வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
ஞாயிறு, 12 அக்டோபர், 2025
kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa
CINEMA TALKS - 3 BODY PROBLEM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் பின்னணியில் பாதிக்கப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளோடு அமைக்கப்பட்ட சைண்டிஸ்ட்களின் சொந்த கதை சோக கதைதான் இந்த "மூன்று-பொருட்களின் பிரச்சனை"!
இயற்பியலாளர் யே வென்ஜி மற்றும் நானோ பொருட்கள் ஆராய்ச்சியாளர் வாங் மியாவோவின் தலைவிதியை பின்னிப்பிணைக்கிறது தாறு மாறான வேற்றுகிரக வாசிகளின் சதி வேற லெவல்லில் இருக்கிறது.
ஒரு போலீஸ் ஆபிசர் விஞ்ஞானிகளிடையே தொடர்ச்சியான மர்மமான தற்கொலைகளுக்குப் பிறகு அறியாமலேயே ஒரு வேற்றுகிர போர் காலத்தின் நெருக்கடியில் சிக்குகிறார்.
சம்மந்தம் இல்லாமல் ஒரு மெய்நிகர் ரியாலிட்டி விளையாட்டின் மூலம், வேற்றுகிரகவாசி நாகரிகமான ட்ரைசோலரன்ஸ் - அதன் மூன்று சூரியன்கள் காரணமாக கணிக்க முடியாத மற்றும் பேரழிவு தரும் சகாப்தங்களைத் தாங்கும் சொந்த கிரகம் - பூமியை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளது என்பதை வாங் கண்டுபிடிப்பதாக காட்சிகள்- மெயின் கதையை சொல்ல இப்படியும் ஒரு வழியா ?
மனிதகுலத்தால் ஏமாற்றமடைந்த சீன கலாச்சாரப் புரட்சியின் கொடூரங்களில் இருந்து தப்பித்த யே வென்ஜி, பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வேற்றுகிரகவாசிகளை ரகசியமாகத் தொடர்பு கொண்டார். அப்போது பிளான் பண்ணி பூமிக்கு படையெடுத்த நமது ஏலியன்கள் பூமிக்கு வருகை தரவே 400 வருஷங்கள் ஆகுமாம்.
நமது ஹீரோயின் இந்த ரகசியங்களை வெளிப்படுத்தும்போது, பூமி வரவிருக்கும் வேற்றுகிரகவாசிகளின் அச்சுறுத்தலை நேருக்கு நேராக எதிர்கொள்கிறார் என்பதை அவர் உணர்கிறார், இந்த கதை அறிவியல், ஒழுக்கம் மற்றும் உயிர்வாழ்வு பற்றிய ஆழமான கேள்விகளை எழுப்புகிறது. கிளைமாக்ஸ்ஸில் உலகமே இணைந்து பிளான்களை போட்டு வைப்பதோடு கதை முடிகிறது.
சனி, 11 அக்டோபர், 2025
CINEMA TALKS - ALEX PANDIAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
புதன், 8 அக்டோபர், 2025
MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
ஞாயிறு, 5 அக்டோபர், 2025
GENERAL TALKS - இந்த ஜெனெரேஷன் இசையை ரசிக்கவில்லையா ?
GENERAL TALKS - வாழ்க்கை நாடகமா ? என் பொறப்பு பொய் கணக்கா ?
சனி, 4 அக்டோபர், 2025
GENERAL TALKS - வணிகம் இப்படித்தான் இருக்கும் !
GENERAL TALKS - போதுமான பொருளாதாரம் அவசியம்
GENERAL TALKS - தமிழை எப்படியும் பிறமொழிகள் மிஞ்சுகிறது !
STORY TALKS - பகுத்தறிவு மக்களுக்கு தேவைப்படுகிறது !
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாததாகவும் மாறியது.
இதனால் கவலையடைந்த கிராம மக்கள், அந்த ஞானியிடம் ஆலோசனை கேட்டு சென்றனர். சுத்தமான தண்ணீர் கிணற்றின் மேற்பரப்பிற்கு வரும் வகையில், கிணற்றில் இருந்து நூறு வாளி தண்ணீர் எடுக்கச் சொன்னார்.
கிராம மக்கள் நூறு வாளி தண்ணீர் எடுத்தார்கள் ஆனால் தண்ணீர் நிலை அப்படியே இருந்தது. அவர்கள் மீண்டும் ஞானியிடம் சென்றார்கள். இன்னும் நூறு வாளிகளை வெளியே எடுக்கச் சொன்னார். கிராம மக்களும் அதையே செய்தும் பலனில்லை.
ஞானியின் அறிவுரையின்படி கிராமவாசிகள் மூன்றாவது முறையாக மற்றொரு நூறு வாளிகளை எடுக்க முயன்றனர், ஆனால் தண்ணீர் இன்னும் அசுத்தமாக இருந்தது.
ஞானி கேட்டார், ”இவ்வளவு கணிசமான அளவு தண்ணீரை அகற்றி, கிணறு முழுவதும் எப்படி மாசுபட்டது. முந்நூறு வாளி தண்ணீர் எடுப்பதற்கு முன் நாயின் உடலை அகற்றிவிட்டீர்களா?”
கிராம மக்கள், ”இல்லை, நீங்கள் தண்ணீரை வெளியே எடுக்க மட்டுமே அறிவுறுத்தினீர்கள், நாயின் உடலை அல்ல!” என்றார்கள்.
பிரச்சனையின் மூலத்தை புரிந்து உழைத்தால், நம் பிரச்சனைகள் மீண்டும் ஏற்படாது. இதுவே நீங்கள் பிரச்சனையே புரியாமல் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தால் கஷ்டத்தில் மாட்டிக்கொண்டு விடுவீர்கள்.
GENERAL TALKS - மோசமான வாழ்க்கையை தவிர்த்தல் !
CINEMA TALKS - 21 BRIDGES - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
இந்த படத்துக்கு கதையில் திரைக்கதையில் நல்ல புத்திசாலித்தனம் இருக்கிறது குறிப்பாக கடினமான காவல் அதிகாரியாக ஒரு குறிப்பிட்ட சிட்டுவேஷனை வந்துவிட்டால் அந்த சிட்டுவேஷனை எப்படி சமாளிப்பது என்பதற்காக ஒரு அனுபவம் மிக்க ஒரு அதிகாரியாக இருந்து அந்த இடத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் சாமர்த்தியமாக திட்டங்களை நகர்த்துவதும் மிகவும் குறைவான சேதத்தில் மக்களாக இருப்பவர்களை அனைவரையும் காப்பாற்றுவதற்காகவும் இருக்க கூடிய நேரங்களில் மிரட்டல் நிறைந்த ஆக்ஷன் காட்சிகள் என்று முடிச்சுகள் நன்றாக இருக்கிறது.
ஆனால் இந்த படத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை என்னவென்றால் இந்த படம் முழுவதுமே ஒரே குறிப்பிட்ட கதைக்குள்ளே கடினமாக அடைந்து கிடக்கக்கூடிய திரைக்கதையாக இருப்பதால் இந்த படத்தை ஆரம்பத்தில் அவ்வளவாக புதிய விஷயமாக கருத முடியவில்லை. கதை போகபோகத்தான் இன்வெஸ்டிகேஷன் தகவல்களை அலசி ஆராய்ந்து பார்க்கவே மங்காத்தா படம் போல காவல் துறையே குற்றங்களை அதிக்கப்படுத்த துணைபோன சதிகள் வெளியே வந்து ஒரு ஆக்ஷன் படத்துக்கான அர்த்தத்தை இந்த படம் கொடுத்து இருக்கிறது என்றே சொல்லலாம்.
சண்டைகள் , மோதல்கள், பரபரப்பு என்று ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் படத்தை வேற லெவல் ஆக்ஷன் பின்னணிக்குள்ளே எடுத்து இருப்பதால் உங்களுக்கு ஆக்ஷன் படங்கள் பிடிக்கும் என்றால் இந்த படத்தை கண்டிப்பாக உங்களுடைய பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். மறைந்த முன்னாள் நடிகர் சாட்விக் போஸ்மென் தரமான நடிப்பு திறனை வெளிப்படுத்தி ஒரு நல்ல படைப்பை கொடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம் !
GENERAL TALKS - மேம்படுமே வாழ்க்கை முறைகள் !
GENERAL TALKS - மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்கள் !
இதுதான் நான் நிதானமாக யோசிக்க வேண்டிய தருணம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டிய காரணம். இந்த உலகத்தை இன்னும் கொஞ்சம் நன்றாக உற்று கவனிப்போமா ?
நிறைய விஷயங்களை நீங்கள் யோசித்துப் பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் நிறைய மனிதர்களை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள் இந்த அனைத்து மனிதர்களைப் பற்றியும் நீங்கள் நிதானமாக ஒரு இரண்டு மணி நேரம் யோசித்துப் பாருங்கள் இந்த இரண்டு மணி நேரத்தில் நீங்கள் யோசிக்க வேண்டிய என்ன அலைகள் எப்படி இருக்க வேண்டும் என்றால் எல்லைக் கோடுகளை மீறிய மனிதர்கள் தான் இப்போது நன்றாக இருக்கிறார்கள் ! ஆனால் எல்லை கோட்டுக்குள்ளே தங்களை அடங்கிக்கொண்டு நல்ல பெயர்களை எடுத்தவர்கள் இப்போது எங்கே ?
இந்த எல்லை கோடுகளை யார் வரைந்தார்களோ அவர்கள் நிச்சயமாக சாமர்த்தியமாக முன்னேறக் கூடிய புத்திசாலியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் கண்மூடிக்குத்தனமாக நம்பக்கூடிய மூடத்தனம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் காரணம் என்னவென்றால் இந்த எல்லை கோடுகளை மீறினால் தான் உங்களுக்கு எல்லாமே கிடைக்கிறது இந்த எல்லைக்கோடுகளுக்குள்ளே இருந்தால் உங்களுக்கு எதுவுமே கிடைக்கப் போவது கிடையாது.
நீங்கள் சாதாரணமாக வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள் திடீரென்று உங்களுக்கு நிறைய பணம் கிடைத்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் இந்த படம் உங்களுக்கு சொந்தமில்லை என்றால் இந்த பணத்துக்கு சொந்தமானவர்களிடம் நீங்கள் முதலாவதாக கொடுக்கலாம் இல்லையென்றால் இரண்டாவதாக இந்த பணத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்னும் பட்சத்தில்தான் உங்களுக்கு மிகவுமே சரியான விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த பணத்துடைய தேவை உங்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது என்றால் உங்களால் மறுபடியும் திரும்ப கொடுக்க முடியும் என்றால் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு ? இந்த பணத்தை தொலைத்தவருக்கு இந்த பணம் மிகவும் அவசியமில்லை என்றால் இந்த பணத்தை கிடைத்தவருக்கு உங்களுக்கு அவசியம்தானே ? தவறான வழியில் சேர்த்த படம் என்றால் நீங்கள் யோசிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை இருக்காது இந்த ஒரு விஷயத்தை நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள் எல்லைகளை மீறப் போகிறீர்களா ? இல்லை அடங்கி வாழ போகிறீர்களா ?
அடக்கம் எந்த அருளையும் யாருக்குமே கொடுப்பதில்லை - அடக்கம் இருந்தவர்கள் எப்போதுமே வென்றதும் இல்லை இப்போது எல்லாம் ஒரு விஷயம் நடக்கப்போகிறது இந்த காலத்தை யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்
எப்போதுமே எனக்கு கடந்த காலத்தில் இருந்தது போல ஒரு சந்தோஷமான வாழ்க்கையை மட்டும் தான் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் ஆனால் கடந்த காலம் என்பது எப்போதும் முடிந்து போன விஷயம். கடந்த காலத்தில் இருக்கக்கூடிய தொழில்நுட்பம் எல்லாம் எப்போது காலாவதி ஆகிவிட்டது
இன்னுமே கடந்த காலத்து பழைய பஞ்சாங்க கருத்துகளை மட்டுமே சொல்லி எத்தனை ஒழுக்கமாக இத்தனை புத்திசாலியாக இதனை நல்ல பெயர்களுடன் வாழ வேண்டும் என்பதை மட்டுமே மிகவும் உறுதியாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் ?
ஆனால் இப்போது எதிர்காலம் மாறிவிட்டது நீங்கள் ஒரு காலத்தில் வாழ்ந்திருப்பீர்கள் அப்போதெல்லாம் உங்களுக்கு தெரிந்த விஷயத்தை நீங்களாக சொன்னால் மட்டும் தான் மற்றவர்களுக்கு தெரியும் ஆனால் இப்போதெல்லாம் எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரியும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது எல்லோருமே கையில் இருக்கும் ஒரு குட்டி திரையில் உலகத்தில் அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டு வெளியே வரும் போதே மாஸ்டராக வருகிறார்கள்
மேலும் சமுதாயத்தின் இந்த விளையாட்டை சாமர்த்தியமாக விளையாடி இந்த விளையாட்டில் வெற்றியும் அடைந்து கிராண்ட் மாஸ்டராக மாறுகிறார்கள் மக்களைத் தானே ஒரு இயந்திரம் போல மேம்படுத்திக் கொள்கிறார்கள் இதனை அப்டேட் என்கிறார்கள் இல்லையென்றால் அப்கிரேடு என்கிறார்கள் இந்த காலத்தில் பிறந்த கைக்குழந்தை கூட தன்னுடைய உயிரை உள்ளங்கையில் பிடித்துக் கொண்டு போராடித்தான் ஆக வேண்டும்
அந்த காலத்தில் இப்படிப்பட்ட போராட்டங்கள் இருக்காது அந்த காலத்தில் நீங்களாக போட்டுவிட்ட நிமிடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதால் அந்த நிபந்தனைகளையும் கட்டுப்பாடையும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் மனதிற்காக நீங்களும் எக்கச்சக்கமான இலக்கியங்களை படைத்து விட்டதை நம்பிக்கொண்டு இருப்பதுதான் உண்மை !
GENERAL TALKS - கவனிக்கத்தக்க பாசிட்டிவ் யோசனைகள்
இந்த காலத்தில் இப்படி ஒரு முன்னேற்ற யோசனையா ?
GENERAL TALKS - வேலை பார்க்கும் இடத்தை தேர்ந்தெடுப்பது !
மேம்பட வேண்டும் வாழ்க்கை முறைகள் ! - #2
மேம்பட வேண்டும் வாழ்க்கை முறைகள் ! - #1
CINEMA TALKS - ETHTHAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
சமீபத்தில் விமல் நடித்த 'எத்தன்' படத்தைப் பார்த்தேன். குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும், மிக உயர்ந்த தரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கதையைப் பொறுத்தவரை, இது ஒரு சராசரி குடும்ப உறவுகளில் வளரும் இளைஞர் பற்றிய ஒரு சாதாரண கதை.
படிப்பு முடித்த நம் கதாநாயகன், ஒரு தொழிலைத் தொடங்க முயற்சித்து கடன் வாங்குகிறார், ஆனால் அந்தத் தொழில்கள் அவரது நண்பர்கள் காரணமாக தோல்வியடைகின்றன, மேலும் அவர் தனது முதலீட்டை இழந்து கடன்களுக்காக சிரமப்படுகிறார்.
அவ்வப்போது சில மோசடி வேலைகளையும் செய்கிறார். இந்த வழியில், கதாநாயகிக்கு நடந்த சில சிறிய மோசடி சம்பவங்கள் காரணமாக அவள் சிக்கலில் இருக்கும்போது அவளுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சூழ்நிலைகளால் வில்லன்களை எதிர்த்து போராடவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்.
வில்லனால் நிச்சயிக்கப்பட்ட கட்டாய திருமணத்திலிருந்து கதாநாயகியை நம் ஹீரோ காப்பாற்றுகிறார், இதனால் வில்லனின் ஆட்களால் தூரத்தப்படும் இருவரும் தங்களை காப்பாற்றிக்கொள்கிறார்களா என்பதே இந்த படத்தின் கதை !
படத்தின் நகைச்சுவை காட்சிகள் கதைக்கு சரியாக பொருந்துவதால், கதை வேகமாக நகர்கிறது. மேலும், ஒரு சராசரி புறநகர்ப் பகுதியின் கடைகளில் சிக்கித் தவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை விமல் சிறப்பாக சித்தரித்துள்ளார். நெருங்கிய நண்பர்களாக வரும் கதாநாயகி மற்றும் துணை கதாபாத்திரங்களும் இந்தப் படத்தில் ஒரு சஸ்பென்ஸ் சூழலை உருவாக்க உதவியுள்ளன.
「 ✦ 🇬🇪🇳🇪🇷🇦🇱 🇹🇦🇱🇰🇸 ✦ 」- #21
「 ✦ 🇬🇪🇳🇪🇷🇦🇱 🇹🇦🇱🇰🇸 ✦ 」- #20
「 ✦ 🇬🇪🇳🇪🇷🇦🇱 🇹🇦🇱🇰🇸 ✦ 」- #19
MUSIC TALKS - MAALAI MANGUM NERAM - ORU MOGAM KANNIN ORAM - UNNAI PAARTHUKONDE NINDRALUM - PODHUM ENDRU THONDRUM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன ? வெயில் எட்டி பார்த்தால் என்ன ?
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்
பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை தொட்டு கோலம் போடும்
வாழ்வின் எல்லை தேடும் தேடும்
ஒரு வீட்டில் நாம் இருந்து ஓர் இலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்
நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்
பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்
நம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்
வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்
தனியாக நான் இல்லை என்றே சொல்லி சினுங்கும்
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு
உன் வாசம் என்னில் பட்டும் வாடி போனேன்
வாசல் தூணாய் நானும் ஆனேன்
kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa
கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...
-
நீங்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் இந்த படம் என்று சொல்லலாம், செம்ம எண்டர்டெயின்மெண்ட், இந்த படத்துடைய கதையை பார்க்க...
-
அலையே அலையே காட்டுல மழையே அலைலே அல்ல ட்யூட் செதற பதற உடுவன் நான் உதற அல்லல்லே அல்லா நண்பா ஊரும் ரத்தம் 10000 AURA வை கொண்டு அச்சாது ந...