அவென்ஜர்ஸ் இன்பினிட்டிவார் 2018 ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்ற திரைப்பட வரிசையில் வெளிவந்த 19 வது திரைப்படம் ஆகும். முந்தைய மார்வெல் திரைப்பட வரிசையில் நடித்த நிறைய கதாபாத்திரங்கள் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். அதிசக்திவாய்ந்த இன்பினிட்டி ஸ்டோன்கள் எனப்படும் சக்திவாய்ந்த கற்களின் சக்தியை பயன்படுத்தி தேனொஸ் இந்த பிரபஞ்சத்தை அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார் . இதனால் டாக்டர் ஸ்ட்ரெய்ன்ச், கார்டியன்ஸ் OF THE காலக்சி, பிளாக் பந்தர் ஆகியோர் அவெஞ்சர்ஸ் உடன் இணைந்து செயல்பட்டு தேனொஸ் இன் இந்த மோசமான முயற்சியை தடுத்து எல்லோரையம் காப்பாற்ற போராடுகின்றனர், இந்த முயற்சி வெற்றி அடையுமா ? அவெஞ்சர்ஸால் எல்லோரையும் காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதைக்களம். மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் திரைப்படங்களை பார்ப்பவர்களுக்கு இந்த திரைப்படம் நிச்சயமாக சிறப்பானதாகும். இந்த திரைப்படத்தின் அசத்தலான ஆக்சன் காட்சிகள், வலிமையான திரைக்கதை மற்றும் அருமையான விசுவல் எபக்ட்ஸ் இந்த திரைப்படத்தை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இந்த திரைப்படத்தின் வேகமான திரைக்கதை மற்றும் நேர்த்தியான ஒளிப்பதிவு சூப்பர்ஹெரொ திரைப்படங்களின் வரிசையில் மிகவும் அட்வெஞ்சரான திரைப்படமாக மாற்றியுள்ளது. கேப்டன் மார்வெல் மற்றும் ஆன்ட் மேன் அண்ட் தி வாஸ்ப் என்ற திரைப்படங்களை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் அவெஞ்சர்ஸ் ENDGAME என்ற திரைப்படம் 2019 ல் வெளிவந்தது . இந்த 2 படங்களை BACK 2 BACK பாருங்கள் , நன்றாக இருக்கும் . என்னுடைய RECOMMENDATION. இந்த படம் அப்படியே கண்ணுக்குள் நிற்கும் படம். உலக திரைப்பட வரலாற்றில் ரொம்ப முக்கியமான படம்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
TAMIL BLOGSPOT POSTS - 2K26 - EPISODE 003 - நம்முடைய உலகம் மாறுகிறது
நண்பர்களே, இந்த உலகம் இந்த நாட்களில் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை, அவ்வளவுதான். நீங்...
-
என் செல்லம் என் சிணுக்கு என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி அரே மியாவ் மியாவ் ஹே… மியாவ் மியாவ்...
-
பலர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து இருப்பதால் மன அழுத்தம், கவலை, ஒப்பீட்டு அழுத்தம் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. முடிவில்லா ஸ்க்ரோல், அற...
1 கருத்து:
சென்னை: புலி படத்துக்கு சம்பளமாக பெற்ற ரூ.15 கோடியை மறைத்ததற்காகத்தான் நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2016-17-ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்த நடிகர் விஜய், அந்த ஆண்டு வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91,890 பெற்றுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், வருமானவரித் துறை 2015-ம் ஆண்டு நடிகர் விஜய் வீட்டில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், புலி திரைப்படத்துக்கு பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை கணக்கில் காட்டாமல் மறைத்திருப்பது தெரியவந்தது.
அதையடுத்து நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமானவரித் துறை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வருமானவரித் துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக நடந்தது.
அப்போது புலி படத்துக்கு சம்பளமாக பெற்ற ரூ.15 கோடியை வருமானமாக கணக்கில் காட்டாததால் தான் நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக வருமானவரித் துறை தரப்பில் கூறப்பட்டது.
இதில் எந்த தவறும் இல்லை. காலதாமதமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூற முடியாது என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, வருமான வரித்துறையின் இந்த வாதத்துக்கு விஜய் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு அடுத்த விசாரணையை வரும் ஜன.23-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
கருத்துரையிடுக