𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

செவ்வாய், 7 ஜனவரி, 2025

GENERAL TALKS - ILAKKANA KAVIDHAI ELUDHIYA AZHAGE - URUGIYATHE HEY URUGIYATHE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே 
என் உயிரே

நீ தான் 
பெண்ணே
கண்ணில் 
எரிகிற நிலவோ

இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே 
என் உயிரே

உனதிரு விழிகள்
இமைத்திடும் பொழுதில்
பகலிரவு உறைகிறதே

இதயம் கேட்குதே
என் காற்றாக கனவாக 
கை வீசும் காதல்
இவள் யாரோ

தேவதையின் விழியில்
விழா காணும் 
பொன்வானம்
அழைக்குது அருகில்
மின்னல் விரல் ஸ்பரிஸம்
அம்மாடி 
சிலிர்க்குது நெஞ்சில்

காதல் மார்பில் ஆடும் 
மணிமாலையோடு
ஓடும் காலம் இன்று 
சுழல்கின்றதே


அன்பே நீ தான்
காதல் வனங்களின் 
விதையோ

உன் அருகில் 
இருந்தால்
அறியாத பூவாசல் 
கதவுகள் திறக்கும்

உன் மடியில் 
இருந்தால்
மழை மேகம் 
எனை வந்து மூடும்

கூடும் காதல் 
கைகள் 
விலகாது என்றும்
தேடும் ஏக்கம் 
நெஞ்சில் 
தீராதம்மா

காதல் வாழும் 
வாழும்
அழகிய நினைவு

இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே 
என் உயிரே

உனதிரு விழிகள்
இமைத்திடும் பொழுதில்
பகலிரவு உறைகிறதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக