சனி, 18 ஜனவரி, 2025

ARC - 085 - பொறுப்புகளை எடுத்து செய்தல் !

 

ஒரு காலத்தில் மிகவும் வசதி படைத்த ஒரு படகின் உரிமையாளர் அதை பெயிண்ட் அடித்து அழகாக்க விரும்பி ஒரு பெயிண்ட் காண்ட்ராக்டரிடம் பணியை ஒப்படைத்தார்! அப்பணியை கண்ணும் கருத்துமாய், கவனத்துடன் செய்து வரும்போது அப்படகின் அடியில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதைக் கண்ட பெயிண்ட்டர் மிகவும் நேர்த்தியாக அந்த ஓட்டையை அடைத்து சீர் செய்து, பெயிண்ட் வேலையையும் முடித்து, அதன் உரிமையாளரிடம் காண்ட்ராக்ட் பேசியபடி தன் தொகையை வாங்கிக்கொண்டு, மிக அழகாக பெயிண்ட் செய்துள்ளதற்காக பாராட்டையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். மறுநாள், அந்தப்படகின் உரிமையாளர் பெயிண்டரை தேடி அவரிடத்திற்கு ஒரு பெரிய தொகை மற்றும் பரிசுடன் வந்தார். "நேற்றே எனக்கு சேர வேண்டியதை தந்து விட்டீர்களே ஐயா" என்றார் பணிவாய்! அதற்கு அவர் "இது நீங்கள் செய்த பெயிண்ட்டிங்காக அல்ல! நீங்கள் அடைத்த படகின் ஓட்டைக்காக! " " அது ஒரு சிறிய வேலை! அதற்குப்போய் ஏன் இதெல்லாம் " என்றார் பெயிண்ட்டர்! அதற்கு அந்த படகின் உரிமையாளர் சொன்னார். "நண்பரே! உங்களுக்குத் தெரியாது என்ன நடந்தது என்று! நான் உங்களை பெயிண்ட் செய்ய சொன்னபோது அதிலிருந்த ஓட்டையை முற்றிலும் மறந்திருந்தேன்! பெயிண்ட் காய்ந்தபின் என் குழந்தைகள் அந்த படகை எடுத்துக்கொண்டு விளையாட்டாய் மீன் பிடிக்க போய்விட்டனர்! அவர்களுக்கும் படகில் ஓட்டை இருந்தது தெரியாது! அவர்கள் படகை எடுக்கும் போது நானும் வீட்டில் இல்லை! வீட்டிற்கு திரும்பி வந்தபோது படகை எடுத்துக்கொண்டு குழந்தைகள் மீன்பிடி விளையாட போய் உள்ளதாக கேள்விப்பட்ட போதுதான் படகில் இருந்த ஓட்டை ஞாபகம் வந்தது! மிகவும் பதறிப்போய் அவர்களைத் தேடி ஓடினேன், என்ன ஆயிற்றோ என்று! அவர்கள் மகிழ்ச்சியாய் குதூகலத்துடன் திரும்பி வந்துகொண்டிருப்பதை பார்த்தவுடன் நெகிழ்ந்துபோனேன்! ஓடிப்போய் அந்த ஓட்டையை தேடினேன்! வெகு கவனமாய், அக்கறையோடு சரிசெய்யப்பட்டிருந்த்தை கண்டவுடன் மிகவும் ஆச்சர்யமான உங்கள் செயலை பாராட்ட ஓடி வந்தேன். இந்த சிறிய செயல்தான் மகத்தாய் சில உயிர்களை காப்பாற்றியுள்ளது" என்றார்! நாமும் நம் வாழ்வில் கடமையே என காரியமாற்றாமல், எதையும் பிரியமாய், கவனமாய், அக்கறையாய் ,பொறுப்பாய் செய்வோம்! மேலும் பொறுப்புகளை எடுத்து செய்யும்போது சமூக அக்கறையும் கொஞ்சம் இருந்தால் வாழ்க்கை இன்னுமே சிறப்பானதாக அமையும் !

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...