியாக மாறினான், நடுத்தரமானவன் அதிக முயற்சியுடன் வாழ்ந்தான், வலிமையானவன் பின்னர் ஞானமிக்க தலைவராக வளர்ந்தான், அந்தக் கதை கிராமம் முழுவதும் பரவியது, மூத்தவர்கள் குழந்தைகளிடம் சொல்லும் பழமொழியாக மாறியது: “உங்கள் கல்லை தைரியத்துடன் சுமக்குங்கள், அது இரவில் உங்கள் உணவாக மாறும்.”

STORY TALKS - நம்முடைய வாழ்க்கை கொடுக்கும் பாதைகள் !

 



ஒரு சிறிய கிராமத்தில், ஒரு மீனவர் தினமும் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பான். அவன் எப்போதும் கடலை “என் வாழ்வாதாரம்” என்று மதித்தான். ஆனால் ஒருநாள், கடல் அவனை சோதிக்க முடிவு செய்தது. முதல் நாள், கடல் அவனுக்கு மிகுந்த மீன்களை அளித்தது. அவன் பேராசையால் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, சந்தையில் விற்றான். ஆனால் அடுத்த நாள், கடல் வெறுமையாக இருந்தது இரண்டாவது நாள், கடல் புயலாகி, அவனை சோதித்தது. அவன் பயந்து ஓடினான். மூன்றாவது நாள், கடல் அமைதியாக இருந்தது. மீனவர் சிந்தித்து, “நான் பேராசையால் எல்லாவற்றையும் எடுத்தேன்; பயத்தால் ஓடினேன். ஆனால் உண்மையான மதிப்பு, கடலை சமநிலையுடன் நடத்துவதில் தான்” என்று உணர்ந்தான். அவன் அந்த நாளிலிருந்து, தேவையான அளவு மட்டுமே மீன் பிடித்து, கடலை மதித்தான். சில காலத்தில், அவன் வாழ்க்கை வளமாகியது. நெறி: இயற்கையை மதித்து, சமநிலையுடன் வாழ்வதே நிலையான செல்வம். பேராசையும் பயமும் அழிவைத் தரும்; மதிப்பும் சமநிலையும் வளத்தைத் தரும். இந்த கதையை குரு சொன்னாலும் யாத்திரிகனுக்கு போதுமான யோசன கிடைக்கவில்லை ! இப்படி தெளிவு கிடைக்கபேறாத ஒரு யாத்திரிகன், “உண்மையான ஞானம் எங்கே இருக்கிறது?” என்று தேடிக் கொண்டிருந்தான். அவன் மூன்று மலைகளை ஏற வேண்டும் என்று ஒரு முனிவர் கூறினார். முதல் மலை தங்கம் நிறைந்தது. யாத்திரிகன் ஏறும்போது, பலர் தங்கத்தை சேகரித்து, சண்டையிட்டு, விழுந்து கொண்டிருந்தனர். அவன் உணர்ந்தான்: பேராசை மனிதனை அழிக்கிறது. இரண்டாவது மலை இருண்டது. அங்கு புயல், மிருகங்கள், பயம் நிறைந்திருந்தது. யாத்திரிகன் தைரியமாக நடந்தான். அவன் உணர்ந்தான்: பயத்தை வென்றால் தான் முன்னேற்றம். மூன்றாவது மலை எளிமையாக இருந்தது. அங்கு சிறிய குடில்கள், விவசாயிகள், சிரிப்பு, அமைதி இருந்தது. யாத்திரிகன் உணர்ந்தான்: உண்மையான ஞானம் எளிமையிலும் திருப்தியிலும் தான். அவன் மூன்று மலைகளையும் கடந்து, முனிவரிடம் திரும்பினான். முனிவர் சிரித்துக் கொண்டு, “நீ உண்மையை கண்டுபிடித்தாய். பேராசையை வென்று, பயத்தை எதிர்கொண்டு, எளிமையில் வாழ்ந்தால் தான் வாழ்க்கை முழுமை பெறும்” என்றார். நெறி: வாழ்க்கையின் உண்மையான உயரம், செல்வம் அல்ல; தைரியம், எளிமை, திருப்தி தான் ஒரு பழமையான இராச்சியத்தில், ஒரு கருமாந்திரவாதி வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் “எனக்கு உலகின் மிகப் பெரிய சக்தி வேண்டும்” என்று ஆசைப்பட்டான். அவன் மூன்று மந்திரங்களை கற்றுக்கொண்டான். முதல் மந்திரம்: அழிவு அவன் அதை பயன்படுத்தியபோது, நகரங்கள் சிதைந்தன. மக்கள் அவனை வெறுத்தனர். இரண்டாவது மந்திரம்: பேராசை அவன் அதை பயன்படுத்தியபோது, தங்கம், வைரம் கிடைத்தது. ஆனால் அவன் தனிமையில் விழுந்தான். மூன்றாவது மந்திரம்: அன்பு அவன் அதை பயன்படுத்தியபோது, மக்கள் அவனை மதித்தனர், நம்பினர். அவன் உணர்ந்தான்: “அழிவும் பேராசையும் தற்காலிகம்; அன்பும் நம்பிக்கையும் தான் நிலையான சக்தி.” அவன் அந்த நாளிலிருந்து, தனது மந்திரத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்தினான். இராச்சியம் வளமாகியது. நெறி: உண்மையான சக்தி அழிவிலும் பேராசையிலும் இல்லை; அன்பிலும் நம்பிக்கையிலும் தான்.


STORY TALKS - நமது சுதந்திரமும் அமைக்கும் எதிர்காலமும் !




ஒரு காட்டில் ஒரு பறவை வாழ்ந்து வந்தது. ஒருநாள், இரண்டு மனிதர்கள் அதை பிடித்து, தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர். முதல் மனிதன், அந்தப் பறவைக்கு தங்கக் கூண்டு செய்தான். அது அழகாக இருந்தாலும், பறவைக்கு சுதந்திரம் இல்லை. இரண்டாவது மனிதன், சாதாரண மரக் கூண்டு செய்தான்; ஆனால் அவன் தினமும் பறவையை வெளியே விடுவான், பறவை சுதந்திரமாக பறந்து, மீண்டும் திரும்பி வந்தது. சில நாட்களில், தங்கக் கூண்டில் இருந்த பறவை சோகமாகி, பாடுவதை நிறுத்தியது. ஆனால் மரக் கூண்டில் இருந்த பறவை மகிழ்ச்சியுடன் பாடியது. மக்கள் அதிர்ச்சியடைந்து, “எப்படி தங்கக் கூண்டில் இருந்த பறவை சோகமாக, மரக் கூண்டில் இருந்த பறவை மகிழ்ச்சியாக இருக்கிறது?” என்று கேட்டனர். அப்போது அந்த இரண்டாவது மனிதன் சொன்னான்: “அழகு, செல்வம், தங்கம் எல்லாம் சுதந்திரத்தை விட பெரியது அல்ல. பறவைக்கு சுதந்திரம் தான் உண்மையான மகிழ்ச்சி.”நெறி: வாழ்க்கையில் சுதந்திரம் தான் மிகப் பெரிய செல்வம். வெளிப்படையான அழகு, செல்வம் எல்லாம் தற்காலிகம்; சுதந்திரம், மகிழ்ச்சி தான் நிலையானது.


ஒரு நகரத்தில், ஒரு புகழ்பெற்ற ஜோதிடர் வாழ்ந்து வந்தார். மக்கள் அவரிடம் எதிர்காலம் பற்றி கேட்பார்கள். ஒருநாள், ஒரு இளைஞன் வந்து, “என் வாழ்க்கை எப்படி இருக்கும்?” என்று கேட்டான். ஜோதிடர் அவனுக்கு ஒரு கண்ணாடி கொடுத்து, “இதில் உன் எதிர்காலம் தெரியும்” என்றார். இளைஞன் கண்ணாடியில் பார்த்தான். முதலில், அவன் தங்கம், வைரம், செல்வம் நிறைந்த வாழ்க்கையைப் பார்த்தான். அவன் மகிழ்ச்சியடைந்தான். ஆனால் சில நொடிகளில், கண்ணாடி மாறி, அவன் தனிமையில், சோகத்தில் வாழும் காட்சியை காட்டியது. அவன் பயந்தான் அவன் ஜோதிடரிடம் கேட்டான்: “எது உண்மையான எதிர்காலம்?” ஜோதிடர் சிரித்துக் கொண்டு, “இரண்டும் உன் கையில் தான். பேராசையால் வாழ்ந்தால், தனிமை வரும். உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால், செல்வமும் மகிழ்ச்சியும் வரும். கண்ணாடி உனக்கு இரண்டு வழிகளையும் காட்டியது. தேர்வு உன்னுடையது” என்றார்.நெறி: எதிர்காலம் முன்கூட்டியே தீர்மானிக்கப்படவில்லை. நம் தேர்வுகளே நம் வாழ்க்கையை உருவாக்குகின்றன.

STORY TALKS - நமது பிரச்சனைகளை தூரமாக வைத்து பார்க்க வேண்டும் !

 



ஒரு இளம் ஓவியர் ஆற்றங்கரையில் அமர்ந்து, தனது கன்வாஸை முழங்காலில் வைத்து, ஆற்றின் ஒளிரும் அழகை வரைய முயன்றார். அவர் மிக அருகில் அமர்ந்ததால், நீர்த்துளிகள் தூரிகையை நனைத்தன; சூரிய ஒளியின் பிரகாசம் கண்களை மங்கச் செய்தது. பல மணி நேரம் முயன்றும், ஓவியம் சரியாக அமையவில்லை. ஆற்றின் பெருமை அவரது பார்வைக்கு மறைந்துவிட்டது.

அப்போது, வழியாக வந்த ஒரு விருந்தினர் ஓவியர் அவரைக் கவனித்தார். இளைஞனின் போராட்டத்தை பார்த்து மெதுவாகச் சிரித்தார். “நீ மிகவும் அருகில் அமர்ந்திருக்கிறாய்,” என்றார். “ஆற்றை அதன் விளிம்பிலிருந்து வரைய முடியாது. கொஞ்சம் பின்வாங்கி அமர்ந்தால், அதன் முழு அழகையும் காண முடியும்.” இளம் ஓவியர் முதலில் தயங்கினார். 

ஆனால் விருந்தினரின் அமைதியான நம்பிக்கை அவரை மாற்றியது. அவர் சில அடிகள் பின்வாங்கி, உயர்ந்த இடத்தில் அமர்ந்தார். அப்போது ஆற்றின் வளைவுகள், பிரதிபலிப்புகள், பெருமை அனைத்தும் தெளிவாகக் காட்சியளித்தன.

புதிய பார்வையிலிருந்து, இளம் ஓவியரின் தூரிகை எளிதாக ஆடியது. அவர் நாள் முழுவதும் தவறவிட்ட அழகை இப்போது பிடித்தார். நன்றி சொல்ல அவர் திரும்பியபோது, விருந்தினர் ஓவியர் சிரித்தபடி சொன்னார்: “பார்வையே கலைக்கும், வாழ்க்கைக்கும் ஆன்மா. சில நேரங்களில் அழகை உணர, பின்வாங்க வேண்டும்.” அந்தப் பாடம் இளம் ஓவியரின் மனதில் என்றும் பதிந்தது.

STORY TALKS - நமது வாழ்க்கையின் பொக்கிஷங்கள் !

  



ஒரு இளைஞன், “நான் உலகின் மிகப் பெரிய பொக்கிஷத்தை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கனவு கண்டான். அவன் ஒரு பழமையான கோவிலுக்குள் சென்றான். அங்கு மூன்று கதவுகள் இருந்தன. முதல் கதவு தங்கத்தால் ஆனது; இரண்டாவது கதவு வைரத்தால் ஆனது; மூன்றாவது கதவு பழைய மரத்தால் ஆனது.அவன் முதலில் தங்கக் கதவைத் திறந்தான். உள்ளே சென்றபோது, மாயை மட்டுமே இருந்தது. பின்னர் வைரக் கதவைத் திறந்தான்; அங்கு வலையிலும் ஆபத்திலும் சிக்கினான். இறுதியில், அவன் மரக் கதவைத் திறந்தான். அது மிகவும் எளிமையாக இருந்தாலும், உள்ளே உண்மையான அறிவின் நூல்கள் இருந்தன. அவன் உணர்ந்தது: “உண்மையான பொக்கிஷம் தங்கம், வைரம் அல்ல; அறிவும் அனுபவமும் தான்.” அந்த அறிவால், அவன் தனது வாழ்க்கையை வளமாக்கினான். வெளிப்படையான செல்வம் தற்காலிகம்; அறிவும் அனுபவமும் தான் நிலையான செல்வம்.

ஒரு பெரிய இராச்சியத்தில், ஒரு அரசன் தனது மூன்று முக்கிய ஆலோசகர்களை அழைத்தார். “நான் உங்களின் அறிவையும் நேர்மையையும் சோதிக்க விரும்புகிறேன்” என்றார். அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு பானை கொடுத்து, “இதில் விதைகளை விதையுங்கள். சில மாதங்களில், யாருடைய பானை மலர்ந்திருக்கும் என்பதைப் பார்த்து, என் வாரிசைத் தேர்ந்தெடுப்பேன்” என்றார். முதல் ஆலோசகர், விதைகள் வளரவில்லை என்று பார்த்ததும், ரகசியமாக புதிய விதைகளை வாங்கி விதைத்தான். இரண்டாவது ஆலோசகர், மலர்கள் விரைவாக மலர வேண்டும் என்று, மந்திரவாதியின் உதவியை நாடினான். மூன்றாவது ஆலோசகர், விதைகள் வளரவில்லை என்றாலும், அவற்றை அப்படியே பராமரித்தான். சில மாதங்கள் கழித்து, அரசன் பானைகளைப் பார்த்தார். முதல் இருவரின் பானைகளில் மலர்கள் மலர்ந்திருந்தன; மூன்றாவது ஆலோசகரின் பானை வெறுமையாக இருந்தது. ஆனால் அரசன் சிரித்துக் கொண்டு, “நான் உங்களுக்கு கொடுத்த விதைகள் அனைத்தும் சுடப்பட்டவை. அவை ஒருபோதும் வளராது. உண்மையைச் சொல்லிய ஒரே மனிதன் நீ தான். நீயே என் வாரிசு” என்றார். நேர்மையே மிகப் பெரிய வலிமை. பொய்யால் வெற்றி கிடைத்தாலும், அது நிலையானதல்ல. உண்மையைப் பிடித்திருப்பவர்களே இறுதியில் வெற்றி பெறுவார்கள்.

ஒரு இளைஞன், “நான் உலகின் மிகப் பெரிய சாகசத்தைச் செய்ய வேண்டும்” என்று கனவு கண்டான். அவன் ஒரு பழமையான குகைக்குள் சென்றான். அங்கு மூன்று சோதனைகள் இருந்தன. முதல் சோதனை: “பேராசையை வெல்ல வேண்டும்.” அவன் தங்கம் நிறைந்த அறையைப் பார்த்தான்; ஆனால் அதைத் தொடாமல் கடந்து சென்றான். இரண்டாவது சோதனை: “பயத்தை வெல்ல வேண்டும்.” அவன் இருண்ட அறைக்குள் சென்றான்; அங்கு பாம்புகள், சத்தங்கள், மாயைகள் இருந்தன. ஆனால் அவன் தைரியமாக நடந்தான். மூன்றாவது சோதனை: “அறிவை பயன்படுத்த வேண்டும்.” அங்கு ஒரு புதிர் இருந்தது. அவன் பொறுமையுடன் யோசித்து, சரியான பதிலை கண்டுபிடித்தான். அனைத்து சோதனைகளையும் கடந்து சென்றபோது, அவன் உண்மையான பொக்கிஷத்தை கண்டான். அது தங்கம், வைரம் அல்ல; அறிவு, தைரியம், மற்றும் பேராசையற்ற மனம் தான். அந்த மூன்று குணங்களே அவன் வாழ்க்கையை வளமாக்கின. சாகசத்தில் வெற்றி பெற, பேராசையை வெல்லவும், பயத்தை எதிர்கொள்ளவும், அறிவை பயன்படுத்தவும் வேண்டும்

STORY TALKS - நமது மனதுக்குள் மனித தன்மை வேண்டும் மக்களே !!




திரு நெல்சன் மண்டேலா அவர்கள் வாழ்க்கையில் ஒரு நாள் - அந்த ஜனாதிபதி தனது பாதுகாப்பு குழுவுடன் உணவகத்திற்குள் நுழைந்தார். அவரின் வருகை அனைவரிடமும் அமைதியான மரியாதையை ஏற்படுத்தியது. அவர் தனது மேசையில் அமர்ந்தபோது, ஒரு மூலையில் தனியாக அமர்ந்திருந்த ஒருவரைக் கவனித்தார். 

உடனே, அந்த மனிதரை அழைத்து வருமாறு தனது உதவியாளர்களிடம் கூறினார். அந்த மனிதர் நடுங்கிய கைகளுடன், பதட்டமாக வந்து அமர்ந்தார். ஜனாதிபதி அவரை அன்புடன் வரவேற்று, உணவை வழங்கினார். ஆனால் அந்த மனிதர் தன் தட்டில் கிட்டத்தட்ட எதையும் தொடாமல், மிகுந்த சிரமத்துடன் இருந்தார்.

உணவு முடிந்ததும், கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு பயத்துடன் என்னை மன்னித்துவிடுங்கள், நான் இங்கே இருந்து சென்றாக வேண்டும் என்று வேகமாக அந்த விருந்தினர் வெளியேறினார். ஜனாதிபதியின் தோழர்கள் குழப்பமடைந்தனர். ஏன் அவர் இவ்வளவு பதட்டமாக இருந்த மனிதரை அழைத்தார் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். 

அப்போது ஜனாதிபதி விளக்கினார்: அந்த மனிதர் தான் அவர் நீண்ட காலம் சிறையில் இருந்தபோது காவலராக இருந்தவர். அந்த காவலர் அன்பாக நடந்து கொள்ளவில்லை - மாறாக அடித்தும் துன்புறுத்தியும் கைதிகளை கொடுமை செய்து இருக்கிறார். இன்று ஜனாதிபதியாக அமர்ந்து இருந்ததும் குற்ற உணர்வால் வெளியே சென்றுவிட்டார். இந்த சிறை காவலர் வெறும் சம்பளம் வாங்கிவிட்டது அவர் சந்தித்த கொடுமையான அமைப்பின் பிரதிநிதியாக இருந்தார். மிகவும் அதிகமான துன்பங்களை கொடுத்து இருந்தாலும், பழிவாங்காமல், ஜனாதிபதி அவருக்கு மரியாதை காட்டினார். அவரது தலைமைத்துவம் பழிவாங்குதலால் அல்ல, சமரசத்தால் நிரம்பியிருந்தது என்பதை அவர் காட்டினார்.

ஜனாதிபதியின் வார்த்தைகள் ஒரு நல்ல அர்த்தத்தை கொடுத்தது என்பதை விட மக்களுக்கு ஆழமான பாடத்தை தந்தன. உண்மையான சுதந்திரம் என்பது சிறைச்சுவர்களை விட்டு வெளியேறுவது மட்டுமல்ல வெறுப்பு மற்றும் பழிவாங்குதலிலிருந்து விடுபடுவதும் ஆகும். காவலரை மேசையில் அழைத்தது, மன்னிப்பு கொடுப்பதும் நன்றாக நடந்துகொள்வதும் வெறுப்பை விட வலிமையானது என்பதை வெளிப்படுத்தியது. 

ஒரு நாட்டை குணப்படுத்த மனிதத்தன்மை தேவை என்பதை அவர் எடுத்துக்காட்டினார். அந்த அமைதியான உணவகத்தில், ஜனாதிபதி ஒரு வேதனையான நினைவைக் கருணையின் கதையாக மாற்றினார். சமரசமே நிலையான அமைதியின் அடித்தளம் என்பதை அவர் கற்றுக் கொடுத்தார்

STORY TALKS - குறைத்து மதிப்பிடுதல் தவறானது !

 



ஒரு காடு பகுதியில், ஒரு முயலும் ஒரு ஆமையும் வாழ்ந்து வந்தன. முயல் மிகவும் வேகமாக ஓடக்கூடியது; அது தனது திறமையைப் பற்றி பெருமை பேசிக் கொண்டிருந்தது. “என்னை விட வேகமாக யாரும் ஓட முடியாது” என்று அது அடிக்கடி கூறியது. ஆமை அமைதியாக இருந்தாலும், முயலின் பெருமையை கேட்டு சிரித்தது. ஒருநாள், ஆமை முயலை சவால் செய்தது: “நாம் ஓட்டப்பந்தயம் போடலாம். யார் வென்றார் என்று பார்ப்போம்.” முயல் அதை கேட்டு சிரித்தது. “நீ என்னை வெல்ல முடியாது. ஆனால் சரி, போட்டி போடலாம்” என்று சம்மதித்தது. பந்தயம் தொடங்கியது. முயல் மிக வேகமாக ஓடி, ஆமையை வெகுதூரம் பின்தள்ளியது. “ஆமை மிகவும் மெதுவாக வருகிறது. நான் சிறிது நேரம் தூங்கிக் கொண்டாலும், அது என்னை எட்ட முடியாது” என்று நினைத்த முயல், ஒரு மரத்தின் கீழ் படுத்து தூங்கியது. ஆமை மெதுவாக, ஆனால் தொடர்ந்து நடந்தது. அது ஒருபோதும் நிற்கவில்லை, சோர்வடையவில்லை. இறுதியில், முயல் தூங்கிக் கொண்டிருக்கும் போது, ஆமை இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்தக் கதையின் நெறி: மெதுவாக இருந்தாலும், தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். வேகம் மட்டும் போதாது; பொறுமையும், நிலைத்த முயற்சியும் முக்கியம். முயல் தனது பெருமையாலும் அலட்சியத்தாலும் தோல்வியடைந்தது; ஆனால் ஆமை தனது பொறுமையாலும் உறுதியாலும் வெற்றி பெற்றது. இந்தக் கதை நமக்கு நினைவூட்டுவது: வாழ்க்கையில் வெற்றி பெற, தொடர்ந்து முயற்சி செய்வதே மிகப் பெரிய வலிமை


ஒரு காட்டில், ஒரு சிங்கம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. அப்போது ஒரு சிறிய எலி அதன் உடலின் மேல் ஓடிக் கொண்டிருந்தது. சிங்கம் கோபமாக விழித்து, எலியைப் பிடித்தது. “நீ என்னை தொந்தரவு செய்தாய், உன்னை சாப்பிடுவேன்” என்று சிங்கம் கர்ஜித்தது. எலி பயந்து, “தயவு செய்து என்னை விடுங்கள். ஒருநாள் நான் உங்களுக்கு உதவலாம்” என்று கேட்டது. சிங்கம் சிரித்தது. “நீ போன்ற சிறியவன் என்ன உதவி செய்ய முடியும்?” என்று நினைத்தாலும், அது எலியை விடுவித்தது சில நாட்கள் கழித்து, சிங்கம் வேட்டைக்காரர்களால் வலையில் சிக்கியது. அது பலமாக போராடினாலும், வலையை முறிக்க முடியவில்லை. அப்போது அந்தச் சிறிய எலி வந்தது. அது தனது கூர்மையான பற்களால் வலையை மெதுவாகக் கடித்து, சிங்கத்தை விடுவித்தது. சிங்கம் அதிர்ச்சியடைந்து, “நீ உண்மையில் எனக்கு உதவினாய். நான் உன்னை சிறியவன் என்று நினைத்தேன், ஆனால் உன் உதவி மிகப் பெரியது” என்று நன்றியுடன் கூறியது. இந்தக் கதையின் நெறி: சிறியவர்களும் பெரிய உதவி செய்ய முடியும். ஒருவரின் வலிமையை, அளவை, நிலையைப் பார்த்து மதிப்பிடக் கூடாது. எலி போல, சிறியவர்கள் கூட தைரியத்தாலும் அறிவாலும் பெரியவர்களுக்கு உதவ முடியும். இந்தக் கதை நமக்கு நினைவூட்டுவது: கருணையும் நம்பிக்கையும் எப்போதும் பலன் தரும்.

TECH TALKS - மொபைல் ஃபோன் காமிராக்களின் வளர்ச்சி !!

 


📸 மொபைல் கேமரா வளர்ச்சி: VGA-இலிருந்து AI சக்தி வரை

சுருக்கம்: 2000களின் ஆரம்பத்தில் VGA சென்சார்களுடன் தொடங்கிய மொபைல் கேமரா, இன்று AI-ஆல் இயக்கப்படும் மல்டி-லென்ஸ் அமைப்புகளாக வளர்ந்து, 8K வீடியோ மற்றும் தொழில்முறை புகைப்படங்களை உருவாக்கும் நிலைக்கு வந்துள்ளது.

1. ஆரம்ப VGA காலம் (2000–2005)

  • முதல் கேமரா போன்கள் 0.3 MP VGA சென்சார் கொண்டிருந்தன.
  • ஜப்பான், ஐரோப்பாவில் பிரபலமாகி பின்னர் உலகம் முழுவதும் பரவின.
  • அந்த காலத்தில் கேமரா ஒரு புதிய அம்சம் மட்டுமே; முக்கிய கருவி அல்ல.

2. மெகாபிக்சல் போட்டி (2006–2012)

  • தயாரிப்பாளர்கள் தீர்மானத்தை உயர்த்த போட்டியிட்டனர்: 2 MP → 5 MP → 8 MP → 12 MP.
  • Nokia N95 (2007), iPhone 4 (2010) புகைப்பட தரத்தில் புதிய அளவுகோல் அமைத்தன.
  • Autofocus, LED Flash, 720p வீடியோ பதிவு ஆகியவை வழக்கமான அம்சங்களாகின.

3. மல்டி-லென்ஸ் காலம் (2013–2018)

  • Dual-lens systems (wide + telephoto) அறிமுகம்.
  • HTC One M8 (2014), iPhone 7 Plus (2016) மூலம் Portrait Mode பிரபலமானது.
  • OIS (Optical Image Stabilization) குறைந்த வெளிச்ச புகைப்படங்களை மேம்படுத்தியது.
  • வீடியோ பதிவு 4K resolution வரை முன்னேறியது.

4. AI சக்தி பெற்ற கேமரா (2019–இன்றுவரை)

  • Triple மற்றும் Quad-lens அமைப்புகள் (wide, ultra-wide, telephoto, macro).
  • AI அம்சங்கள்: Scene recognition, Night mode, Computational HDR.
  • Snapdragon, Apple Neural Engine, Google Tensor போன்ற on-device AI chips real-time image enhancement வழங்குகின்றன.
  • Flagship போன்கள் 8K வீடியோ, Cinematic Mode ஆதரிக்கின்றன.
  • 2024-க்குள், உலகளாவிய புகைப்படங்களில் 85–90% ஸ்மார்ட்போன்களில் எடுக்கப்பட்டது.

📊 ஒப்பீட்டு சுருக்கம்

காலம் தீர்மானம் முன்னேற்றம் உதாரண சாதனங்கள்
2000–2005 VGA (0.3 MP) அடிப்படை சென்சார் Sharp J-SH04, Nokia 7650
2006–2012 2–12 MP Autofocus, Flash Nokia N95, iPhone 4
2013–2018 12–20 MP Dual lenses, OIS HTC One M8, iPhone 7 Plus
2019–2025 48–200 MP AI, Multi-lens, 8K Video Samsung Galaxy S23 Ultra, Google Pixel 8 Pro

🌍 சமூக தாக்கம்

  • சோஷியல் மீடியா வளர்ச்சி: Instagram, Snapchat, TikTok போன்றவை மொபைல் கேமரா காரணமாக வெற்றியடைந்தன.
  • புகைப்பட ஜனநாயகம்: தொழில்முறை தர புகைப்படங்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கின்றன.
  • கலாச்சார மாற்றம்: ஸ்மார்ட்போன்கள் Point-and-shoot கேமராக்களை மாற்றி, தனி கேமரா விற்பனையை குறைத்தன.

✅ முடிவு: மொபைல் கேமரா, ஒரு புதிய அம்சம் என்ற நிலையிலிருந்து, இன்று ஸ்மார்ட்போன் விற்பனையை இயக்கும் மைய அம்சமாக மாறியுள்ளது.

MUSIC TALKS - ATHI KAALAI KATRE NILLU - ITHAMAANA PAADAL SOLLU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



அதிகாலை காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே 
மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே

இளமையின் அலைகளில்
பருவமும் மிதந்தது
இமைகளின் அசைவினில்
உலகமும் பணிந்தது

காலை மேகம் சோலை ஆகும்
வானம் எங்கள் சாலை ஆகும்
தாமரை குடை விரிக்கும்

மலரினம் சிரித்திட
திசைகளும் எழுந்தது
பொழுதுகள் விடிந்திட
தவங்களும் புரிந்தது

வானவில்லின் வண்ணம் யாவும்
பாதம் வந்தே கோலம் போடும்
காவியம் தலை வணங்கும்

அதிகாலை காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே 
மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே


STORY TALKS - நமது உழைப்பு நமது உயர்வு !

 


ஒரு வயதான விவசாயி வாழ்நாள் முழுவதும் கடின உழைப்பில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் சோம்பேறிகளாகவும், அடிக்கடி ஒருவருடன் ஒருவர் சண்டையிடுபவர்களாகவும் இருந்தனர். வயது முதிர்ந்து பலவீனமடைந்த விவசாயி, தன் மரணத்திற்குப் பிறகு நிலம் என்ன ஆகும் என்று கவலைப்பட்டார். மகன்கள் ஒற்றுமையையும் உழைப்பின் மதிப்பையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். ஒருநாள் அவர் அவர்களை அழைத்து, “நமது வயலில் ஒரு பெரிய பொக்கிஷம் புதைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். மகன்கள் தங்கம், வெள்ளி கிடைக்கும் எனக் கற்பனை செய்து மகிழ்ந்தனர். விவசாயி சிரித்துக் கொண்டு, “அதை கண்டுபிடிக்க, நிலத்தை முழுவதும் தோண்டுங்கள்” என்றார்.

மகன்கள் உடனே வேலைக்கு இறங்கினர். அவர்கள் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் தோண்டினர், மண்ணை மீண்டும் மீண்டும் புரட்டினர். ஆனால் எங்கும் பொக்கிஷம் கிடைக்கவில்லை. விரக்தியடைந்த அவர்கள் தந்தையிடம், “பொக்கிஷம் எங்கே?” என்று கேட்டனர். விவசாயி அமைதியாக, “நீங்கள் ஏற்கனவே அதை கண்டுபிடித்துவிட்டீர்கள்” என்றார். மகன்கள் குழப்பமடைந்தனர். சில நாட்களில் மழை பெய்தது. நிலம் நன்றாக தோண்டப்பட்டிருந்ததால், அது மிகச் செழிப்பானதாக மாறியது. அந்த ஆண்டில் வயல் மிகுந்த விளைச்சலை அளித்தது. அப்போது தான் மகன்கள் உணர்ந்தனர்: உண்மையான பொக்கிஷம் தங்கம் அல்ல, கடின உழைப்பின் பலனும், செழிப்பான நிலமும் தான்.

அந்த நாளிலிருந்து சகோதரர்கள் ஒற்றுமையுடன் வேலை செய்தனர். அவர்கள் இனி சண்டையிடவில்லை; வயல் வளமாகியது. தந்தையின் ஞானம் அவர்களுக்கு தெளிவானது: ஒற்றுமையும் உழைப்பும் தான் உண்மையான செல்வம். தங்கம், வெள்ளி மறைந்து போகலாம்; ஆனால் உழைப்பின் பலனும் குடும்பத்தின் வலிமையும் என்றும் நிலைத்திருக்கும். இந்தக் கதை நமக்கு நினைவூட்டுவது: வாழ்க்கையின் மிகப் பெரிய பொக்கிஷம், நமது உழைப்பும் ஒற்றுமையும் தான்.

STORY TALKS - மனச்சோர்வில் எடுக்கும் முடிவுகள் ஆபத்தானது !

தச்சன் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மரம், ஆணி, கல் ஆகியவற்றோடு கழித்தார். அவர் கட்டிய வீடுகள் நகரத்தில் பெருமையாக நின்றன. அவரது கைகள் கடினமாகி, முதுகு வளைந்திருந்தாலும், அவரது பெயர் நம்பிக்கைக்குரியதாக இருந்தது. மக்கள் அவரது கைவினையை மதித்தனர். காலம் செல்லச் செல்ல அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. குடும்பத்தோடு நேரம் செலவிட வேண்டும், தனது உழைப்பின் பலனை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தார். ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது, பல ஆண்டுகளாக அவரை நம்பியிருந்த முதலாளி, “இன்னும் ஒரு வீடு மட்டும் கட்டி விட்டு ஓய்வு எடு” என்று கேட்டார். மனம் சோர்ந்திருந்தாலும் அவர் சம்மதித்தார். ஆனால் அவரது மனம் வேலைக்குள் இல்லை. விரைவில் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மலிவான மரம் வாங்கினார், பலவீனமான சிமெண்டு பயன்படுத்தினார், முன்பு கவனித்த சிறு விபரங்களை புறக்கணித்தார். வீடு எழுந்தது, ஆனால் அதில் அவரது பழைய கைவினையின் வலிமையும் ஆன்மாவும் இல்லை.


வீடு முடிந்ததும் முதலாளி வந்து பார்த்தார். அறைகளில் நடந்து, சுவர்களைத் தொட்டு, திருப்தியுடன் சிரித்தார். பின்னர் தச்சனிடம் வீட்டு சாவியை கொடுத்து, “இந்த வீடு உனக்கே. நீண்ட கால சேவைக்கு என் பரிசு இது” என்றார். தச்சன் அதிர்ச்சியடைந்தார். அவர் அலட்சியமாக, குறுக்குவழிகளில், மலிவான பொருட்களால் கட்டிய வீடு இப்போது அவருக்கே சொந்தமானது என்பதை உணர்ந்தார். அவர் புறக்கணித்த பிளவுகள், அவர் குறைத்த மூலைகள், பலவீனமான அடித்தளம் — இவை அனைத்தும் இனி அவரையே பாதிக்கப் போகின்றன. அவர் சாதாரண வேலை என்று நினைத்தது, உண்மையில் அவரது வாழ்க்கையின் மிகத் தனிப்பட்ட திட்டமாகி விட்டது.


அந்த நாளிலிருந்து தச்சன் ஒரு கனமான பாடத்தை மனதில் சுமந்தார். வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்முடைய வீட்டைக் கட்டுவது போன்றதே என்பதை அவர் புரிந்தார். நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நாம் செலுத்தும் ஒவ்வொரு உழைப்பும், நாம் கவனிக்கும் ஒவ்வொரு விபரமும் — அல்லது புறக்கணிக்கும் விபரமும் — நம்முடைய வாழ்க்கையின் கட்டமைப்பாக மாறுகிறது. நாம் குறுக்குவழி தேடினால், நம்மையே ஏமாற்றுகிறோம்; நாம் சிறந்ததைச் செய்தால், வலிமையான, அழகான வாழ்க்கையை உருவாக்குகிறோம். இந்தக் கதை அவரது நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் பரவியது. அது நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உவமையாக மாறியது. வேலை, உறவுகள், தனிப்பட்ட வளர்ச்சி எதிலும் நாம் எப்போதும் நமக்கே சொந்தமான வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவூட்டியது. தச்சனின் வருத்தம், பிறருக்குப் பாடமாகியது: 

LIFE TALKS - மாற்றங்களும் முன்னேற்றங்களும் கொடுத்த தலைவர் !



சத்ய நாதெல்லா, 1967 ஆகஸ்ட் 19 அன்று ஹைதராபாத் நகரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு அரசு அதிகாரி; தாய் ஒரு சமஸ்கிருதம் பேராசிரியர். சிறுவயதில் அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். மானிப்பால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் (Manipal Institute of Technology) மின்சார பொறியியல் (Electrical Engineering) படித்தார். பின்னர் அமெரிக்காவுக்கு சென்று, University of Wisconsin–Milwaukee-இல் கணினி அறிவியல் (Computer Science) துறையில் Master’s பட்டம் பெற்றார். அதற்குப் பிறகு, University of Chicago Booth School of Business-இல் MBA முடித்தார். இந்த கல்வி பயணம், அவரை தொழில்நுட்பத்திலும், மேலாண்மையிலும் வல்லுநராக உருவாக்கியது.  

1992-ல் சத்ய நாதெல்லா Microsoft-இல் சேர்ந்தார். ஆரம்பத்தில் அவர் Windows NT திட்டத்தில் பணியாற்றினார். பின்னர், Microsoft-இன் Cloud Computing பிரிவை உருவாக்கும் முக்கிய பொறுப்பை ஏற்றார். Azure Cloud Platform-ஐ உருவாக்குவதிலும், அதை உலகளாவிய அளவில் வளர்ப்பதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். Cloud-ஐ Microsoft-இன் எதிர்காலமாக மாற்றியவர் நாதெல்லா என்பதே தொழில்நுட்ப உலகின் கருத்து. அவர் “தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் திறனை அதிகரிக்க வேண்டும், மாற்றி விடக்கூடாது” என்ற எண்ணத்துடன் செயல்பட்டார்.  

2014-ல், ஸ்டீவ் பால்மர் (Steve Ballmer) ஓய்வு பெற்றபோது, சத்ய நாதெல்லா Microsoft-இன் CEO-வாக நியமிக்கப்பட்டார். அப்போது Microsoft, Google, Apple, Amazon போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. நாதெல்லா, “Cloud First, Mobile First” என்ற புதிய தத்துவத்தை அறிமுகப்படுத்தினார். அவர் நிறுவனத்தின் பண்பாட்டை மாற்றினார் — “கற்றுக்கொள்வது, கேட்பது, மற்றும் இணைந்து செயல்படுவது” என்பதையே முக்கியமாகக் கொண்டார். அவரது தலைமையில், Microsoft Office 365, Azure, LinkedIn, GitHub போன்ற சேவைகள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தன.  

சத்ய நாதெல்லா, Microsoft-ஐ உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியவர். அவரது தலைமையில், Microsoft-இன் சந்தை மதிப்பு (Market Value) பல மடங்கு உயர்ந்தது. அவர் “Hit Refresh” என்ற புத்தகத்தை எழுதி, தனது வாழ்க்கை அனுபவங்களையும், Microsoft-இன் மாற்றங்களையும் பகிர்ந்தார். நாதெல்லா, தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், குடும்பத்திலும், மனிதநேயத்திலும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவர். அவரது மகன் Zain, சிறப்பு தேவைகள் கொண்டவர்; அதனால், “உணர்ச்சி பூர்வமான தலைமை” (Empathetic Leadership) என்பதையே அவர் தனது வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டார். இன்று, சத்ய நாதெல்லா, “தொழில்நுட்பம் + மனிதநேயம்” என்ற சமநிலையை உலகிற்கு காட்டிய முன்னோடி தலைவராக போற்றப்படுகிறார்.  



LIFE TALKS - ஒரு டென்னிஸ் சாதனையாளர் !



ரோஜர் பெடரர், 1981 ஆகஸ்ட் 8 அன்று ஸ்விட்சர்லாந்தின் பாசல் நகரில் பிறந்தார். சிறுவயதில் அவர் கால்பந்து மற்றும் டென்னிஸ் இரண்டிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் 8 வயதில், டென்னிஸ் தான் தனது வாழ்க்கையை மாற்றும் விளையாட்டு என்று உணர்ந்தார். அவர் மிகுந்த உழைப்புடன் பயிற்சி மேற்கொண்டார். 14 வயதில், ஸ்விட்சர்லாந்தின் தேசிய டென்னிஸ் மையத்தில் சேர்ந்து, தனது திறமையை உலகளாவிய அளவில் காட்டத் தொடங்கினார். ஆரம்பத்தில், அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்; தோல்வியால் கோபம் அடைவார். ஆனால் காலப்போக்கில், அவர் தனது மனநிலையை கட்டுப்படுத்திக் கொண்டு, “அமைதியான, அழகான விளையாட்டு வீரர்” என்ற அடையாளத்தை பெற்றார்

பெடரர், 2003-ல் தனது முதல் Wimbledon பட்டத்தை வென்றார். அதன்பின், அவர் உலக டென்னிஸ் வரலாற்றில் மிகப்பெரிய சாதனைகளை படைத்தார். மொத்தம் 20 Grand Slam பட்டங்களை வென்று, “GOAT” (Greatest of All Time) என்ற பட்டத்தை பெற்றார். அவரது விளையாட்டு பாணி — மென்மையான சர்வ், துல்லியமான ஷாட்கள், மற்றும் அழகான கால்நடை — ரசிகர்களை கவர்ந்தது. 310 வாரங்கள் உலகின் நம்பர் 1 வீரராக இருந்தார். Nadal, Djokovic போன்ற வீரர்களுடன் அவர் போட்டியிட்ட “Big Three” காலம், டென்னிஸ் வரலாற்றில் மிகச் சிறந்த காலமாக கருதப்படுகிறது.

2022-ல், 41 வயதில், ரோஜர் பெடரர் தனது ஓய்வை அறிவித்தார். Laver Cup போட்டியில் தனது கடைசி ஆட்டத்தை விளையாடியபோது, அவர் Nadal உடன் இணைந்து டபிள்ஸ் ஆடியது, உலகம் முழுவதும் ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்தியது. பெடரர், விளையாட்டில் மட்டுமல்ல, மனிதநேயத்திலும் முன்னோடி. அவர் Roger Federer Foundation மூலம் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்விட்சர்லாந்தில் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் நலத்திட்டங்களை நடத்துகிறார். இன்று, அவர் “டென்னிஸ் அரசன்” மட்டுமல்ல, “அழகான விளையாட்டு மற்றும் மனிதநேயத்தின் சின்னம்” என்றும் போற்றப்படுகிறார்.

STORY TALKS - சுற்றுசூழல் பாதிப்புக்காக குரல் கொடுத்த பெண்மணி !



கிரெட்டா துன்பெர்க், 2003 ஆம் ஆண்டு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார். சிறுவயதில் பள்ளியில் சுற்றுச்சூழல் பற்றிய பாடத்தில், “காலநிலை மாற்றம்” (Climate Change) குறித்து அறிந்தபோது, அது அவரை ஆழமாக பாதித்தது. உலகம் முழுவதும் பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து, விலங்குகள் அழிந்து கொண்டிருக்கும் நிலையில், பெரியவர்கள் இதைப் பற்றி கவலைப்படவில்லை என்பதே அவருக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. 11 வயதில், இந்த உணர்வு காரணமாக அவர் மன அழுத்தத்திற்கும், மனச்சோர்விற்கும் ஆளானார். ஆனால் அந்த வலி, அவரை “சுற்றுச்சூழலுக்காக போராட வேண்டும்” என்ற உறுதியுடன் நிறுத்தியது.

2018-ல், 15 வயதான கிரெட்டா, ஸ்வீடன் பாராளுமன்றம் முன் “School Strike for Climate” என்ற போராட்டத்தைத் தொடங்கினார். பள்ளிக்கு செல்லாமல், “எதிர்காலம் எங்கே?” என்ற கேள்வியுடன், “காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துங்கள்” என்ற கோரிக்கையை முன்வைத்தார். ஆரம்பத்தில், சிலர் மட்டுமே கவனித்தனர். ஆனால் சில வாரங்களில், அவரது போராட்டம் உலகம் முழுவதும் பரவியது. ஆயிரக்கணக்கான மாணவர்கள், “Fridays for Future” என்ற இயக்கத்தில் இணைந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளியை புறக்கணித்து, அரசுகளிடம் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை கோரத் தொடங்கினர். கிரெட்டா, “நீங்கள் எங்கள் எதிர்காலத்தை திருடுகிறீர்கள்” என்ற உரையால், உலக தலைவர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கிரெட்டா துன்பெர்க், ஐக்கிய நாடுகள் சபை, Davos Economic Forum, European Parliament போன்ற பல முக்கிய மேடைகளில் உரையாற்றினார். அவரது உரைகள், “How dare you?” போன்ற வலிமையான வார்த்தைகளால், உலகம் முழுவதும் இளைஞர்களுக்கு ஊக்கமளித்தன. அவர் Time Magazine Person of the Year (2019) விருதைப் பெற்றார். பலர் அவரை விமர்சித்தாலும், அவர் தனது நோக்கில் உறுதியுடன் இருந்தார். “நான் அரசியல்வாதி அல்ல, விஞ்ஞானி அல்ல; நான் ஒரு குழந்தை. ஆனால் உண்மையைச் சொல்வேன்” என்ற அவரது நிலைப்பாடு, உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் இயக்கத்திற்கு புதிய உயிர் ஊட்டியது. இன்று, கிரெட்டா துன்பெர்க், “இளைஞர்களின் குரல்” என்ற அடையாளமாக, காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி சின்னமாக உள்ளார்

STORY TALKS - நமது பலத்துக்கு கட்டுப்பாடுகள் அவசியம் இல்லை !



ஒரு பயணி ஒருமுறை சில யானைகள் சிறிய மரக் குச்சிகளுக்கு கட்டப்பட்டிருப்பதைப் பார்த்தார். அந்தப் பெரிய வலிமையான விலங்குகள், ஒரு காலில் கட்டப்பட்ட மெல்லிய கயிறால் மட்டுமே அடக்கப்பட்டிருந்தன. சங்கிலி இல்லை, கூண்டு இல்லை — வெறும் கயிறு. யானைகள் எளிதாகக் கயிறை முறித்து விட முடியும், ஆனால் அவை அமைதியாக நின்றன; தப்பிக்க முயற்சியே செய்யவில்லை. பயணி ஆச்சரியப்பட்டு, பயிற்சியாளரிடம் கேட்டார்: “இவ்வளவு வலிமையான யானைகள் ஏன் தப்பிக்க முயலவில்லை?” பயிற்சியாளர் பதிலளித்தார்: “அவை சிறிய குட்டிகளாக இருந்தபோது இதே கயிறை பயன்படுத்தினோம். அப்போது அது அவற்றை அடக்க வலிமையானதாக இருந்தது. அவை வளர்ந்தபின் கூட, கயிறை முறிக்க முடியாது என்று நம்பிக்கையோடு வாழ்ந்தன. இப்போது அவற்றின் வலிமை போதுமானதாக இருந்தாலும், கயிறு தடுக்கிறது என்று நினைக்கின்றன.”

பயணி அதிர்ச்சியடைந்தார். யானைகள் தங்களின் மனதில் உருவான தவறான நம்பிக்கையால் வாழ்ந்து கொண்டிருந்தன. அவற்றின் வலிமை அளவில்லாதது, ஆனால் பழைய நினைவுகள் அவற்றை அடக்கியிருந்தன. மரங்களைப் பிடுங்கும் சக்தி இருந்தும், சுதந்திரமாகச் சுற்றும் திறன் இருந்தும், அவை கட்டுப்பட்டிருந்தன. அந்த மெல்லிய கயிறு அவற்றின் சிறை இல்லை — அவற்றின் மனதில் பதிந்த பழைய நம்பிக்கையே உண்மையான சிறை. அந்தக் காட்சி மனிதர்களுக்கும் ஒரு உவமையாக மாறியது: பலர் தங்களின் வாழ்க்கையிலும் பழைய தோல்விகள், பயங்கள், சந்தேகங்கள் ஆகியவற்றின் கயிறால் கட்டப்பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கதையின் நெறி தெளிவானது: நம்முடைய எல்லைகள் பெரும்பாலும் நாமே உருவாக்கியவை. ஒருமுறை தோல்வியடைந்தோம் என்பதற்காக, அல்லது யாரோ “இது முடியாது” என்றார்கள் என்பதற்காக, அது எப்போதும் உண்மையாக இருக்காது. யானைகளைப் போல, பலர் பழைய நம்பிக்கைகளால் முயற்சியை நிறுத்துகிறார்கள். ஆனால் அந்தக் கயிறுகளை சவால் செய்தால், நம்முடைய வலிமையைச் சோதித்தால், தவறான எல்லைகளை ஏற்காமல் இருந்தால், நாம் நினைப்பதற்கும் அதிகமாக திறமைசாலிகளாக இருப்பதை கண்டுபிடிக்கிறோம். இந்தக் கதை நம்மை மனக் கயிறுகளை முறித்து, முழு திறனுடன் வாழ வேண்டும் என்று நினைவூட்டுகிறது

MUSIC TALKS - NEE PARTHA VIZHIGAL - NEE PARTHA NOIDIGAL - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 



✨❤️🌙  

நீ பார்த்த விழிகள் 👀💕  

நீ பார்த்த நொடிகள் ⏳💖 ஹம்ம் 🎶  

கேட்டாலும் வருமா ❓💞  

கேட்காத வரமா 🎁💓  

இது போதுமா 🌹🤔  

இதில் அவசரமா 💌🔥  

இன்னும் வேண்டுமா 🌸💭  

அதில் நிறைந்திடுமா 🌊💗  


நாம் பார்த்த நாள் 📅💘  

நம் வசம் வருமா 🤲❤️  

உயிர் தாங்குமா 💔🌹  

என் விழிகளில் முதல் வலி 😢💞  


நிஜமடி பெண்ணே 👩‍❤️‍👨🌙  

தொலைவினில் உன்னை 🌌💖  

நிலவினில் கண்டேன் 🌙✨ நடமாட 🚶‍♀️💕  

வலியடி பெண்ணே 💔🌹  

வரைமுறை இல்லை 🔥💞  

வதைக்கிறாய் என்னை மெதுவாக 🥀💘  


நிழல் தரும் இவள் பார்வை 👁️🌹  

வழி எங்கும் இனி தேவை 🛤️💖  

உயிரே உயிரே 💓🌟  

உயிர் நீதான் என்றால் 💞🌹  

உடனே வருவாய் 🏃‍♀️💘  

உடல் சாகும் முன்னால் ⚰️💔  


அனலின்றி குளிர் வீசும் ❄️🔥  

இது எந்தன் சிறை வாசம் 🏰💔  

இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே 💕🌹  

நிஜமடி பெண்ணே 👩‍❤️‍👨🌙  

தொலைவினில் உன்னை 🌌💖  

நிலவினில் கண்டேன் 🌙✨ நடமாட 🚶‍♀️💕  

வலியடி பெண்ணே 💔🌹  

வரைமுறை இல்லை 🔥💞  

வதைக்கிறாய் என்னை மெதுவாக 🥀💘  

ஓஹோ 🎶💖 ஓஓஹோஹோ 🎵❤️  

நீ பார்த்த விழிகள் 👀💕  

நீ பார்த்த நொடிகள் ⏳💖 ஹம்ம் 🎶  

கேட்டாலும் வருமா ❓💞  

கேட்காத வரமா 🎁💓  

இது போதுமா 🌹🤔  

இதில் அவசரமா 💌🔥  

இன்னும் வேண்டுமா 🌸💭  

அதில் நிறைந்திடுமா 🌊💗  

நாம் பார்த்த நாள் 📅💘  

நம் வசம் வருமா 🤲❤️  

உயிர் தாங்குமா 💔🌹  

என் விழிகளில் முதல் வலி 😢💞  


-

STORY TALKS - ஆசைகளுக்கு அளவு வைக்க வேண்டும் !

 



ஒரு நாய் ஒருநாள் ஒரு பெரிய எலும்பை கண்டுபிடித்தது. அது மிகவும் மகிழ்ச்சியடைந்து, அந்த எலும்பை வாயில் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. வழியில் ஒரு பாலம் வந்தது. பாலத்தின் கீழே நீர் ஓடிக் கொண்டிருந்தது. நாய் பாலத்தின் நடுவில் நின்றபோது, நீரில் தனது பிரதிபலிப்பை பார்த்தது. அந்த பிரதிபலிப்பு மற்றொரு நாய் எலும்பை பிடித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. “அந்த நாயின் எலும்பு எனது எலும்பை விட பெரியதாக இருக்கிறது” என்று நினைத்த நாய் பேராசையால் ஆட்கொள்ளப்பட்டது, அந்த எலும்பை பெற வேண்டும் என்ற ஆசையில், நாய் தனது வாயைத் திறந்து, பிரதிபலிப்பின் மீது குரைத்தது. ஆனால் வாயைத் திறந்தவுடன், தனது எலும்பு வாய்க்கால் நீரில் விழுந்து போய்விட்டது. பிரதிபலிப்பு மறைந்தது, எலும்பும் போய்விட்டது. பேராசையால், நாய் தனது சொந்த எலும்பையும் இழந்துவிட்டது. தண்ணீரில் குதித்து நீச்சல் அடித்து பார்த்தாலும் ஆழத்தில் விழுந்ததால் கிடைக்கவே இல்லை, அது மிகவும் வருத்தமடைந்து, “எனக்கு இருந்ததை மதிக்காமல், அதிகம் விரும்பியதால் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்” என்று உணர்ந்தது. இந்தக் கதையின் நெறி: பேராசை எப்போதும் நம்மை இழப்புக்கே கொண்டு செல்லும். நாம் பெற்றிருப்பதை மதிக்காமல், எப்போதும் அதிகம் விரும்பினால், நம்முடைய கையிலிருந்த சிறிய செல்வத்தையும் இழக்க நேரிடும். திருப்தி, நன்றி, மற்றும் எளிமை தான் வாழ்க்கையை வளமாக்கும். ஒரு காகம் மிகவும் தாகமாக இருந்தது. அது நீர் தேடி அலைந்தது. இறுதியில், ஒரு குடுவையில் சிறிது தண்ணீர் இருப்பதை கண்டது. ஆனால் தண்ணீர் மிகவும் அடியில் இருந்ததால், காகம் அதை எட்ட முடியவில்லை. முதலில் அது விரக்தியடைந்தது. ஆனால் பின்னர் யோசித்து, அருகிலிருந்த சிறிய கற்களை ஒன்றன்பின் ஒன்றாகக் குடுவையில் போட்டது. மெதுவாக தண்ணீர் மேலே எழுந்தது. காகம் மகிழ்ச்சியுடன் தண்ணீர் குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டது. இந்தக் கதை நமக்கு ஒரு பெரிய பாடம் தருகிறது. காகம் சோம்பலாக இருந்திருந்தால், அது தாகத்தால் இறந்திருக்கும். ஆனால் அது யோசித்து, முயற்சி செய்து, பொறுமையுடன் செயல்பட்டதால், வெற்றி பெற்றது. வாழ்க்கையிலும் சிரமங்கள் வரும். சில நேரங்களில் தீர்வு எளிதாகக் கிடைக்காது. ஆனால் நம் அறிவையும், முயற்சியையும் பயன்படுத்தினால், எந்த சிரமத்தையும் கடக்க முடியும். இந்தக் கதையின் நெறி: அறிவும் பொறுமையும் இருந்தால் சிரமம் எதுவும் கடக்க முடியாதது இல்லை. சிரமங்களைப் பார்த்து விரக்தியடையாமல், யோசித்து முயற்சி செய்தால், வெற்றி நிச்சயம். காகம் போல, நாமும் சவால்களை அறிவால் சமாளிக்க வேண்டும்

SPECIAL TALKS - ரிலேஷன்ஷிப் டைனமிக்ஸ் - இணைப்புகளை உருவாக்குங்கள் !



மனிதர்கள் உயிரியல் ரீதியாக சமூக உறவுகளுக்காக வடிவமைக்கப்பட்டவர்கள்; இந்த பரிணாம பண்பு, ஒத்துழைப்பு, பாதுகாப்பு, மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மூலம் வாழ்வை உறுதிப்படுத்தியது. நவீன உளவியல் மற்றும் சமூகவியல், உறவுகளின் இயக்கங்களை (Relationship Dynamics) ஒருவரின் செயல்கள் மற்றவரை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் காட்டும் தொடர்ச்சியான தொடர்பு முறைகளாக விவரிக்கின்றன. இவை நிலையானவை அல்ல; சூழல், தனிப்பட்ட குணாதிசயம், மற்றும் வெளிப்புற அழுத்தங்களின் அடிப்படையில் மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, திருமணம் அல்லது பெற்றோர்-குழந்தை உறவுகள் போன்ற நெருக்கமான பிணைப்புகளில், பரஸ்பர சார்பு (Interdependence) மிக அதிகம் இருக்கும்; அதாவது, ஒருவரின் செயல்கள் மற்றவரின் உணர்ச்சி மற்றும் உடல் நலனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆராய்ச்சிகள் காட்டுகின்றன: வலுவான, ஆதரவான உறவுகள் நீண்ட ஆயுட்காலத்தையும், மன அழுத்தக் குறைவையும் தருகின்றன; மாறாக, தனிமை அல்லது விஷமமான உறவுகள் புகைபிடித்தல் அல்லது அதிக உடல் எடை போலவே உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன உறவுகளின் இயக்கத்தின் மையத்தில் அதிகாரம், பொறுப்பு, மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றின் சமநிலை உள்ளது. சமூகவியல் ஆய்வுகள், உறவுகள் பெரும்பாலும் மறைமுகமான படிநிலைகளில் இயங்குகின்றன என்று கூறுகின்றன—வயது, பாலினம், நிதி நிலை, அல்லது கலாச்சாரக் கோட்பாடுகள் போன்றவை எதிர்பார்ப்புகளையும் நடத்தைகளையும் வடிவமைக்கின்றன. நட்புகளில் சமநிலை மற்றும் பரஸ்பர ஆதரவு மதிக்கப்படுகின்றன; ஆனால் குடும்பம் அல்லது பணியிடங்களில் அதிகாரம் மற்றும் கடமை அதிகம் காணப்படும். அதிகாரம் சமமாகப் பகிரப்படாதபோது, உறவுகள் சிரமப்படுத்தப்படலாம்; சார்பு, வெறுப்பு, அல்லது மோதல்கள் உருவாகலாம். மாறாக, சமநிலை நிலவும்போது நம்பிக்கை மற்றும் உறுதி வளர்ந்து, வேறுபாடுகளை கட்டமைப்பாகச் சமாளிக்க முடியும். தொடர்பியல் கோட்பாடுகள் (Communication Theories) கூறுவது: மக்கள் மோதல்களை எவ்வாறு கையாளுகிறார்கள்—உரையாடல், சமரசம், அல்லது தவிர்ப்பு—அது உறவு பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலா அல்லது மறைமுக சமநிலையின்மையிலா என்பதை வெளிப்படுத்துகிறது. தொடர்பு என்பது உறவுகளின் உயிர்நாடி; அது தேவைகளை வெளிப்படுத்தவும், சண்டைகளைத் தீர்க்கவும், மாற்றத்துக்கு ஏற்ப ஒத்துழைக்கவும் உதவுகிறது. மௌனம், பொய்மை, அல்லது தவிர்ப்பு நம்பிக்கையை அழிக்கின்றன; திறந்த மனப்பான்மை மற்றும் பரிவு பிணைப்புகளை வலுப்படுத்துகின்றன. காலப்போக்கில், உறவுகள் தொழில் மாற்றங்கள், குடியேற்றம், அல்லது சமூகப் பங்குகள் போன்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற வேண்டும். கலாச்சார சூழல் மிக முக்கியமானது: கூட்டுக் கலாச்சாரங்கள் (Collectivist Societies) குடும்ப நம்பிக்கை மற்றும் சமூகக் கடமைகளை வலியுறுத்துகின்றன; தனிநபர் கலாச்சாரங்கள் (Individualist Cultures) தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் சுய வெளிப்பாட்டை முன்னிலைப்படுத்துகின்றன. வரலாற்று மாற்றங்கள்—தொழில்துறை வளர்ச்சி, உலகமயமாக்கல், மற்றும் டிஜிட்டல் தொடர்பு—உறவுகளின் இயக்கங்களை மறுவடிவமைத்துள்ளன. உதாரணமாக, ஆன்லைன் உறவுகள் பாரம்பரிய நெருக்கம் மற்றும் தூரம் என்ற எல்லைகளை மங்கச் செய்கின்றன; ஆனால் அவை இன்னும் நம்பிக்கை, பரஸ்பர ஒத்துழைப்பு, மற்றும் உணர்ச்சி முதலீடு போன்ற உளவியல் கோட்பாடுகளையே பின்பற்றுகின்றன

SPECIAL TALKS - ரிலேஷன்ஷிப் டைனமிக்ஸ் - பணத்தால் உருவாகும் மாற்றங்கள்


ரிலேஷன்ஷிப் டைனமிக்ஸ் என்று ஒரு விஷயம் இருக்கிறது. மக்களே. அதனை நீங்கள் பணம் இருந்தால் மட்டும் தான் கவனித்துப் பார்க்க முடியும். நம்மிடம் பணம் என்பது வந்துவிட்டால் நம்மை சுற்றியுள்ள அனைவருமே நம்மை விட்டு சென்று விடுவார்கள்.ஆனால் அதற்காக =வருத்தப்படக் கூடாது. நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், எவ்வளவு நண்பர்கள் அல்லது உறவினர்கள் இருந்தாலும், பணம் வந்துவிட்டால் அது உறவுகளை சோதிக்கும் ஒரு அமைதியான கருவியாக மாறுகிறது. நிதி பிரச்சினைகள்—வெற்றி, தோல்வி அல்லது கடன்—எதுவாக இருந்தாலும், உறவுகள் திடீரென மாறிவிடும். ஒருகாலத்தில் நம்முடன் இருந்த நண்பர்கள் விலகிச் செல்லலாம், நெருங்கிய உறவினர்கள் திடீரென குளிர்ந்துவிடலாம். காரணம், பணம் பார்வையை மாற்றுகிறது: அது பொறாமை, பாதுகாப்பின்மை, அல்லது போட்டி உணர்வை உருவாக்குகிறது. பணம் வெறும் பிரிப்பதல்ல; அது உறவுகளின் உண்மையான தன்மையை வெளிப்படுத்துகிறது. சில நண்பர்கள் நாம் செலவழிக்கும்போது மட்டுமே அருகில் இருப்பார்கள்; சிலர் நாம் வெற்றி பெற்றால் வெறுப்படைவார்கள். உறவினர்கள் செல்வத்தை ஒப்பிட்டு, அமைதியான போட்டிகளை உருவாக்குவார்கள். குடும்பத்துக்குள் கூட, வாரிசு உரிமை அல்லது நிதி பொறுப்புகள் சண்டைகளை ஏற்படுத்தும். உண்மையில், பணம் உறவுகள் உண்மையான அன்பின் அடிப்படையிலா அல்லது மறைமுக எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலா என்பதை வெளிப்படுத்துகிறது தனிப்பட்ட வட்டத்தைத் தாண்டி, பணம் மரியாதையும் சமூக நிலையும் தீர்மானிக்கிறது. சமூகம் பெரும்பாலும் ஒருவரின் குணாதிசயத்தை விட அவர்களின் செல்வத்தை மதிக்கிறது; அதனால் மிகச் சிறந்த நற்பண்புகள் கொண்டவர்களும் பணமில்லையெனில் புறக்கணிக்கப்படலாம். மாறாக, திடீர் செல்வம் வாய்ப்புக்கேட்ட உறவுகளை ஈர்க்கும், ஆனால் அந்த பணம் மறைந்துவிட்டால் அவர்கள் மறைந்துவிடுவார்கள். அதனால் தான் பலர் சொல்வார்கள்: பணம் மனிதர்களை மாற்றுவதில்லை—அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்துகிறது உறவுகளின் இயக்கவியல் பற்றிய இந்தக் கருத்தின்படி, பணம் தற்காலிகமாக மக்களைப் பிரிக்கிறது. இருப்பினும், நாம் பணம் சம்பாதிக்கவில்லை என்றால் நமது உறவுகள் அப்படியே நீடித்திருக்கும் என்று இதற்குப் பொருள் கொள்ளக்கூடாது. அது நமது வாழ்க்கையை இன்னும் ஆபத்தான பாதைக்கு இட்டுச் செல்லும்.

TECH TALKS - விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் !

 




விண்டோஸ் வரலாறு மற்றும் பதிப்புகள்

ஆரம்ப காலம் (1985–1992)

1985-ல் வெளியான Windows 1.0 என்பது முழுமையான இயங்குதளம் அல்ல; MS-DOS மேல் இயங்கும் ஒரு Graphical Shell ஆகும். அப்போது கட்டளை வரி ஆதிக்கம் செலுத்திய காலத்தில், இது பயனர்களுக்கு ஒட்டிய சாளரங்கள், கீழிறங்கும் பட்டிகள், மற்றும் மவுஸ் மூலம் இயக்கும் வசதிகளை அறிமுகப்படுத்தியது.

1992-ல் Windows 3.1 வெளிவந்தபோது, Microsoft நிறுவனம் எழுத்துருக்கள், மல்டிமீடியா ஆதரவு, மற்றும் நினைவக மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்தியது. இதனால் வீடுகளிலும் அலுவலகங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு, Windows-ஐ நிலையான டெஸ்க்டாப் சூழலாக உறுதிப்படுத்தியது.

நுகர்வோர் மற்றும் நிறுவனப் பிரிவு (1993–2000)

1993-ல் வெளியான Windows NT வணிக நிறுவனங்களுக்காக பாதுகாப்பான, நெட்வொர்க்-தயார் அமைப்பாக உருவாக்கப்பட்டது; அதே சமயம் 1995-ல் வெளியான Windows 95 நுகர்வோருக்காக Start Menu, Taskbar, மற்றும் Plug-and-Play வசதிகளை அறிமுகப்படுத்தி, அன்றாட பயன்பாட்டை மாற்றியது.

பின்னர் Windows 98 மற்றும் Windows ME வீட்டு பயனர்களுக்காக இணையம் மற்றும் மல்டிமீடியாவை வலுப்படுத்தின; Windows 2000 நிறுவனங்களுக்கு நிலைத்தன்மை மற்றும் விரிவாக்கத்தன்மையுடன் வந்ததால், சாதாரண நுகர்வோர் கணினி பயன்பாடு மற்றும் நிறுவன கணினி சூழல் ஆகியவற்றுக்கு இடையே தெளிவான பிரிவை உருவாக்கியது.

நவீன ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சி (2001–இன்றுவரை)

2001-ல் வெளியான Windows XP நுகர்வோர் மற்றும் நிறுவன வரிசைகளை ஒரே தளத்தில் ஒன்றிணைத்து, பயனருக்கு எளிமையான வடிவமைப்பையும், தொழில்முறை நம்பகத்தன்மையையும் வழங்கியது. இதன் நீண்ட ஆயுட்காலம் Windows XP-ஐ வரலாற்றில் மிகவும் விரும்பப்பட்ட மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட இயங்குதளமாக மாற்றியது.

பின்னர் Windows Vista (2007) Aero Graphics-ஐ அறிமுகப்படுத்தினாலும் செயல்திறன் குறைவால் விமர்சிக்கப்பட்டது; Windows 7 (2009) நிலைத்தன்மை மற்றும் அழகான வடிவமைப்பால் நம்பிக்கையை மீட்டது; Windows 8 (2012) Touchscreen மையப்படுத்தப்பட்ட வடிவமைப்பை முயற்சித்தாலும், டெஸ்க்டாப் பயனர்களை விரக்தியடையச் செய்தது; Windows 10 (2015) பல சாதனங்களில் ஒரே சூழலை வழங்கி, Cortana மற்றும் Edge Browser போன்றவற்றை அறிமுகப்படுத்தியது; இறுதியாக Windows 11 (2021) நவீன UI, மையப்படுத்தப்பட்ட Taskbar, மற்றும் Gaming, Productivity மேம்பாடுகளுடன் வந்தது.

Windows Releases and History

Year Version Long Description
1985 Windows 1.0 Microsoft’s first graphical environment built on MS-DOS, introducing tiled windows, drop-down menus, and mouse-driven navigation. Though limited in functionality, it marked the beginning of GUI computing for personal users.
1987 Windows 2.x Improved graphics with overlapping windows, keyboard shortcuts, and support for applications like Word and Excel. It gained traction in offices, making Windows more practical for productivity.
1990–1992 Windows 3.x A breakthrough release with Program Manager, File Manager, and better memory handling. Windows 3.1 added TrueType fonts and multimedia support, becoming the first widely adopted version in homes and businesses.
1993 Windows NT 3.1 Designed for enterprises, NT introduced a new architecture focused on stability, security, and networking. It was the foundation for all future professional editions of Windows.
1995 Windows 95 A landmark release introducing the Start menu, taskbar, and plug-and-play hardware support. It revolutionized usability and became a cultural icon of the PC era.
1998 Windows 98 Enhanced internet integration, USB support, and multimedia capabilities. It was popular among home users and gamers, though it retained the DOS-based core.
2000 Windows ME & Windows 2000 Windows ME targeted home users with multimedia features but was criticized for instability. Windows 2000, built on NT, became the enterprise standard with strong reliability and networking features.
2001 Windows XP Unified consumer and enterprise lines into one platform. With a friendly interface, stability, and long support life, XP became one of the most beloved and widely used operating systems in history.
2007 Windows Vista Introduced Aero Glass graphics, improved security (User Account Control), and new search features. However, it faced criticism for heavy resource usage and compatibility issues.
2009 Windows 7 Restored user confidence with speed, stability, and refined Aero interface. It became a highly successful OS, widely adopted across both consumer and enterprise environments.
2012–2013 Windows 8 / 8.1 Focused on touchscreen devices with a tile-based Start screen. While innovative, the removal of the traditional Start menu frustrated desktop users, leading to mixed reception.
2015 Windows 10 Unified platform across PCs, tablets, and phones. Introduced Cortana, Edge browser, and regular feature updates. It emphasized cross-device compatibility and long-term support.
2021 Windows 11 Modernized design with rounded corners, centered taskbar, and improved gaming features. It focused on productivity, security, and integration with cloud services, marking the latest evolution of Windows.

GENERAL TALKS - உண்மையை ஏற்காதவர்களின் மனநிலை


உண்மையை ஏற்காதவர்களின் மனநிலை மிகவும் பரிதாபமானது மக்களே , சிலருடன் உரையாடுவது முற்றிலும் பயனற்றதாக மாறுகிறது, ஏனெனில் அவர்கள் எப்போதும் தாங்கள் சொல்வதுதான் சரி என்று பிடிவாதமாக நம்புகிறார்கள். தவறான பாதையில் சென்றாலும், அதை உணர்ந்து திரும்புவதற்கான மனப்பக்குவம் அவர்களிடம் இல்லை. அவர்களின் சிந்தனை, கருத்து, வாதம் அனைத்தும் குப்பை போலவே நிரம்பியிருக்கும். தேனீ கடுமையாக உழைத்து தேனைச் சேகரிக்கிறது; அது இயற்கையின் அரிய பரிசு. ஆனால் ஈக்கள் எப்போதும் குப்பையில்தான் மொய்க்கின்றன. தேனீ சேகரிக்கும் தேன், ஈக்கள் மொய்க்கும் குப்பையை விட எவ்வளவு உயர்ந்தது என்பதை நிரூபிக்கத் தேவையில்லை. ஏனெனில், ஈக்களுக்கு தேன் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், அதை உணர்ந்து பயன்படுத்தும் அறிவு இல்லை; அதனால் அவை அதையும் குப்பையாகவே கருதுகின்றன. உண்மையான மதிப்பை உணர்வதின் அவசியம் எல்லோருக்கும் புரிய வேண்டும் , இது வாழ்க்கையின் ஒரு பெரிய பாடம்: உண்மையான மதிப்பு, அறிவு, உழைப்பின் பலன் ஆகியவற்றை உணர்ந்து கொள்ளும் திறன் இல்லாதவர்களிடம் எவ்வளவு விளக்கினாலும் பயனில்லை. தேனீ போல உழைப்பின் மூலம் பெறப்படும் தேன், அறிவின் சின்னமாகும்; ஆனால் ஈக்கள் போல குப்பையில் மொய்க்கும் மனநிலையுடையவர்கள், அந்த அறிவையும் மதிப்பையும் குப்பையாகவே பார்க்கிறார்கள். அவர்களிடம் வாதாடுவதற்குப் பதிலாக, நம்முடைய உழைப்பை, நம்முடைய உண்மையை, நம்முடைய மதிப்பை அமைதியாகத் தொடர்வதே சிறந்தது. தேனீ தனது பணியைச் செய்து தேனைச் சேகரிப்பது போல, நாமும் நமது வாழ்க்கையில் அர்த்தமுள்ள செயல்களைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஈக்கள் எப்போதும் குப்பையில்தான் மொய்க்கும்; ஆனால் தேனீ சேகரிக்கும் தேன், உலகத்திற்கே இனிமையும் ஆரோக்கியமும் தருகிறது. அதுபோல, உண்மையான உழைப்பும் அறிவும், அதை உணரக்கூடியவர்களுக்கு மட்டுமே மதிப்பும் பயனும் தரும்

TECH TALKS - இணையதள வேகத்தின் வளர்ச்சி !

 


📶 4G முதல் 5G வரை பயணம்

சுருக்கம்: 4G, வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் மொபைல் ஆப்ஸ்களுக்கு வழிவகுத்தது. 5G, அதைவிட 10–20 மடங்கு வேகத்துடன், மிகக் குறைந்த latency மற்றும் கோடிக்கணக்கான சாதனங்களை இணைக்கும் திறனுடன், ஒரு புரட்சியை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் 4G LTE 2016-இல் பரவலானது; 5G சேவைகள் 2022 அக்டோபரில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு, தற்போது முக்கிய நகரங்களில் விரைவாக விரிவடைகின்றன.

4G காலம் (2010–2020)

  • தொழில்நுட்பம்: LTE (Long-Term Evolution) – OFDM (Orthogonal Frequency Division Multiplexing), MIMO (Multiple Input Multiple Output).
  • அலைவரிசை: 6 GHz-க்கு கீழ்.
  • வேகம்: 10–100 Mbps; HD வீடியோ ஸ்ட்ரீமிங், மொபைல் ஆப்ஸ், கிளவுட் சேவைகள்.
  • தாக்கம்: ஸ்மார்ட்போன்கள் டிஜிட்டல் வாழ்க்கையின் மையமாகின. சமூக ஊடகம், e-commerce, மொபைல் வங்கி வளர்ச்சி.
  • இந்திய சூழல்: Reliance Jio (2016) 4G-ஐ விரைவாக பரப்பியது; இந்தியா உலகின் மிகப்பெரிய 4G சந்தைகளில் ஒன்றாகியது.

5G-க்கு மாற்றம் (2020–இன்றுவரை)

  • தொழில்நுட்பம்: mmWave (>24 GHz) + sub‑6 GHz.
  • Modulation: 256-QAM, 1024-QAM – அதிக தரவு throughput.
  • MIMO: Massive MIMO (64x64 antenna arrays).
  • வேகம்: 1–10 Gbps; latency ~1 ms.
  • தாக்கம்: Real-time பயன்பாடுகள் – தானியங்கி வாகனங்கள், smart factories, AR/VR, telemedicine.
  • இந்திய சூழல்: 5G அக்டோபர் 2022-இல் தொடங்கப்பட்டது; 2025-க்குள் Airtel, Jio Tier-1 நகரங்களில் விரிவாக்கம் செய்துள்ளன.

📊 ஒப்பீட்டு சுருக்கம்

அம்சம் 4G LTE 5G
தொடக்கம் 2010 உலகளவில், 2016 இந்தியா 2019 உலகளவில், 2022 இந்தியா
அலைவரிசை <6 GHz Sub‑6 GHz + mmWave (>24 GHz)
வேகம் 10–100 Mbps 1–10 Gbps
Latency ~50 ms ~1 ms
பயன்பாடுகள் Video streaming, Apps, Social Media IoT, Autonomous Cars, AR/VR, Smart Cities

🌍 சமூக & பொருளாதார தாக்கம்

  • 4G: இணைய அணுகலை ஜனநாயகமாக்கியது; டிஜிட்டல் கட்டணங்கள், Startups வளர்ச்சி.
  • 5G: 2035-க்குள் இந்தியாவின் GDP-க்கு $450 பில்லியன் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; Industry 4.0, Smart Healthcare, Connected Agriculture.
  • உலகளவில்: Smart Cities, Industrial Automation, Next-gen Entertainment.

✅ முடிவு: 4G மக்கள் இணையத்துடன் இணைந்தது; 5G, மக்கள் + இயந்திரங்கள் + தொழில்கள் அனைத்தையும் மின்னல் வேகத்தில் இணைக்கிறது.

STORY TALKS - போட்டியும் பகட்டும் நிறைந்த மக்கள் !

  பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம...