அவென்ஜர்ஸ் இன்பினிட்டிவார் 2018 ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்ற திரைப்பட வரிசையில் வெளிவந்த 19 வது திரைப்படம் ஆகும். முந்தைய மார்வெல் திரைப்பட வரிசையில் நடித்த நிறைய கதாபாத்திரங்கள் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். அதிசக்திவாய்ந்த இன்பினிட்டி ஸ்டோன்கள் எனப்படும் சக்திவாய்ந்த கற்களின் சக்தியை பயன்படுத்தி தேனொஸ் இந்த பிரபஞ்சத்தை அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார் . இதனால் டாக்டர் ஸ்ட்ரெய்ன்ச், கார்டியன்ஸ் OF THE காலக்சி, பிளாக் பந்தர் ஆகியோர் அவெஞ்சர்ஸ் உடன் இணைந்து செயல்பட்டு தேனொஸ் இன் இந்த மோசமான முயற்சியை தடுத்து எல்லோரையம் காப்பாற்ற போராடுகின்றனர், இந்த முயற்சி வெற்றி அடையுமா ? அவெஞ்சர்ஸால் எல்லோரையும் காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதைக்களம். மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் திரைப்படங்களை பார்ப்பவர்களுக்கு இந்த திரைப்படம் நிச்சயமாக சிறப்பானதாகும். இந்த திரைப்படத்தின் அசத்தலான ஆக்சன் காட்சிகள், வலிமையான திரைக்கதை மற்றும் அருமையான விசுவல் எபக்ட்ஸ் இந்த திரைப்படத்தை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இந்த திரைப்படத்தின் வேகமான திரைக்கதை மற்றும் நேர்த்தியான ஒளிப்பதிவு சூப்பர்ஹெரொ திரைப்படங்களின் வரிசையில் மிகவும் அட்வெஞ்சரான திரைப்படமாக மாற்றியுள்ளது. கேப்டன் மார்வெல் மற்றும் ஆன்ட் மேன் அண்ட் தி வாஸ்ப் என்ற திரைப்படங்களை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் அவெஞ்சர்ஸ் ENDGAME என்ற திரைப்படம் 2019 ல் வெளிவந்தது . இந்த 2 படங்களை BACK 2 BACK பாருங்கள் , நன்றாக இருக்கும் . என்னுடைய RECOMMENDATION. இந்த படம் அப்படியே கண்ணுக்குள் நிற்கும் படம். உலக திரைப்பட வரலாற்றில் ரொம்ப முக்கியமான படம்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
HEALTH TALKS - பலமான உடல்தான் செரிமானத்தில் சிறப்பாக இருக்கிறதா ?
1. ஓய்வு நேர வளர்சிதை மாற்ற விகிதம் (Resting Metabolic Rate - RMR) தசையதிக்கம் கொண்ட உடலின் மிக முக்கியமான நன்மை என்னவென்றால், அது ஓய்வில் இ...
-
EN-2026/03 The 2010 film Prince of Persia: The Sands of Time follows the journey of Dastan, an orphan in the Persian Empire who is adopt...
-
101. "உன்னைப் போலவே நீ இரு, பிறரை நகலெடுக்காதே." 102. "உயரம் என்பது உன் உடலால் அளக்கப்படுவது அல்ல, உன் எண்ணங்களால் அளக்கப்படு...
2 கருத்துகள்:
சென்னை: புலி படத்துக்கு சம்பளமாக பெற்ற ரூ.15 கோடியை மறைத்ததற்காகத்தான் நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2016-17-ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்த நடிகர் விஜய், அந்த ஆண்டு வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91,890 பெற்றுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், வருமானவரித் துறை 2015-ம் ஆண்டு நடிகர் விஜய் வீட்டில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், புலி திரைப்படத்துக்கு பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை கணக்கில் காட்டாமல் மறைத்திருப்பது தெரியவந்தது.
அதையடுத்து நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமானவரித் துறை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வருமானவரித் துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக நடந்தது.
அப்போது புலி படத்துக்கு சம்பளமாக பெற்ற ரூ.15 கோடியை வருமானமாக கணக்கில் காட்டாததால் தான் நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக வருமானவரித் துறை தரப்பில் கூறப்பட்டது.
இதில் எந்த தவறும் இல்லை. காலதாமதமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூற முடியாது என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, வருமான வரித்துறையின் இந்த வாதத்துக்கு விஜய் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு அடுத்த விசாரணையை வரும் ஜன.23-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
நடிகர் N.T.ராமராவ் முன்னைய நாட்களில் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தவர். அப்போது அதிகமாக கடவுள் வேடங்களில் நடித்திருந்தார். கிருஷ்ணராக, அல்லது இராமராக நடிப்பதென்றால் அன்றைய நாட்களில் பெரும்பாலும் NTR தான். அப்படியிருக்கையில் அவர் அரசியலுக்கு வந்தபோது மக்கள் அவரைக் கடவுளாகவே பார்த்தார்கள். அவர் தேர்தல் பிரச்சாரங்களுக்கு வரும்போது அவரது கால்களைக் கழுவி அந்தத் தண்ணீரைக் கூட தீர்த்தம் போல அவர் ரசிகர்கள் பருகிய கதைகள் உண்டு.
தமிழ் சினிமாவில் கூட யாரேனும் ஒரு நடிகருக்கு ரசிகர்கள், தீவிர ரசிகர்கள், வெறியர்கள், ஏன்? பக்தர்கள் கூட இருந்திருக்கிறார்கள். தமது ஆதர்ச நாயகனைத் 'தலைவா', 'ஆண்டவரே', 'தளபதி', 'தல' என்றெல்லாம் அழைப்பது, வணங்குவது எல்லாம் ஒரு ரகம். ஆனால் விஜய் இவற்றையெல்லாம் மீறிப் புதிதாக ஒரு வகையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். தளபதி ரசிகர்கள், தளபதி வெறியர்கள், தளபதி பக்தர்கள் எல்லாம் தாண்டி தளபதி காமுகர்கள் என்று ஒரு புதிய ரகம் ஒன்று உலவுவதைக் காணமுடிகிறது. இதில் ஆண்களும் சரி; பெண்களும் சரி. விஜய் மீது 'வெறி' பிடித்துப் போய்த் திரிவதைக் காணமுடிகிறது.
அன்றொரு பேட்டியில் ஒரு இளைஞர், 'ப்ரோ... அடுத்த ஜென்மத்துல நா விஜயண்ணாவுக்குப் பொண்டாட்டியாப் பொறக்கணும் ப்ரோ" என்பதைக் காணமுடிந்தது.
இன்னொன்றில் ஒரு பெண், 'தளபதிக்கு நாங்க அக்கா தங்கச்சிங்களா இருக்கோம்... தேவைப்பட்டா பொண்டாட்டியாவும் இருந்துட்டுப் போறோம்' என்றதைக் கேட்கப் பகீர்ன்றிருந்தது. சாதாரணமாக அண்ணா - தங்கையாகப் பழகிவிட்டுப் பின்னர் காதலர்களாக மாறும் தம்பதியிரையே என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அண்ணா - தங்கச்சியா பழகிவிட்டு இது எப்படி? உறுத்தாதா? என்றெல்லாம் யோசிப்பேன். ஆனால் தேவைக்கேற்ப பொண்டாட்டியாக இருக்கப்போகும் அக்கா தங்கச்சிகளைப் பார்த்ததும் இதற்கு அது எவ்வளவோ பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
இதுபோக இன்னுமொரு பெண்ணின் பதிவொன்று கண்ணில் பட்டது. அதன்படி, '(விஜய்) அண்ணாவுக்கு என்னை வேண்டும் என்றால் என் கணவர் என்னை அண்ணாவோடு அனுப்பிவைப்பார். அதைப்பற்றி புரிந்தும் கொள்வார். இந்தப் புரிதல் கூட இல்லாமல் என்ன வாழ்க்கை?' என்று கேட்டிருந்தார் அந்தப் பெண்.
ஆக இந்தக் கட்சியில் ஆண்களோ பெண்களோ அண்ணனுக்கு வோட்டுப் போடுவதை விட அண்ணனையே! சரி விடுவோம்.
இந்தக் கூட்டம் இருக்கும் வரையில் விஜய் பனையூரை விட்டு வராமல் இருப்பதும், கூட்டத்துக்குள் சிக்காமல் ஓடுவதும் தான் அவருக்கு நல்லது.
கருத்துரையிடுக