𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

MUSIC TALKS - MINSARAM EN MEEDHU PAAIGINDRATHE ! UN KANGAL EN KANNAI MEIGINDRATHE ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே


நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்
உதடுகள் வேர்க்கும்வரை
உண்மையில் நானும் யோக்கியன்தானடி
உன்னைப் பார்க்கும்வரை


KADHAL SEA- YE !!! KADHAL SEA- YE !!! 
KADHAL SEA- YE !!!  KADHAL SEA- YE !!! 


மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே

என்னைவிட இந்த உலகிலே
உன்னை மிகமிக விரும்பினேன்
உந்தன் அன்பு தரும் சுகத்தினால்
இன்னும் உயிருடன் இருக்கிறேன்


தீ கூட தின்னத் தின்ன தித்திக்கும் என்று கண்டேன்
அன்பே நீ பக்கம் வந்தால் புத்திக்கு ஓய்வு தந்தேன்
பெண் என்றால் மென்மை என்று கவிதைகள் சொல்லி வந்தேன்
உன்னை நான் பார்த்த பின்தான் கன்னத்தில் போட்டுக்கொண்டேன்

KADHAL SEA- YE !!! KADHAL SEA- YE !!! 
KADHAL SEA- YE !!!  KADHAL SEA- YE !!! 

மெல்ல மெல்ல எந்தன் உயிரினை 
மென்று தின்று இன்று சிரிக்கிறாய்
கொள்ளை அடித்தது நீயடி என்னைக் 
குற்றம் சொல்லித் திரிகிறாய்…

பொல்லாத இம்சை ஒன்றில் புரியாமல் மாட்டிகொண்டேன்
இம்சைக்கு இன்னொரு பேர் காதல்தான் என்று கண்டேன்
அன்பே நீ அருகே வந்தால் என் உலகம் சுருங்கக் கண்டேன்
ஒரு கோப்பை தண்ணீர் காதல் அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன்


KADHAL SEA- YE !!! KADHAL SEA- YE !!! 
KADHAL SEA- YE !!!  KADHAL SEA- YE !!! 


மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே


நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்
உதடுகள் வேர்க்கும்வரை
உண்மையில் நானும் யோக்கியன்தானடி
உன்னைப் பார்க்கும்வரை


KADHAL SEA- YE !!! KADHAL SEA- YE !!! 
KADHAL SEA- YE !!!  KADHAL SEA- YE !!! 


1 கருத்து:

  1. இயக்குநர் சொன்ன அந்த வார்த்தை.. கடுப்பில் நான் எழுதி பாடல் செம ஹிட்.. யுகபாரதி! கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான யுகபாரதி, ஆனந்தம் திரைப்படத்தில் "பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்" என்ற பாடலை எழுதி பாடலாசிரியராக அறிமுகமானார். இவர் ஏறத்தாழ இரண்டாயிரம் திரைப் பாடல்களை எழுதியுள்ளார். மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இயக்குநர் ஒருவர் சொன்ன வார்த்தையால் தான், கடுப்பில் எழுதிய பாடல் குறித்து பேசி உள்ளார். ஜெயம் ரவி நடித்த "எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி" படத்தில் ஒரு பாடல் வரும் 'அய்யோ அய்யோ உன் கண்கள் அயய்யோ... உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே அயய்யோ' என்ற பாடல் வரும் இந்த பாடலுக்கு முன், நான் எழுதிய பல்லவி 'கண்டேன் கண்டேன் உன் கண்கள் கண்டேன்... நான் உன்னை கண்ட நேரத்தில் காதல் கொண்டேன் என பாடல் வரி எழுதி இயக்குநரிடம் கொடுத்தேன். அதைப்படித்துப் பார்த்த இயக்குநர்... சார், பாடல் ரொம்ப இலக்கிய நயமாக உள்ளது என்றார். உடனே நான், 'கண்டேன் கண்டேன் உன் கண்கள் கண்டேன்' என்பது இலக்கியமா... என்று கேட்டேன். உடனே அவர், ஆமாம், சார், ரொம்ப இலக்கியமா இருக்கு கொஞ்சம் டிரெண்டான பாடல் வேண்டும் என்று கேட்டார். யுகபாரதி பேச்சு: இதைக்கேட்டு கடுப்பாகி கோவத்தில் கண்டேன் கண்டேன் வார்த்தையை எடுத்துவிட்டு 'அய்யோ அய்யோனு எழுதிக் கொடுத்தேன். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அந்த பாடலை கேட்டு பாருங்கள், 'அய்யோ அய்யோ உன் கண்கள் அயய்யோ' என எழுதிக் கொடுத்தேன். இதைப் பார்த்த இயக்குநர், சார் பாடல் செம ட்ரெண்டாக இருக்கிறது என்றார். இதைவிட பெரிய நகைச்சுவை என்னவென்றால், அந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி விட்டது. அப்போது இயக்குநர் என்னிடம், நான் சொல்லும் போது நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளவே இல்லையே, இப்போது பாடல் எப்படி வெற்றி பெற்று இருக்கு என்று பார்த்தீர்களா என்றார்.எழுதிய பாடல்: இதற்கிடையில் நான் எழுதிய, கண்டேன் கண்டேன் பாடலை, விஜய் நடித்த, மதுர என்ற திரைப்படத்திற்கு கொடுத்து விட்டேன். அதிலும் அந்த பாடல் வெற்றி பெற்றது. மொழியின் செழுமை என்பது, நாம் அதை என்ன மாதிரியாக கையாளுகிறோம். அதை நாம் எப்படி பிரயோகிக்கிறோம் என்பதை பொறுத்துத்தான் இருக்கிறதே தவிர, இலக்கியம் என்பது நம் உள்ளத்தில் தான் இருக்கும் என்று யுகபாரதி பேசி உள்ளார்.

    பதிலளிநீக்கு