வெள்ளி, 15 நவம்பர், 2024

GENERAL TALKS - WHY YOU SHOULDN'T START A BUSINESS AND GOTO WORK !




இன்றைய வலுவான அளவுக்கு போராடினால்தான் ஜெயிக்க முடியும் என்ற ரியாலிட்டி இருக்கும் உலகத்தில் ஒரு பிஸினேஸ் ஸ்டார்ட் அப் அதாவது தொழில் முனைவில் வெற்றி பெற்றது பொதுவாக பாராட்டப்படும் ஒரு செயல், இருந்தாலும் நான் இங்கே வேறு ஒரு கண்ணோட்டத்தை வழங்க விரும்புகிறேன். நானும் தொழில் தொடங்குகிறேன் என்று இல்லாமல் வேலைக்கு போகும் இளைஞராக தமிழ்நாட்டில் ஒரு நிலையான நிறுவனத்தில் வேலை செய்வது கூடுதல் பயன்பாட்டையும் நிறைவையும் தரும் வழியாக இருக்கலாம் ! வேலை உறுதிப்பாடு ஒரு முக்கிய காரணமாகும். பேர்மனேன்ட் நிறுவல் முறையில் நிறுவனத்தில் வேலை செய்வது சம்பளம் மாதத்துக்கு வந்துவிடும் என்ற ஒரு பாதுகாப்பு உணர்வை வழங்குகிறது. இது மட்டுமே இல்லாமல் கம்பெனி சார்பாக முறைப்படி கிடைக்கும் ஊதியங்கள், மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் போன்ற பயன்கள் இதற்கு சார்ந்தது. இந்த உறுதிப்பாடு உங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் திட்டமிட உதவுகிறது. புத்திசாலியான நிறுவனங்கள் தொழில் திறமைகளை வளர்க்க சொந்த காசு போட்டு நிறுவனங்கள் மேம்பாட்டுக்கு பெரும்பாலும் தொழில்முறை கற்றல் படிப்புகளை படிக்கும் வாய்ப்புகளை வழங்குகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் குறைந்தபட்சம் வாராந்திர பயிற்சி திட்டங்கள், வேலை திறன் மேம்பாட்டுக்கு வழிகாட்டுதல் மற்றும் வேலையின் படிக்கட்டுகளில் முன்னேற வாய்ப்புகளை எடுத்துக்கொள்ளுதல் போன்ற நிறைய விஷயங்களுக்கு வழிகாட்டுதல் வழங்குகின்றன ! இது எல்லாவற்றையும் விட பெரிய காரணம் வேலை-வாழ்க்கை சமநிலையாகும். தொழிலில் எப்போதும் அதிக நேரம் கொடுக்க வேண்டும் மற்றும் தனிப்பட்ட தியாகங்களை செய்ய வேண்டும். எல்லோருடனும் செலவு செய்ய நேரம் இருக்காது இதுவே ​​ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது விடுமுறை நாட்களை கொடுப்பதால் முழுமையான வாழ்க்கையை வழங்கக்கூடும். இன்னும் நிறைய காரணங்களை தொடர் கட்டுரைகளில் பார்க்கலாம். வலைப்பூவுக்கு சந்தாதாரராக மாறிவிடுங்கள் ! - WGT



கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...