நான் வாழ்க்கையில் படக்கூடிய கஷ்டங்கள் எல்லாமே ஒரு காரணத்துக்காகத்தான். என்னுடைய வாழ்க்கையின் மழைப்பொழிவு நிகழ வேண்டும் என்றால் என்னுடைய வாழ்க்கையில் வெயில் வந்தாக வேண்டும். நானும் கஷ்டங்களை பட்டாக வேண்டும். ஒரு ஒரு நொடியும் நான் நரகத்தை அனுபவிக்க வேண்டும். இந்த தொழில் நுட்பம் மற்றும் மழைப்பொழிவு குறித்த விஷயங்கள் நிறைய பேரால் கண்டுகொள்ளப்பட முடியாது. இந்த விஷயங்கள் நான் இறந்து போனாலும் கூட உனக்கானதும் எனக்கானதுமான இருந்துவிட்டு போகட்டும். ஒரு சில நேரங்களில் பயம் என்னை ஆட்கொண்டு இருக்கிறது. பயம் என்னை பயமுறுத்துகிறது. என்னுடைய கனவுகளை நான் அடைவது பாவச்செயல் என்னுடைய கனவுகளை நான் அடைவது பெரும் குற்றம் என்று நிறைய பயமுறுத்தி இருக்கிறது. வாழ்க்கையை கண்டு நான் நடுங்குகிறேன். முன்னே இருந்த பலம் , வேகம் , துணிவு எதுவுமே இப்போது சுத்தமாக இல்லை. இந்த கொடூர தன்மையை நான் வென்றாக வேண்டும். எப்போதுமே என்னுடைய மனது முழுக்க மழை பொழிவின் கனவுதான். அடுத்த நொடி நிரந்தரம் இல்லை. எனக்கு நெருக்கமான ஒரு நபரை இழத்துவிட்டேன். நான் ஒரு நூறு சதவீதம் மாறிவிட்டேன். என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது. என்னால் நடந்த மாற்றங்களுக்காக எதுவுமே பண்ணமுடியாது. இப்போது எனக்கு இருக்கும் சக்திகளை பார்த்தால் நடக்கப்போகும் விஷயங்களையும் தடுக்க முடியாது.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16
நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...
-
இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் தயாரிப்புப் பணிகள் வேறு லெவல்லி...
-
வாடா வாடா வெள்ளை பூவே கொண்டு போடா வெள்ளி தீவே ! தெரிக்கும் தேன்மலை சிரிக்கும் கண்களின் மீது தாக்குதே ஏதோ ஏதோ ஏதோ ஆனேன் வாடா வாடா செல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக