𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

TAMIL TALKS - EP. 67 - அவரவர் வாழ்க்கையில் ஆனந்தம் !


இன்னைக்கு தேதிக்கு நாம் சந்தோஷமாக இருந்தால் போதும். மற்றவர்களை பற்றி கவலையே படக்கூடாது என்று ஒரு நிலைப்பாடு நம்ம மக்களுடைய மனதுக்குள்ளே எதனால் உருவானது ? இதுக்கு ஒரு முக்கியமான யாருமே எந்த சப்போர்ட்டுமே பண்ணுவது இல்லை. போதுமான சப்போர்ட் இருந்தால் பெரிய போரையே வெற்றி அடைந்துவிடலாம் ஆனால் எந்த சப்போர்ட்டுமே இல்லாமல் தனியாக ஒரு மனுஷன் பிரச்சனைகளை எதிர்த்து சண்டை போட வேண்டும் என்றால் அதனை விட பெரிய ஆபத்து அந்த மனுஷனுக்கு கிடையாது. அவன் வாழ்க்கையில் உயிரை பணயம் வைத்து ஒரு ஒரு நொடியையும் வாழ்ந்துகொண்டு இருக்கிறான். அப்படி இருக்கும்போது தனக்கு எந்த சப்போர்ட்டுமே செய்யாத ஒரு விஷயத்தை எதுக்காக அவன் பாதுக்காக்க வேண்டும் என்று சமுதாயத்தை பார்த்து செருப்பால் அடிப்பது போல கேள்விகளை கேட்கிறான். இது நியாயம்தானே ? நான் யாருக்காவது சப்போர்ட் பண்ணினால் பதிலுக்கு அவர்களுமே ரிஸ்க் எடுத்து எனக்கு சப்போர்ட் பண்ணுகிறார்கள். இதுதான் என்னுடைய வாழ்க்கையில் நடக்கிறது. எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் வேலை பார்ப்பது சோம்பேறித்தனத்தைவிட மோசமானது. ஒரு மரத்தை நட்டால் அந்த மரம் கொடுக்கும் பழத்தை சாப்பிட வேண்டும் அந்த மரத்தின் அடியில் நிழலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அதுவுமே பண்ணவில்லை என்றால் பேசிக்காக இது எல்லாமே அன்கன்டிஷனல் லவ் என்று கதையை விட்டால் நான் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆரம்பிக்கிறேன். நீங்கள் பண்ணுவது அன்கன்டிஷனல் லவ் எல்லாம் இல்லை அன்கன்டிஷனல் புரஃபஷன் ஆகும். கையில் காசு பணம் இல்லை என்றால் குளியல் போட கூட தண்ணீர் இல்லாமல் கடவுளால் வெறுக்கப்படும் ஒரு உயிராக மாறிவிடுவீர்கள் என்பதையும் கவனமாக தெரிந்துகொள்ளுங்கள் ! இந்த வலைப்பூவை பயன்படுத்தியமைக்கு நன்றி !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக