புதன், 13 அக்டோபர், 2021

CINEMATIC WORLD - 048 - BIG HERO 6 -TAMIL REVIEW - நாங்களும் சூப்பர் ஹீரோக்கள்தான் என்று சொல்லும் ஒரு DISNEY படைப்பு ! [REGULATION 2024 - 0068]



BIG HERO 6 - ஒரு பக்கம் அனிமேஷன் படங்கள் எல்லாம் ஃபேண்டஸி கதைகளை மட்டுமே நம்பி சென்றுக்கொண்டு இருக்கவுமே ஒரு படம் மட்டும் அனிமேஷன் படங்களை கொண்டு சூப்பர் ஹீரோ கதைகளை சொல்லலாம் என்று புதுசாக யோசித்தது , அப்படி ஒரு படம்தான் இந்த BIG HERO 6 , இந்த படம் பார்த்தவர்கள் கண்டிப்பாக BAYMAX ஐ மறக்க மாட்டார்கள் !! அடுத்த பாகம் எப்போது வரும் என்று பார்க்காமல் TANGLED - THE SERIES போல BIG HERO - 6 THE SERIES ஓடிக்கொண்டு இருக்கிறது , COME ON சென்று பாருங்கள். இந்த படத்தின் கதை, படத்துடைய கதாநாயகன் ஹீரோ [ HIRO - ஜப்பான் பேருப்பா !!] அவனுடைய தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி சின்ன சின்ன ரோபோட்களை கொண்டு ஆடுகளம் தனுஷ் போல லோக்கல் தெருக்களில் சண்டைகளை உருவாகிறான். கடைசியில் காவல் துறை கடமையை செய்வதற்குள் காபற்றப்படும் நம்ம ஹீரோ பின்னாளில் அவனுடைய அண்ணனால் வடிவமைக்கப்பட்ட பே மேக்ஸ் என்ற ரோபோட்டை பார்த்து ரொம்பவுமே இம்ப்ரஸ் ஆகிறான், இதனால் மண்டைக்குள் வெற்றி அடைந்தே ஆக வேண்டும் என்று யோசனை வந்த ஹீரோ ஹமடா அவனே ரொம்பவுமே கடினமாக முயற்சி செய்து ஒரு தனித்த சிறு சிறு பாகங்களாக பிரிந்தும் இணைந்தும் செயல்படும் ஒரு சின்ன சின்ன ரோபோட்கள் இணைந்த இயந்திரத்தை உருவாக்கி அறிவியல் படைப்புகளை வெளியிடும் எக்ஸ்போ கண்காட்சியில் காட்டுகிறான். இந்த EXIBITION இல் நடக்கும் ஒரு மோசமான நெருப்பு விபத்தில் அவனுடைய அண்ணன் இறந்து போகிறார். குடும்பமே உடைந்து போகிறது. ஆனால் கொஞ்சம் வருடங்களுக்கு பிறகு சின்ன சின்ன ரோபோட்கள் வில்லன்களால் பயன்படுத்தப்படுவதை கண்டுபிடிக்கிறான் நமது கதாநாயகன் ! அந்த விபத்தின் மர்மங்களை கண்டறிந்து நடந்த எல்லாமே சதி என்று புரிந்துகொள்கிறான் ! அவருடைய அண்ணனின் இழப்புக்கும் மேலும் அவன் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு இப்போது இப்படி தவறான இடத்தில் தப்பான ஆட்களிடம் இருக்க கூடாது என்பதற்காகவும் புதிதாக அண்ணனின் நண்பர்களுடன் இணைந்து மெடிக்கல் ரோபோட் பே-மேக்ஸ்-ன் உதவியுடன் பிரச்சினைகளை சமாளித்து ஒரு சூப்பர் ஹீரோ குழுவினராக இணைந்து போராடி வெற்றி அடைவதுதான் இந்த பிக் ஹீரோ 6 திரைப்படத்தின் மொத்த கதை. இந்த படம் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் திரைக்கதையில் விறுவிறுப்பாக அமைகிறது. டிஸ்னி வெளியிட்டு பின்னாளில் வெளிவந்த ஜூடோபியா படத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரு சராசரி பொழுதுபோக்கு அனிமேஷன் திரைப்படமாக மட்டுமே இல்லாமல் ஒரு ஆக்சன் அடவென்சர் நிறைந்த திரைப்படமாக இந்த திரைப்படங்கள் அமைவது வரவேற்கதக்கது. இருந்தாலும் ஒரு அனிமேஷன் காட்சிகளில் சி ஜி ஐ தொழில்நுட்ப வடிவமைப்பில் பிரமாதமாக அமைக்கப்பட்ட காட்சிகள் திரைக்கதைக்கு சிறப்பு சேர்க்கிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும். மொத்தத்தில் ONE LINE REVIEW : BIG HERO 6 _ புதிய கதாநாயகர்களின் உதயம் !!! நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக  நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது. 


2 கருத்துகள்:

கணிதன் சொன்னது…

நானும் ஒரு தகப்பன் என்கிற ஸ்தானத்திலிருந்து நடிகர் விஜய்க்கு ஒரு கேள்வி

உங்களை கதாநாயகனாக உயர்த்தி உச்சநட்சத்திரமாக்கி பெற்ற கடமைக்கு பெருமை சேர்த்த
இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் பொறுப்புணர்வு உங்களுக்கு இல்லாமல் போனது ஏன் விஜய் ?

நீங்கள் நினைத்திருந்தால் மகன் ஜேசனை உயர்த்தி பார்ப்பது என்பது இயலாத காரியமா ? பெற்ற மகனையும் மகளையும் கூட வெறுக்க வைக்கும் ஒரே உறவு கள்ளக்காதல் மட்டுமே

உங்களின் கள்ளக் காதலுக்கு முட்டுக் கொடுக்கும் ஆண் பெண் ரசிகர்களின் ஆதரவு பெருமை அல்ல விஜய் அது கேவலம் அவலம் இளம் தலைமுறையை சீரழிக்கும் உங்களின் செய்கை வேதனையை தரவில்லையே

சரி பெற்ற மகன் மகள் விசயத்திலேயே பொறுப்பற்று நடந்துகொள்ளும் ஒருவர் ரசிகர்களை பற்றி கவலைப்படுவாரா

எனக்காக நீங்க ஹர்ட் ஆகாதீங்க என்று கூறுவது உங்களுக்காக ஆதரவை தேடிக்கொள்ளும் ஒரு உளவியல் அப்ரோச் என்பதை உலகம் அறியும்

ரசிகர்களை முட்டாள்கள் என நினைக்கும் உங்கள் மனோபாவத்தை மாற்றுங்கள் இல்லையேல் இன்றைக்கு விசிலடிக்கும் அதே ரசிகர்கள் சங்கும் ஊதுவார்கள்

Kokki Kumaru சொன்னது…

படத்தில் கணினி தொடர்பாக தொழில் நுட்ப காட்சி வைக்கிறேன் பேர்விழி என்று எப்போதும் பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் தான் வைப்பார்கள். இல்லாவிட்டால் ஒரு கிராஃப் (Line Chart) திரையில் காட்டி, “நமது கம்பெனி சேல்ஸ் இப்படி உயர்ந்து விட்டது!” என்று நாயகன் பூ சுற்றுவார்.

பயங்கர குற்றவாளிகளை பார்க்க ஓவர் ஹெட் புரஜெக்டரில் ஒவ்வொருவராக பாஸ்போர்ட் சைஸை விட கொஞ்சம் பெரிய சைசில் வருவார்கள். “நெக்ஸ்ட்… நெக்ஸ்ட்…” என்று போலீஸ் ஐஜி சொல்லிக் கொண்டே வருவார்.

ஹீரோயின் எப்பொழுதும் மழையை கண்டதும் வெள்ளையோ அல்லது கருப்போ உடையணிந்து துள்ளிக் குதித்து நனைவார். “நான் தான் பட்டாம்பூச்சி, ரோஜாப்பூ, வெண்ணிலா!” என்ற வரிகளுடன் ஒரு பாட்டு நிச்சயம். ஆனால் ஜலதோசமே பிடிக்காது.

அவர் வீட்டை சுற்றி பத்து பள்ளி சிறுவர்கள். லாக் டவுன் இல்லாத காலத்திலும் பள்ளிக்கே போகாமல், அக்காவுடன் சைக்கிளில் சுற்றி, கோன் ஐஸ் வழியவிட்டு சாப்பிடுவார்கள். நதியா காலத்திலேயே இதையெல்லாம் பாத்தாச்சு, பாத்தாச்சு.

நாயகி படத்தில் திருமணத்துக்கு முன்னாடி வரை ஜீன்ஸ் போட்ட மஹாலட்சுமியாக வலம் வருவார். அதன் பின் புடவை கட்டிய குத்துவிளக்காக மாறி விடுவார். கண்டிப்பாக தாலியை வெளியே தான் போட்டுக் கொண்டிருப்பார்கள். “மணாளனே ரீமா சென்னின் பாக்யம்” MODE ON . (செல்லமே)

ஒரே வருடத்தில் நாயகனோ அல்லது நாயகியோ ஐபிஎஸ், ஐஏஎஸ் பாஸ் செய்து விடுவார்கள்.

அதுவும் சொந்த ஊருக்கே போஸ்ட்டிங் கிடைக்கும். திருமதி பீலா ராஜேஷிடம் கேட்டு பாருங்கள்; சொந்த மாநிலத்துக்கு போஸ்ட்டிங் கிடைக்கவே எட்டு காவடி எடுத்தார்கள். ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவருக்கு தான், IAS/IPS படித்து முடிந்ததும் சொந்த ஊரில் போஸ்ட்டிங் கிடைக்கும்.

நாயகி கலெக்டராக வந்தால் கண்டிப்பாக க்ளோஸ் நெக், முழங்கை வரை மேட்சிங் ஜாக்கெட் அணிந்து, காட்டனில் தான் புடவை கட்டியிருப்பார். இலவச இணைப்பாக ஒரு கண்ணாடியும் மாட்டி விட்டிருப்பார் இயக்குனர். நல்ல வேளை, நயனுக்கு கண்ணாடி மாட்டி விடலை.

ஆனால் நடைமுறையில் இப்படியும் ஸ்டைலிஷ்ஷான கலெக்டர்கள் தெலுங்கானாவில் உள்ளனர் டைரக்டர் சார். பின்னாடி நிற்கும் டவாலி முகத்தில் தவழும் புன்னகையை பாருங்கள்.

மீடியம் பட்ஜெட் இராம நாராயணன் படங்களில் கணவன் டாஸ்மாக்கிலேயே குடியிருந்தாலும், எத்தனை செட்டப்புகள் வைத்திருந்தாலும், அவரை தீய சக்தி அடித்து விட்டால், நாயகி மஞ்சள் புடவையில் ஐம்பது துணை நடிகைகளுடன் ஒரு வேப்ப மரத்தை மொட்டையடித்து, இரவு 12 மணிக்கு “ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா!” என்று பாட்டு பாடி அம்மனை தூங்க விடாமல் இம்சிப்பார்கள்.

பாட்டின் முடிவில், தூக்கம் தொலைந்த கடுப்பில் அம்மனும் சூலத்துடன் கிளம்பி விடுவாள். நியாயப்படி நாயகியை தான் முதலில் குத்த வேண்டும்.

நாயகன் வில்லனின் ஆட்களிடம் இடைவேளைக்கு முன்பு மாட்டினால் செமையாக அடி வாங்குவார். ஆனால் அவரை கொல்லாமல் பாலத்திலிருந்து தண்ணீரிலோ அல்லது ரயில்வே தண்டவாளத்திலோ தான் விட்டு விட்டு செல்வார்கள்.

வில்லனிடம் “ஆள் காலி” என்று கூசாமல் பொய் சொல்வார்கள். தியேட்டர் ஆப்பரேட்டர் கூட நம்ப மாட்டார். ஆனால் இளிச்சவாய் வில்லன் நம்புவார். அட சே!

பழைய நம்பியார் காலத்து படங்களில், வில்லனிடம் கணக்கு பிள்ளையாக வேலை செய்யும் அப்பாவிக்கு திடீரென்று வில்லனை பற்றி உண்மை தெரிய வரும்.

உடனே விறுவிறுவென வில்லனிடம் போய், “நாச காரா! இப்படி செய்யலாமா?” என்று நீதி கேட்பார். நம்பியார் சிம்பிளாக அந்த பிள்ளைவாளை போட்டு தள்ளி விடுவார். பின்ன, மடியில போட்டா கொஞ்ச முடியும்?

Thani Oruvan படத்திலும் அந்த Bio Lab-ல் வேலை செய்யும் சயிண்டிஸ்ட் பெண்ணும் சித்தார்த் அபிமன்யுவிடம், அதுவும் அவனது இடத்திலேயே சென்று முறையிட்டு அழுவார்.

“ஏன் முருகா என்னை இப்படி சோதிக்கிறாய்?” என்றுதான் கேட்க தோன்றும்.

இன்னும் நிறைய விடுபட்ட கிளிஷேக்களை கருத்தாகவோ, வல்லுநர் வினா விடையாகவோ அளிக்கலாம்.

சினிமா பற்றிய பதிவாதலால், நடிகை படம் பதிய வேண்டிய நிர்பந்தமாகி விட்டது. சமூகம் பெரிய மனசு பண்ணி மன்னிக்க வேண்டும்.

LIFE TALKS - ஒரு இயற்கையான கட்டுப்படுத்தும் முறை ?

  அப்பள சோடா மற்றும் சோடியம் குளோரைடு (சமையல் உப்பு) ஆகிய இரண்டின் கலவையானது, எறும்புகளின் உடலமைப்பு மற்றும் ஈரப்பத ஒழுங்குமுறை அமைப்பைக் கு...