சனி, 4 அக்டோபர், 2025

மேம்பட வேண்டும் வாழ்க்கை முறைகள் ! - #2


ஒருவர் பணத்தைக் கையாளும்போது, ​​அவர் மூன்று விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்: வருமானம், செலவு மற்றும் சேமிப்பு. சிலருக்கு வருமானம் பூஜ்ஜியமாக இருக்கும். மற்றவர்களுக்கு செலவு பூஜ்ஜியமாக இருக்கும். வருமானம் மற்றும் செலவு இல்லாத நேரங்களில் சேமிப்பு என்பது இல்லாமல் போய்விடும்.

உலகெங்கிலும் நடத்தப்படும் பல பள்ளிகளில், பள்ளி மாணவர்களுக்கு சிறு வயதிலிருந்தே தொழிற்கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒரு பொருளை எவ்வாறு உருவாக்குவது, அதை விற்பது மற்றும் அதன் மூலம் கணிசமான பணம் சம்பாதிப்பது, மற்ற நாட்களில் அந்தப் பணத்தை எவ்வாறு கையாள்வது என்பதை மாணவர்களுக்குக் கற்பிப்பதில் இந்தத் தொழிற்கல்வி ஒரு அடிப்படைப் பகுதியாகும், மேலும் இது முறையான கணக்கியலை அடிப்படையாகக் கொண்டது.

இன்றைய காலகட்டத்தில், துன்பப்படும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற லட்சியத்துடன் வளர்ந்த இளைஞர்கள் ஒரு கட்டத்தில் துன்பப்படும் அந்த மக்களே நாம்தான் என்ற நிலையை புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர். இதை அவர்கள் தங்கள் போட்டிகளிலும் வெளிப்படுத்தியுள்ளனர்.

லைஃப் ஸ்டைல் என்பது வெறும் பணக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமான விஷயம் அல்ல. உதாரணத்துக்கு நடனம் தெரிந்தவர்களுக்கு அந்த நடனத்தில் தன்னுடைய ஸ்டைல் என்பதை கவனித்து வைத்து இருப்பார்கள். அதேபோல ஓவியம் தெரிந்தவர்களுக்கு அந்த ஓவியத்தில் தன்னுடைய ஸ்டைல் எது என்பதையும் கவனித்து வைத்திருப்பார்கள்.ஆனால் வாழ்க்கை என்பது இல்லருக்கும் பொதுவானது என்பதால் வாழ்க்கைக்கான லைஃப் ஸ்டைல் என்ற விஷயத்தை அனைவருமே நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும்.



 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...