நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
செவ்வாய், 9 டிசம்பர், 2025
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #17
திங்கள், 8 டிசம்பர், 2025
THEY CALL HIM OG (TAMIL REVIEW) - இவரு ரொம்ப பயங்கரமான ஆளாச்சே !!
ஷாகோ படத்தோடு கொடுத்த கனேக்ஷன், TRAVELLING SOLIDER பாட்டு, மொரட்டு வாள் காட்சிகள், ஜெயிலர் படம் பாணியில் மாஸ் கிளைமாக்ஸ் என்று பக்கா மசாலா படம் ஹீரோ அரசியலுக்கு போகப்போவதாலோ என்னவோ கொஞ்சம் சென்ட்டிமென்ட் தூக்கலாக கொடுக்கப்பட்டது 3 மணி நேரம் பக்கமாக இழுக்கப்பட்டு உள்ளது, அர்ஜூன் தாஸ் டீசண்ட் பெர்ஃபார்மன்ஸ், ஒரு செகண்ட் வில்லன் அவதாரம் தப்பித்தது, மற்றபடி காமெரிசியல் KGF , SALAAR படங்களின் பாணியில் ஒரு சராசரி ஸ்டைல் நம்பி எடுக்கப்பட்ட படம், GOOD BAD UGLY படத்தை விட மோசமாக இல்லை !! படம் மொத்தமாக வன்முறையாக கதை இருக்கிறது, சென்ட்டிமென்ட் , காதல் காட்சிகள் தேவையற்ற இலவச இணைப்பாக இருக்கிறது, இந்த திரைப்படம் மும்பையின் கட்டுப்படுத்தும் கும்பல் 90 களின் நடத்திய அராஜக உலகத்தை மையமாகக் கொண்ட ஒரு கடுமையான கதை. இதில் ஒஜஸ் கம்பீரா என்ற பெயரால் அச்சமூட்டிய ஒரு புகழ்பெற்ற கும்பல் தலைவன்தான் நம்ம ஹீரோ பவன், கொலை முயற்சியில் உயிர் தப்பிய பின், தனது தம்பியை வேறு இழந்த வேதனையால், பத்து ஆண்டுகள் தன்னைத்தானே ஒதுக்கிக் கொண்டு மறைந்து விடுகிறார். பின்னாட்களில் மனைவியும் வில்லங்கலால் மேலோகம் அனுப்பப்பட்ட பின்னால் கொதித்து எழுந்து பிரகாஷ் ராஜ் குடும்பத்தில் பிரச்சனை என்று புரிந்து அந்த நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் மீண்டும் மும்பைக்கு திரும்புகிறார் முழுமையாகக் காயங்களால் சிதைந்தாலும், மன உறுதியால் உடையாதவராக. திரும்பியவுடன் கேடுகெட்ட சம்பவங்களில் கும்பல் தலைவர்களை பழிவாங்கத் தொடங்குகிறார், அவரது எதிரிகள் துறைமுகங்களையும் கடத்தல் வழிகளையும் கைப்பற்றிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தவே கடைசியாக ஜெயிப்பாரா இல்லையா என்பதே கதை, கம்பீரா தனது சொந்த ஜப்பானிய சண்டை கும்பலை உருவாக்குகிறார். பழைய பகுதிகளை மீண்டும் கைப்பற்றி, எதிரிகளுக்கு எதிராகக் கொடூரமான தாக்குதல்களை நடத்துகிறார். OG வருகிறார், சண்டை போடுகிறார், செல்கிறார் என்பதே ரிப்பீட் மோடில் நடந்தாலும் பவன் அவர்களிடம் இருந்து கொஞ்சமாக கால் ஷீட் வாங்கி நிறுவனம் குறை சொல்லாத அளவுக்கு ஒரு மிதமான ஆக்ஷன் டிராமாவை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம்,
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #15
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #14
GENERAL TALKS - சொந்த வாழ்க்கை சொர்க்கமாக மாறவேண்டும் !
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #13
ஞாயிறு, 7 டிசம்பர், 2025
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #12
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #11
GENRAL TALKS - காலத்தின் கட்டுப்பட்டுக்குள் சிக்கவேண்டாம் மக்களே !
இணையத்தில் இருந்து எடுத்த கருத்துப்பகிர்வுகள் ! #TAMIL-BLOG-POSTS-3
இணையத்தில் இருந்து எடுத்த கருத்துப்பகிர்வுகள் ! #TAMIL-BLOG-POSTS-2
அதனால் நல்லவர்கள் ஏழையாய் வாழ்கிறார்கள். பணம், கள்ளத்தனம், பொய், பித்தாலாட்டம், அடுத்தவர் உடமையை சுரண்டல், மனசாட்சி இல்லாதவர்களுக்கே சமுதாயம் மதிப்பு தருகிறது.
குடும்பத்தை தவிர யார்மீதும் அதிக அன்பு வைக்காதே; ஏமாற்றினால் தாங்கமாட்டாய். ஊரை விட்டு விலகி வாழ்; எந்த பிரச்சினையிலும் உன் பெயர் இருக்காது. உன்னால் எதையும் செய்ய முடியும்; முயற்சி செய்.
உறவினர்கள் உள்ளத்தில் விஷம் வைத்து வெளியில் தேனாய் பேசுவார்கள். சிறியவர்களிடம் வேடிக்கை வேண்டாம்; அசிங்கப்படுவாய். இன்று உன்னோடு இருப்பவர்கள் நாளை வேறொருவருடன் இருப்பார்கள்;
பணமும் குணமும் மாறும். உன் பேச்சை மீறாத பெண்ணை காதலி, திருமணம் செய்; பேச்சை மீறி நடக்கும் மனைவி பின்னால் கீழ்த்தரமான வேலை செய்வாள். இன்று உனக்காக பொய் பேசும் பெண், நாளை மற்றவர்களுக்காக உன்னிடமே பொய் பேசுவாள். நல்ல எண்ணத்தோடு நல்லது செய்தால் கடவுள் உன்னோடு இருப்பார்.
யாரையும் ஏமாற்றாதே; அது திரும்ப வரும். கெட்ட பழகத்திலிருந்து விலகி நில்; உன்னை நீ தனியாய் அறிவாய். நீ செய்யும் ஒவ்வொன்றும் நாளை உன்னை தேடி வரும்; நல்லதா கெட்டதா என்று முடிவு செய். கடவுளிடம் பக்தி தேவையில்லை; பயம் வேண்டும்.
எதிலும் நீயே அனுபவசாலி; உன் வேலையில் நுணுக்கம் கண்டுபிடி; நீயே முதலாளி. வேலை தெரிந்தவன் தினக்கூலி; வேலையில் நுணுக்கம் தெரிந்தவன் முதலாளி.
உன்னை அவமானப்படுத்தியவர்களை எதிரி என்று நினைக்காதே; உன் வாழ்வால் அவர்களை வருந்தச் செய். யாருக்கும் அறிவுரை கூறாதே; கேட்டு பின்னால் உன்னை தப்பா பேசுவார்கள்.
ஒருவருக்கு அவசரத்தில் உதவி செய்; அடிக்கடி செய்தால் அடிமை ஆகிவிடுவாய். வாழ்க்கை நிலையானது அல்ல; ஆணவம் வேண்டாம்.
எதிரி உனக்கு தேவை; உன்னை யாரென்று புரியவைத்தவன் எதிரி. ஆயிரம் பேர் தவறாக பேசினாலும் கவலைப்படாதே; ஒழுங்காக இரு, உயர்வாய். கஷ்டத்தில் உதவியவனை மறக்காதே; இன்பத்தில் இருந்தும் கஷ்டத்தில் ஓடியவனையும் மறக்காதே. மன்னிப்பு என்பது தவறுக்கு துணை.
தெரியாமல் செய்த தவறை மன்னித்துவிடு; தெரிந்தே செய்த தவறை தண்டிக்க மறக்காதே. உன்னை வெறுப்பவர்களும் எதிர்ப்பவர்களும் எதிரிகள் அல்ல; உன்னை அழிக்க நினைப்பவர்களே எதிரி.
குடும்பம் என்னும் வண்டியில் ஆண் முன் சக்கரம்; பெண் பின் சக்கரம். பெண் பின் சக்கரம் முந்தி சென்றால் குடும்பம் சிதைந்து போகும்.
காரியவாதிகளுக்கு நிரந்தர எதிரி கிடையாது; காரியம் சாதிக்க எதையும் செய்வார்கள்; எச்சரிக்கை. நல்லவர்கள் பாண்டவர்கள் போல வனவாசம் அனுபவித்தார்கள்; கெட்டவன் துரியோதனன் ராஜயோகம் அனுபவித்தான்; ஆனால் இறுதியில் அழிந்தான்.
நல்லவர் வாழ கிருஷ்ணன் போல கடவுள் உடன் இருப்பார்; கெட்டவர் அழிய சகுனி போல கடவுள் உடன் இருப்பார். கலகம் செய்வோரிடம் பேச்சுவார்த்தை வேண்டாம்.
வெற்றி பெற்றால் ஆணவம்; தோல்வி பெற்றால் அனுபவம். தோல்வியே சிறந்தது; சிறிய தோல்வி பெரிய வெற்றியின் ரகசியம். அதிகம் பேசாதே; அதிகம் கேள். உதட்டுக்கு ஓய்வு கொடு; செவிக்கு வேலை கொடு.
நீ தானே அறிவாளி; மற்றவரின் பேச்சை அப்படியே செய்யாதே; யோசி. அருகிலுள்ளதை உதாசீனம் செய்தால் அது போன பின் அதன் அருமை தெரியும். உனக்கு குரு தேவையில்லை; நீயே அறிவாளி; உன் அறிவில் பலமுறை செய்து கற்றுக்கொள்.
மனதை விட்டு கெட்ட எண்ணங்களை வெளியேற்று; நல்ல எண்ணம் உண்டாகும். ஆன்மிக பாதை தவறை தவிர்க்கும் பாதை. அதிகம் நேசித்ததே அதிகம் வேதனை தரும். கனவு நிழல் போல பின்தொடரும்; பயப்படாதே. உலகில் விளைமதிப்பற்றது கண்ணீர். கர்மா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பின்தொடரும்; பாவம் சேர்க்காதே.
வாழ்க்கையில் எல்லாவற்றிலும் பசி; அந்த பசிக்கு மட்டும் உணவு கொடு. சிக்கனத்திலும் சிறிய உதவி செய். "தான்" என்ற கர்வம் உன்னை அழிக்கும். காலனி அணியாமல் நடந்து பழகு; மூளையில் புது உணர்ச்சி வரும். வலிக்கு மருந்து நல்ல தூக்கமும் நல்ல சாப்பாடும்.
கெட்டவர்களுக்கு கெட்டவரே பிடிக்கும்; நல்லவர்களுக்கு நல்லவரே பிடிக்கும். கெட்டவன் கேடு நினைப்பான்; இறைவனும் அவனுக்கு துணை இருப்பான்; அது விதி. நீ வெளியில் சொல்வது நடப்பதில்லை; சொல்லாததே நடக்கும். மானம் ஒன்றே பெரிது; சின்ன விசயங்களில் அசிங்கப்படலாம்; அனுபவமாக கொள்.
உன்னை மதிப்போரை மதிக்கவும்; மதிக்காதவர்களை மதிக்காதே. வாழ்க்கை இன்பம் பாதி, துன்பம் பாதி; துன்பம் வந்தால் சோர்ந்து போகாதே. வார்த்தைகள் கூர்மையான ஆயுதம்; கட்டுப்படுத்து. அடிப்பட்ட பிறகு அனுபவசாலி ஆகு; மீண்டும்
இணையத்தில் இருந்து எடுத்த கருத்துப்பகிர்வுகள் ! #TAMIL-BLOG-POSTS-1
GENERAL TALKS - நோட் பண்ணிகங்க மக்களே - இது ஒரு நல்ல இணையதள கருத்து !!
சனி, 6 டிசம்பர், 2025
GENERAL TALKS - ஒருவரை மன்னிப்பது என்பது எப்படி ?
GENERAL TALKS - கவனமான இணைப்புகளே உருவாக்கப்பட வேண்டும் !
இந்த காலத்தில் குடும்ப வாழ்க்கையை அமைக்க முக்கியமான அட்வைஸ்கள் !
வியாழன், 4 டிசம்பர், 2025
இசையமைப்பாளர் தேவா !! - இணையத்தில் இருந்து எடுத்த ஒரு சின்ன பதிவு !!
1986-ம் ஆண்டு மாட்டுக்கார மன்னாரு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பிரபலமான படங்கள் என்றால் 1989-ல் மனசுக்கேத்த மகராசா மூலம் கவனிக்கப்படத் தொடங்கினார். பின்னர் வைகாசி பொறந்தாச்சு மூலம் புகழ் பெற்றார். பாடல்கள்: "மீனம்மா" "பொட்டு வெச்ச தங்க குடம்" "பஞ்சுமிட்டாய் சீலை கட்டி", "கரு கரு கருப்பாயி", "தூதுவளை இல அரச்சி" போன்ற பாடல்கள் இன்றும் புதிய படங்களில் இடம்பெறுகின்றன. பாடல்கள் மீண்டும் பயன்படுத்தப்படுவது: தேவா இதற்காக வழக்கு தொடரவில்லை. "இன்றைய தலைமுறையில் ரசித்து கேட்பதால் பயன்படுத்தினால் பயன்படுத்தட்டும்" என்ற அவரது பெருந்தன்மை ரசிகர்களால் பாராட்டப்படுகிறது. தேவா 6 முறை முயற்சித்தும் தேசிய விருது கிடைக்கவில்லை. இவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா: 2021-இல் கருவறை என்ற குறும்படத்திற்காக தேசிய விருது பெற்றார். கலைமாமணி விருது (தமிழக அரசு) இவருக்கு ஆசை படத்திற்காக தமிழக அரசின் விருது பாட்ஷா படத்திற்காக தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சார அகாடமி விருது போன்ற விருதுகள் கிடைத்தது. பாடல்கள் மீண்டும் பயன்படுத்தப்படுவதில் அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மிகவும் இலேசான மனிதர், யாரிடமும் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார். "இந்த முன்னணி பிரபல இசையமைப்பாளர் மாதிரி பாடல் வேண்டும்" என்று ரெஃபரென்ஸ் ப்ராஜக்ட் கொடுப்பவர்கள் கொடுத்தாலும், அதை முகம் சுழிக்காமல் ஏற்றுக்கொள்வார். ரசிகர்களின் பாராட்டு: 35 வருடங்களுக்கு முன்பு அவர் போட்ட பாடல்களை இன்றும் 90’s கிட்ஸும், 2K கிட்ஸும் ரசிப்பது அவரது இசையின் நிலைத்தன்மையை காட்டுகிறது. 500+ படங்கள் ! ஸ்ரீகாந்த் தேவா 120+ படங்கள், தேசிய விருது சபேஷ், முரளி, சிவா, போபோ சசி, ஜெய் உறவினர்கள் பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர் தேவா போன்ற பிரபல இசையமைப்பாளருக்கு தேசிய விருது கிடைக்காதது ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது. ஆனால், தேவா தன்னுடைய பாடல்கள் இன்னும் மக்களை கவர்வதை "என் சந்தோஷம்" என்று கருதுகிறார். அவரது பெருந்தன்மை, எளிமை, இயக்குனர்களுடன் நல்ல உறவு ஆகியவை அவரை திரைவட்டாரங்களில் மிகவும் மதிக்கப்படும் இசையமைப்பாளராக ஆக்கியுள்ளன. தேவா தேசிய விருது பெறவில்லை என்றாலும், அவரது இசை ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது. 500-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் இசையமைத்த பாடல்கள் இன்னும் புதிய தலைமுறையையும் கவர்கின்றன. தேசிய விருது இல்லாதது அவரது சாதனைகளை குறைக்கவில்லை; மாறாக, அவரது பெருந்தன்மை, எளிமை, மற்றும் இசையின் நிலைத்தன்மை அவரை தமிழ்சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளராக ஆக்கியுள்ளது. மொத்ததில் நமது தேவா அவர்கள் தமிழ் இசை உலகின் மக்களின் சாம்பியன் என்றே சொல்லலாம் !
TAMIL TALKS - தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை :)
புதன், 3 டிசம்பர், 2025
GENERAL TALKS - இங்கே என்னதான் நடக்கிறது மக்களே ?
GENERAL TALKS - வேகமாகவும் விவேகமாகவும் செயல்பட வேண்டும் !!
GENERAL TALKS - வாழ்க்கையை புரிய வைத்த கெட்ட கனவு !
GENERAL TALKS - சொந்த வாழ்க்கை பஞ்சாயத்துக்கள் !
செவ்வாய், 2 டிசம்பர், 2025
GENERAL TALKS - ஒரு நல்ல பேச்சுத்திறன் வெளிப்பாடு எப்படி இருக்க வேண்டும் ?
இது ஒரு தமிழ் வலைப்பூ ! - TAMIL-WRITINGZ-005
நம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயத்திற்காக நாம் கடுமையாக முயற்சி செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அது நமக்குக் கிடைத்தாலும் இல்லாவிட்டாலும், முயற்சி சரியாக இருந்தால், அது நமக்கு ஒரு வெற்றி. வாழ்க்கையில் பலர் அத்தகைய முயற்சியைக் கூட செய்ய மாட்டார்கள்.
அவர்கள் இன்றைய நாளை நேற்றையதைப் போல விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். அவர்கள் நிகழ்காலத்தைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள், கடந்த கால கவலைகளிலோ அல்லது எதிர்காலத்தின் சந்தேகங்களிலோ மூழ்கிவிடுவார்கள்.
ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் மக்களே, நம் வாழ்வில் நமது வேகம் எப்படி இருக்கிறது என்பதை கவனித்துக்கொண்டு இருக்க வேண்டும் நடைபயிற்சி முதல் சைக்கிள் ஓட்டுதல், இரு சக்கர வாகனங்கள், கார்கள், ரயில்கள், விமானங்கள் என. ஒவ்வொரு பயணத்திற்கும் நமக்கு ஒரு வேகம் கிடைக்கிறதா? அதேபோல், வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் நமக்கு தனித்தனி தீர்வுகள் தேவை.
தூரத்திலிருந்து தெரியும் சூரியனின் பிரகாசத்தை விட மின்னலின் பிரகாசம் அதிகம். அது ஒரு சில வினாடிகள் மட்டுமே நீடிக்கும்.
நம்ம முயற்சிகளும் இந்த மின்னல் போலத்தான். ஆனால் நாம் இவைகளுக்காக குறைவான மதிப்பீட்டை வழங்குவதன் மூலமாக நம்முடைய முயற்சிகளை நாமே தள்ளிப்போடுகிறோம்.
மக்களே, வாழ்க்கையை என்றென்றும் தொடர உங்களுக்கு பணம் தேவை. பணத்தால் மட்டுமே உங்கள் முயற்சிகளில் தவறுகளைச் செய்ய உங்களுக்கு அனுமதி கிடைக்கும். உங்களிடம் பணம் இல்லாதபோது, நீங்கள் எந்த முயற்சியை மேற்கொண்டாலும், அந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தின் கீழ் நீங்கள் வேலை செய்கிறீர்கள்.
இந்த விஷயத்தைப் பற்றிய சரியான புரிதலைப் பெற்ற பிறகு நீங்கள் ஒரு முயற்சியை எடுக்கப் போகிறீர்கள் என்றால், அதை காலவரையின்றி ஒத்திவைக்காதீர்கள், ஆனால் உடனடியாக முயற்சியை எடுக்க வேண்டும் என்று இந்த வலைப்பதிவின் சார்பாக நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம்.
இந்த தமிழ் வலைப்பூ உங்களுக்கு இனிதான வாழ்க்கை அமைய வேண்டுமென்று வாழ்த்துகிறது. இந்த வலைப்பூக்கு தொடர்ந்து பேராதரவு கொடுத்து வெற்றி அடையச் செய்யுமாறு பணிவுடன் கம்பெனி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இது ஒரு தமிழ் வலைப்பூ ! - TAMIL-WRITINGZ-004
இது ஒரு தமிழ் வலைப்பூ ! - TAMIL-WRITINGZ-003
நம் வாழ்வில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களே, நாம் எல்லோருக்கும் பிடித்த நபராக வாழ முடியாது. நம்மை விரும்புபவர்கள் இருப்பார்கள். நம்மைப் பிடிக்காதவர்களும் இருப்பார்கள். சிலருக்கு நம் உயரம் பிடிக்காது, நம் தோலின் நிறம் பிடிக்காது, நம் குரல் பிடிக்காது. இப்படி நம்மைப் பிடிக்காது என்று முடிவு செய்தவுடன் அவர்கள் நிறைய விமர்சனங்களைக் கொட்டுவார்கள்.
அடிப்படையில் இது போன்ற மனிதர்களுக்கு நாம் கடையில் ₹30 க்கு வெண்பொங்கல் வாங்கி சாப்பிட்டால் கூட நாம் நமக்கு பிடித்த சாப்பாட்டை சாபிடுகிறோம் என்ற பொறாமை பொங்கி விடும். நாம் எந்த வகையிலும் சந்தோஷமாக இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய சந்தோஷம் என்று நினைப்பார்கள். இதற்காக நம்முடைய வாழ்க்கையை நாம் விட்டுக் கொடுக்கலாமா என்ற கேள்வி உங்களுக்குள்ளே கேட்டுப் பாருங்கள்.
நம்முடைய வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளது. அனுபவமிக்க சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால் நம்மிடம் பிடித்தவர்களோடு நம்மால் சிரித்து பேச முடிகிறது. நம்மை பிடிக்காதவர்களோடு நம்மால் சிந்தித்து தான் பேச முடிகிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.
நமது நாட்டின் தலைவிதியை மாற்றும் திறன் கொண்ட இளம் தலைமுறையினர் நமது பள்ளிகளில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கலாம் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். நமது மனம் மிகவும் வயதானது. ஜனாதிபதி அப்துல் கலாம்.
இந்த கருத்தைக்கூட எனக்கு பிடிக்கவில்லை. ஆகவே இவரையும் எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லக்கூடிய.ஆட்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் - இவர்கள் எல்லாம் வைத்துக்கொண்டு நம்மால் என்னதான் செய்ய முடியும்?
கொஞ்சமாக லைக்குகளும், கமெண்டுகளும் கிடைத்து ஒரு சின்ன கூட்டத்தின் ஆதரவு கிடைத்தால் போதுமானது. நம்மால் யாரை வேண்டுமென்றாலும் இருக்க முடியும். அதன் மூலமாக சந்தோஷம் தேடிக் கொள்ள முடியும் என்று இதனையே ஒரு வேலையாக வைத்துக் கொண்டு வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா?
ஒன்று உண்மைதான் மக்களே, வெறுப்பு மாற்றத்தை உருவாக்காது, அன்பு மாற்றத்தை உருவாக்காது, உண்மையான மாற்றங்கள் நம் எண்ணங்களாலும் செயல்களாலும் உருவாக்கப்படுகின்றன. நாம் எப்போதும் நம் திறன்களையும் செயல்களையும் மற்றவர்களின் நலனுக்காக பாரபட்சமின்றி கொடுக்க முயற்சிக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்துகொள்வது நல்லது.
இது ஒரு தமிழ் வலைப்பூ ! - TAMIL-WRITINGZ-002
இது ஒரு தமிழ் வலைப்பூ ! - TAMIL-WRITINGZ-001
நமது தமிழ் வரலாற்றின் பாதையில் அறிவின் முக்கியத்துவம் !
அறிவு என்பது கடல் போன்றது. கடலின் கரையை நின்று பார்த்தால் அதன் பரப்பளவு மட்டுமே தெரியும்; ஆனால் அதன் ஆழம், அதன் அகலம், அதன் அலைகள் அனைத்தும் எளிதில் புரியாது. அதுபோல அறிவும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பெற்றாலே அனைத்தையும் பெற்றதாகக் கருத முடியாது.
சில நூல்களைப் படித்தல், சில தகவல்களை அறிதல், சில அனுபவங்களைச் சேர்த்துக் கொள்வது இவை அறிவின் கரையோரம் மட்டுமே. ஆனால் உண்மையை ஆராய்ந்து தெளிவுபடுத்துதல், நன்மை–தீமை பிரித்தறிதல், உலகத்தோடு ஒத்து ஒழுகுதல், மனதை நல்வழிப்படுத்துதல் இவை தான் அறிவின் ஆழம்.
அறிவுடையவன் தான் அறிந்ததை எளிதில் பிறருக்குப் புரியும்படி சொல்லவும், பிறர் சொல்வதில் மறைந்திருக்கும் நுட்பத்தை உணரவும் வல்லவன். உலக நடப்பை அறிந்து அதற்கேற்ப ஒழுகும்போது, மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் மனம் கலங்காமல் நடுநிலை தவறாமல் நிற்பதே அறிவின் உயர்ந்த நிலை.
எனவே, சிறிதளவு அறிவைப் பெற்றாலே “எல்லாம் பெற்றுவிட்டோம்” என்று எண்ணுவது தவறு. அறிவு என்பது முடிவில்லாத பயணம்; அது தொடர்ந்து விரிவடையும், ஆழமடையும், புதிதாக வெளிப்படும். உண்மையான அறிவுடையவன், தன் அறிவு குறைவுகளை உணர்ந்து, மேலும் கற்றுக்கொள்ளும் பணிவுடன் இருப்பவன்.
அறிவின் கடலை முழுமையாகக் கற்றறிய முடியாவிட்டாலும், அதில் ஆழ்ந்து ஆராய்ந்து, வாழ்வை நல்வழிப்படுத்தும் திறனே மனிதனின் உயர்ந்த செல்வம்அறிவு என்பது வெறும் தகவல்களை அறிதல் அல்ல; அது ஒருவனுக்குத் தீங்கிலிருந்து காக்கும் மனக் கவசமாகவும், புலன்களை அடக்கி மனதை நல்வழிப்படுத்தும் ஆற்றலாகவும், எது உண்மை எது பொய் என்பதை ஆராய்ந்து தெளிவுபடுத்தும் திறனாகவும் அமைகிறது.
அறிவுடையவன் தான் அறிந்ததை எளிதில் பிறருக்குப் புரியும்படி சொல்லவும், பிறர் சொல்வதில் மறைந்திருக்கும் நுட்பத்தை உணரவும் வல்லவன். உலக நடப்பை அறிந்து அதற்கேற்ப ஒழுகும்போது, மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் மனம் கலங்காமல் நடுநிலை தவறாமல் நிற்பதே அறிவின் உயர்ந்த நிலை. அறிவுடையவன் நிகழப்போகும் சூழலை முன்கூட்டியே உணர்ந்து தன்னைத் தயார்செய்து கொள்வான்; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவான்
வரவிருக்கும் தீங்கினை முன்கூட்டியே அறிந்து தன்னை காத்துக்கொள்வான். அறிவுடையவன் அனைத்தையும் உடையவன்; அறிவில்லாதவன் எதுவும் இல்லாதவன். எனவே, அறிவே அழியாத செல்வம்; அது இருந்தால் மற்ற செல்வங்கள் தேடலாம், இல்லையென்றால் எதுவும் நிலைக்காது. வாழ்க்கையின் உண்மைகளை ஆராய்ந்து, உலகத்தோடு ஒத்து ஒழுகி, மனத் தெளிவுடனும் கருணையுடனும் வாழ்வதே அறிவுடைமையின் உண்மையானப் பயன்.
GENERAL TALKS - நிச்சயமாக மனித நேயம் வேண்டும் மக்களே !
இந்த கதை இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட கொஞ்சம் ஃபேண்டஸியான கதை : கருணையின் கனியும் – முனியனின் கதை ஒரு சிற்றூரில் பெரும் பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அனைத்தும் அவருக்கே சொந்தமானவை. ஊரிலுள்ள ஏழை உழவர்கள் அனைவரும் அவருக்குக் கூலியாகவே வேலை செய்தனர். அவரிடத்தில் முனியன் என்ற எளிய உழவன் வேலை பார்த்து வந்தான். முனியனுக்கு ஒரு சிறிய குடிசையும், சிறிதளவு நிலமும் மட்டுமே இருந்தன. அந்தச் சிறிய நிலத்தில் தானே உழைத்து, தானே விதைத்து வாழ வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் எப்போதும் இருந்தது. ஒருநாள் முனியன் பண்ணையாரிடம் சென்று பணிவுடன் கேட்டான்: “ஐயா… எல்லா நிலங்களிலும் விதை நட்டுவிட்டார்கள். என் நிலம் மட்டும் காலியாகவே இருக்கிறது. தயவுசெய்து கொஞ்சம் தானியம் கொடுங்கள். என் நிலத்திலும் விதைத்து வாழ முயற்சி செய்கிறேன்.” அதற்கு பண்ணையார் கோபமாக, “சொந்தமாக விவசாயம் செய்ய ஆசையா? அந்த எண்ணமே வேண்டாம். என்கீழ் கூலியாகவே இரு. அரை வயிற்றுக்காவது உணவு கிடைக்கும்!” என்று விரட்டியடித்தார்.
முனியன் மனம் உடைந்து வீடு திரும்பினான். நடந்ததை மனைவியிடம் சொல்லி, “நம் விதிதான் இப்படிப் போலிருக்கிறது… நாம் எப்போதும் பட்டினியில்தான் இருக்க வேண்டியதுதான்” என்று கண் கலங்கினான் அன்றைய நாள் முதல், அவர்களது குடிசையில் ஒரு சிறிய குருவி வந்து கூடு கட்டியது. அதைப் பார்த்த மனைவி, “நாம் காற்றுக்கும் மழைக்கும் அஞ்சிக் கொண்டிருக்கிறோம்… ஆனால் இந்தச் சிறு உயிர் இங்கே கூடு கட்டுகிறது பாருங்கள்” என்றாள். முனியன் இரக்கத்துடன், “பாவம்… அது வாயில்லாத உயிர். அதற்குத் தொல்லை செய்ய வேண்டாம்” என்றான். சில நாட்களில் அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டது. அவை நான்கு குஞ்சுகளாக வெளிவந்தன ஒருநாள் திடீரென அந்தக் கூட்டினுள் ஒரு பாம்பு நுழைந்தது. குஞ்சுகளை விழுங்கத் தொடங்கியது. அவற்றின் அலறலைக் கேட்ட முனியன் ஓடி வந்து பாம்பை அடித்துக் கொன்றான். ஆனால் அதற்குள் மூன்று குஞ்சுகள் உயிரிழந்தன. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் உயிரோடு துடித்துக் கொண்டிருந்தது. முனியன் இரக்கம் கொண்டு அதை எடுத்தான். அதன் உடைந்த காலுக்கு கட்டுப் போட்டு, மீண்டும் கூட்டில் வைத்தான். தினமும் தானும், மனைவியும் வேளா வேளைக்கு அந்தக் குஞ்சுக்கு உணவு கொடுத்து கவனித்தார்கள். சில நாட்களில் அந்தக் குஞ்சின் கால்கள் குணமடைந்தன. ஒரு நாள் அது பறந்து சென்றது. முனியனின் குடும்பம் இன்னும் வறுமையில் வாடிக் கொண்டிருந்தது.
ஒருநாள் மனைவி, “இப்படியே வாழ்க்கை போகுமா? நமக்கு ஒருநாளாவது விடிவு வருமா?” என்று கலங்கினாள். அந்தச் சமயம் கதவு தட்டும் ஓசை கேட்டது. முனியன் கதவைத் திறந்தான். அவன் காப்பாற்றிய குருவி தான் அது! அதன் வாயில் ஒரு சிறிய விதை இருந்தது. அதை முனியனின் கையில் வைத்து, “இந்த விதையை உன் தோட்டத்தில் நடு…” என்று சொல்லி பறந்து சென்றது. சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து, “இதை வீட்டின் முன்புறம் நடு…” என்று இன்னொரு விதையைத் தந்தது. மூன்றாம் முறையாக வந்து, “இதை சன்னலோரம் நடு… என் உயிரைக் காப்பாற்றிய உன் கருணைக்கு இதுவே நன்றி” என்று சொல்லி பறந்து சென்றது முனியன் மூன்று விதைகளையும் நட்டான். மறுநாள் காலையில் அங்கு மூன்று பெரிய பூசணிக் காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன! முதல் பூசணிக்காய் – அதை வெட்டியபோது, சுவை மிகுந்த பலவகை உணவுகள் நிறைந்திருந்தன. அதை வெட்டி உண்டுவிட்டு மீண்டும் சேர்த்தால் அது பழையபடி முழுப் பூசணிக்காயாக மாறியது. இரண்டாவது பூசணிக்காய் – அதற்குள் இருந்து அழகிய ஆடைகளும், விலை உயர்ந்த மணிகளும் வெளிவந்தன. மூன்றாவது பூசணிக்காய் – அதற்குள் இருந்து பொற்காசுகள் கொட்டின. அன்று முதல் முனியனும் அவன் குடும்பமும் வறுமையிலிருந்து விடுபட்டு, நிம்மதியான வாழ்வை அடைந்தார்கள். இதை அறிந்த பண்ணையார், பொறாமையால் அதேபோல் குருவியை ஏமாற்ற முயன்றார். ஆனால் அவர் கருணையால் அல்ல கபடத்தால் குருவியை வளர்த்தார். சாதாரண குருவியாகவே அந்த குருவி இருந்ததால் அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லை.
முதலாளித்துவமும் மனிதநேயமும் - இந்தக் கதையைப் படிக்கும் போது நாம் உணர வேண்டிய முக்கியமான பாடம் என்னவென்றால் முதலாளித்துவம் மனிதநேயமின்றி நடந்தால் அது எப்போதும் டாக்ஸிக்காக மாறும் பல இடங்களில் முதலாளிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, வேலைக்காரர்களை எப்படியும் நடத்தலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்கள் விரும்பினால் கூலியை குறைக்கலாம், விரும்பினால் வேலைக்காரர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கலாம். இது சமூகத்தில் சமத்துவத்தையும், மனிதத் தன்மையையும் அழிக்கும் ஒரு ஆபத்தான நிலை. நல்ல முதலாளி எப்படி இருக்க வேண்டும்? வேலைக்காரர்களும், முதலாளிகளும் ஒரே சமூகத்தின் அங்கமாக இருப்பதை உணர வேண்டும். வேலைக்காரர்களின் வாழ்க்கை, குடும்பம், எதிர்காலம் ஆகியவற்றை மதிக்க வேண்டும். வேலைக்காரர்களின் முன்னேற்றம் தடுக்கப்படாமல், அவர்களும் வளர வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். முதலாளிகள் மனிதநேயத்துடன் நடந்தால் வேலைக்காரர்களுக்கு நிம்மதி கிடைக்கும். சமூகத்தில் சமத்துவம் நிலைக்கும். அனைவரும் சேர்ந்து உழைத்தால், நாட்டின் வளர்ச்சி வேகமாகும். முதலாளித்துவம் என்பது தவறல்ல. ஆனால் அது கருணை, சமத்துவம், மனிதநேயம் ஆகியவற்றோடு இணைந்தால் மட்டுமே நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். வறுமை குறையும், அநீதி மறையும், ஒற்றுமை பெருகும். இதுவே ஒரு நல்ல சமூகத்தையும், நிலையான வளர்ச்சியையும் உருவாக்கும் அடிப்படையான காரணியாக இருக்கும் !
GENERAL TALKS - மனிதநேயம் எப்போதும் நிறைந்த தலைவர் !
திங்கள், 1 டிசம்பர், 2025
GENERAL TALKS - இது ஒரு பிரபலமான சீன நாட்டுப்புற கதை !
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16
நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...
-
இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் தயாரிப்புப் பணிகள் வேறு லெவல்லி...
-
வாடா வாடா வெள்ளை பூவே கொண்டு போடா வெள்ளி தீவே ! தெரிக்கும் தேன்மலை சிரிக்கும் கண்களின் மீது தாக்குதே ஏதோ ஏதோ ஏதோ ஆனேன் வாடா வாடா செல்...